சில பெருந்தகைகள் நேற்றுவரை முழுப் பூசணிக்காயை சோற்றிலே
மறைத்தார்கள் !! இன்று அந்த பூசணிக்
காய்தான் இனி உங்கள் சோறு !! என முஸ்லீம் உம்மாவை எச்சரித்து
களமிறங்கியது மட்டுமல்லாமல்
தட்டிக்கேட்க நினைப்பவர்களை ஜாஹிலீயத்தில் (அறிவிலிகள் )
இருப்பவர்கள் என கூறி தமது வழமையான
முல்லா தனத்தின் முன் முக்காடிட்டு அடங்கி பேசும் படியும்
கர்ஜிக்கிரார்கள் . இது அறிந்து அடிவருடும்
இவர்கள் ஆதரவாளர்களுக்கோ பெரும் கொண்டாட்டம் தான் .ஆனால்
திண்டாட்டம் என்னவோ வழமை
போலவே பாமரத்துவமான முஸ்லீம் உம்மாவிட்கே . கீழே வரும்
கன்றாவியையும் சற்று பாருங்களேன் .
இனி உங்களுக்கு' அல் குர் ஆன்' பழைய ஏற்பாடு !! யூ .எஸ் போலிசி
தருகிறது இந்த புதிய ஏற்பாடு !!
பழையதை நீங்கள் விசுவாசிக்க தடையில்லை . ஆனால் புதியதை தான்
பின்பற்ற வேண்டும் என இந்த
'முல்லா நம்பர் வன்' தனது பத்துவாக் குண்டுகளை ஏவத்
தொடங்கியுள்ளது .