Sunday, March 30, 2014

சே குவாரா முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தால் எவ்வாறு பயன்படுத்தப் படுகிறான் !?


 (இன்று பல முஸ்லீம் இளைஞ்சர்கள் புரிந்தும் புரியாமல் இந்த சே குவரா என்ற கம்பியூனிச புரட்சியாளனின் புகைப்படத்தை தமது 3 வீலர்களில் அலங்காரமாக்கி யுள்ளனர் . புரட்சி என்றவுடன் சே யும் கியூபாவும் பொலிவியாவும் பலரால் உணரப்படுவது போல அல்லாஹ்வின் தூதரும் (ஸல் ) மதீனாவும் முஸ் அப் இப்னு உமைரும் (ரலி ) நினைவுக்கு வருவதில்லை .இந்தக் கவலை ஒருபுறம் இருக்கின்றது .

இலங்கையில் முடிந்தது 'திமோகிரசி டிராமா' !

 
  கண்றாவி அரசியலின் கண்துடைப்பு முடிவுகள் சர்வாதிகாரத்தை சவக்குழி அனுப்பியதா !? இந்த பித்தலாட்டத்தை நம்பி போலிகளால் முஸ்லீம் உம்மத்துக்கு வேலியிடத் துடிக்கும் புத்தி ஜீவிகள் ! சிந்திக்க வேண்டும்.

Saturday, March 29, 2014

ஜனநாயகம் என்றால் என்ன?


    எடுத்த எடுப்பில் அதன் உண்மை முகத்தை இலகுவாக புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சூக்குமமான ஒன்றாகவே உள்ளது. திரிந்து போன நிலையில், கற்பனையான போலியான பகட்டுத்தனத்தில் இது மிதக்கின்றது. பொதுவாக மனிதனின் உரிமை சார்ந்த ஒன்றாக புரிந்து கொள்வது நிகழ்கின்றது. ஆனால் அந்த உரிமை என்பது சூக்குமமாகிவிடுகின்றது. ஜனநாயகத்தின் அடிப்படையே சமூகத்துக்கு எதிரானதும், தனிமனிதனின் குறுகிய நலன்களுக்கும் உட்பட்டதே.

ஜனநாயகம் அதன் முகமூடி கிழியட்டும் !

                                                                                     
   தமது வாழ்வியலுக்கான வழிமுறைகளை பெரும்பான்மை எனும் பிரமாண்டமான மக்கள் தொகையின் உருவத்தில் சட்டங்களையும் , யாப்புகளையும் மக்களே உருவாக்கி (அல்லது கிடைப்பதை அங்கீகரித்து )அதே பிரமாண்டமான வாக்குத் தெரிவின் அடிப்படையில் மக்களே தீர்மானிக்கும் அதிகாரிகளிடம் அவர்கள் தீர்மானித்த சட்டங்களையும் , யாப்புகளையும் தம்மை நோக்கியே பிரயோகிக்கும் அதிகாரத்தை கொடுப்பதே ஜனநாயகமாகும் .

இஸ்லாமிய இயக்கங்கள் எங்கே செல்கின்றன !!?

 
அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) கூறியுள்ளார்கள் .
"நிச்சயமாக எனது சமூகத்தின் மீது நான் பயப்படுவதெல்லாம் வழி கெடுக்கும் தலைவர்களைப் பற்றியேயாகும்."
அபூதாவூத்4252

      சம்பிரதாய பூர்வமான சில ஏற்பாடுகளோடு சூழலின் ஆதிக்க அதிகாரத்தை அங்கீகரித்த ஒரு வாழ்வின் மீது முஸ்லீம் உம்மத் இன்று பழக்கப்பட்டுள்ளது . அதாவது முஸ்லீம் உம்மாவின் தெளிவான இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசியல் பார்வை முற்றாக கைவிடப்பட்டு குப்ரோடு ஒன்றிய வாழ்வுக்கான அரசியல் களம் இஸ்லாமிய இயக்கங்களால் முன் மொழியப்படும் அளவுக்கு சூழ்நிலை மோசமாகியுள்ளது .

Friday, March 28, 2014

விலை பேசப்பட்ட விடுதலையின் உண்மை புரிந்ததால் இவன் ஒரு சுதந்திரப் போராளி .

                                                                                       
(குப்ரிய சிந்தனா வாத போராட்டத்தில் தன்னை இணைத்து தவறு புரிந்தபோது ,மர்மமான முறையில் கொல்லப்பட்ட ஒரு முஸ்லீமின் உண்மைக் கதை .இது காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு .)

     நான் சொல்லப்போவது அல்லாமா இக்பாலை பற்றியது அல்லதான் ஆனால் இந்த சமூகத்தினதும் மனித நேயத்தினதும் உணர்வுகளின் பங்காளிகளாய் மாறி சரியானதை தேடி பிழையான வழிமுறை மூலம் தனது உயிரை அர்ப்பணிக்க களமிறங்கிய ஒரு இளைஞனை பற்றியதே . சமூக நேசமும் ,நியாயத்தின் தேடலும் இவனிடம் இருந்தது என்பதை என்னால் கூறமுடியுமே தவிர இறைவனிடத்தில் இவனின் நிலை பற்றி என்னால் எதுவும் கூற முடியாது .

Thursday, March 27, 2014

தேர்தல் திருவிழாவும் தேர் இழுக்கும் முஸ்லீம்களும் !!

 
   நேற்றுவரை குன்றும் குழியுமாக இருந்த வீதிகளுக்கு திடீரென கற்கள் கொட்டப் படுகின்றது !செப்பனிட போகிறார்களாம் . ஆளும் அதிகாரத்தின் பாசப்பார்வையில் பக்காவான சுயநலம் .இது தேர்தல் காலம் அல்லவா ! வாக்கு வேட்டைக்காகாக நடத்தும் நாடக அரசியல் அது .

ஒரு உறையில் பல வாள்கள் !! 'பைஅத்' சாத்தியமா !?



          கிலாபா எனும் இறைவன் வகுத்து தந்த அதிகார அரசியலுக்கு கட்டுப்படுவதும் ,அதன் ஏகோபித்த தலைவரான கலீபாவிட்கு ('பைஅத்'  )உறுதிப்பிரமாணம் கொடுப்பதும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அடிப்படைக் கடமையாகும் . இந்த 'பைஅத்' தொடர்பாக வரும் ஆதார பூர்வமான நபி மொழிகள் பிரகாரம் இந்த விடயம் அகீதா சார்ந்ததாகும் .

Wednesday, March 19, 2014

செச்னியாவின் (கவ்கஸ் எமிரேட்) அமீர் Dokku Abu Usman (Dokku Umarov) மரணம் !


      செச்னியாவின் விடுதலைக்காக ஆகுதியானவர்கள் ஏராளம். ஜெனரல் டுடாயேவ், கொமாண்டர் அஸ்லன் மஸ்கடோவ், கொமாண்டர் கத்தாப் , கொமாண்டர் ஸமீல் பஸய்யேவ், அமீர் அப்துல் கலீம் சதுலாயேவ்... என தங்கள் இரத்தங்களால் இஸ்லாமிய வீர சரித்திரத்திற்கு வர்ணம் பூசியவர்கள் ஏராளம். அந்த வரிசையில் கவ்கஸ்ஸின் சிங்கம் கொமாண்டர் Emir Dokku Abu Usman (Dokku Umarov ) அவர்கள் தன்னையும் இணைத்து கொண்டார்கள். இவரது மரணத்தை கவ்கஸ் இஸ்லாமிக் எமிரேட் உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களிற்கு எதிராக தீரமுடன் போராடியவர். பல தாக்குதல்களை வெற்றிகரமாக முன்னின்று நடாத்தியவர். சோவியத் மீடியாக்கள் இவரை “ரஷ்யன் பின்-லேடன்” என்றே வர்ணிக்கும்.

Monday, March 17, 2014

முஸ்லீம் மரணத்தை வென்றவன் !


     யாசிர் (ரலி ) ஒரு குற்றவாளியைப் போல் அந்த தான் தோன்றி குரைசிக் குப்பார்களால் இழுத்து வரப்படுகிறார் .அவர் அந்த கொடூரிகளுக்கு எதிராக வாள் ஏந்தவில்லை, குறைந்தது ஒரு அட்டைக்கத்தியாவது வைத்திருக்கவில்லை .அப்படியானால் ஏன் !? அவர் சுமந்த... இல்லை இல்லை அந்த இலட்சியமாகவே மாறிப்போன இஸ்லாம் மட்டும்தான் அவரிடம் இருந்தது .அவர் செய்த ஒரே குற்றம் அதுதான் .

சிரியாவில் பல இடங்களிலும் மூண்டுள்ள சமர்களங்கள்

Jaish al Muhjireen wal-Ansar-ன் கட்டுப்பாட்டு பிரதேசங்களை குறிவைக்கும் சிரிய இராணுவம்


  சிரியாவின் அலிபோ மாகாணத்தில் பஸர் அல்-அஸாதின் படைகளிற்கும் போராளிகளிற்கும் இடையில் மீண்டும் உக்கிரகமான சண்டைகள் மூண்டுள்ளன. பல இடங்களிலும் சண்டைகள் நடைபெறுவதுடன் மேலதிக போராளிகள் சண்டைக்களங்கள் நோக்கி அனுப்பப்படுகின்றனர். இரு தரப்பினரும் பரஸ்பரம் எதிரி பதுங்குகுழிகளை தகர்த்தழித்தவாறு முன்னேறும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். சற்று முன் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் முன்னரங்க பதுங்கு குழிகளை கைப்பற்றும் நோக்குடன் சிரிய இராணுவ பரா துருப்பினர் கெமிக்கல் வெப்பன்களை உபயோகித்துள்ளதாக தெரிய வருகிறது. இதனால் பல முனைகளில் முன்னிலை பாதுகாப்பு அரண்களை விட்டு போராளிகள் பின்வாங்கியுள்ளனர். toxic ரக கெமிக்கல்களினை சிரிய இராணுவம் உபயோகித்துள்ளது. 

Sunday, March 16, 2014

மத்திய ஆபிரிக்க இன அழிப்பு ... சில அடிப்படை உண்மைகள் .

       தன்னிறைவையும் ,தமக்கு நிகரான வல்லாதிக்க தரத்தையும் எதிர்வு கூறக்கூடிய அரசியல் சூழலையும் ,அதன் பலத்தையும் தயவு தாட்சண்யம் இன்றி அழிப்பதும், கட்டுப்படுத்துவதும் கிறிஸ்தவ ஏகாதிபத்திய மேற்குலகின் அடிப்படை 'அஜண்டா' வாகும். இப்போது இந்த வரிசையில்
'மத்திய ஆபிரிக்க குடியரசின் முஸ்லீம் இன அழிப்பின் அடிப்படை அரசியல் இதற்கு நல்ல உதாரணம் ஆகியுள்ளது .

Saturday, March 15, 2014

கிறிஸ்தவ இராணுவம் மத்திய ஆபிரிக்க குடியரசில் வாழும் முஸ்லிம்களை இனசுத்திகரிப்புச் செய்கிறது...!

     19 ஆம் நூற்றாண.டில் வியாபார நோக்கமாக வந்த மத்திய ஆபிரிக்க குடியரசு முஸ்லிம்கள் அங்குள்ள மக்கள் சனத்தொகையில் 15 வீதமானவர்களாக இருந்தார்கள. இவர்ன இன்று இனசுத்திகரிப்புக்குட்பட்டுள்ளார்கள். அறிக்கையின் படி தலை நகரான பாங்கியில் சுமார் 130000 தொடக்கம் 145000 முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் இவர்களின் தொகை ஒரு வாரத்திற்குள் 10000 மாக கடந்த டிசம்பர் மதாம் மாறியுள்ளது. 

ஒரு பெண்ணின் மனதை தொட்டு .....

         ஒரு ஹவ்வா (அலை ) யின் புத்திரி பேசுகிறாள்......
        கிடைக்கும் இடைவெளியில் புகுந்து என் அங்கத்தை அனுமதியின்றி அளவிட்டு , அற்ப சுகம் காணும் ஆணிய  அசிங்கப் பிறவிகளுக்கு மத்தியில் நானும் ஒரு மனிதப் பிறவியாக வளம் வரும்போது வெட்கித்துப் போகிறேன் .

Friday, March 14, 2014

சிரிய கிறிஸ்தவர்கள் மீதான ஜிஸ்யாவும் அபூ கதாதாவும்!

        சிரியாவில் போராடும் அணிகளுல் அபூபக்கர் அல்-பக்தாதியின் Islamic State of Iraq and Levant (ISIS) அணியானது பலம் வாய்ந்தது. உலகின் பல பகுதிகளில் இருந்தும் இஸ்லாமிய போராளிகள் இதில் இணைந்து வருகின்றனர். சிரியா, ஈராக், ஜோர்தான் பழங்குடியினத்தவர்கள் இதன் தலைவரிற்கு பைஅத் எனும் உறுதிப்பிரமாணத்தை நிறைவேற்றி வருகின்றனர். இவரின் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படாத அணிகளை சிரிய சமர்க்களத்தில் இருந்து அகன்று விடுமாறு இவரது அணி கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் இவர்களால் ரக்கா நகர் பிரதேசம் கைப்பற்றப்பட்டது. அங்கு அவர்கள் இஸ்லாமிய அஷ்-ஷரீஆ சட்டத்தை பிரகடனம் செய்துள்ளதுடன் பூரணமாக அதனை அமுல்படுத்தவும் முனைந்துள்ளனர். பிரச்சனை அதுவல்ல. அங்கு வாழும் கிறிஸ்தவர்கள் மீது ஜிஸ்யா எனும் வரியை விதித்துள்ளனர். கட்டாயமாக அவர்கள் அதனை செலுத்த வேண்டும் என்பது அவர்களது உத்தரவு

Sunday, March 9, 2014

ஹமாஸிற்கு வழங்கப்படவிருந்த M302 ஏவுகணைகள் கொண்ட கடற்கலத்தை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது ! - உண்மையா? அல்லது நாடகமா?

Israeli naval commandos inspecting wooden carts containing Syrian made M-302 rockets loaded on the KLOS-C at the Iranian port of Bandar Abbas. the rockets were later covered with another cargo of cement, loaded at the Iraqi port of Um Qasr. The destination of the cargo was Port Sudan in the Red Sea. Photo: IDF

     Klos C என்ற கப்பல் பனாமா நாட்டு கொடியுடன் சென்று கொண்டிருந்த வேளையில் செங்கடலில் (Red Sea), சூடான் நாட்டுக்கும் எரித்ரியாவுக்கும் இடையே வைத்து இஸ்ரேலிய ரோந்து சுப்பர் டோரா பீரங்கி படகுகள் தடுத்து நிறுத்தி அதனை இஸ்ரேலிய துறைமுகம் நோக்கி பலவந்தமாக திசை திருப்பியுள்ளன. இந்த கப்பலினுள் நுழைந்த 13 இஸ்ரேலிய மரைன் கொமாண்டோ வீரர்கள் மேற்கொண்ட தேடுதலில் அங்கு பல வகையான ஏவுகணைகள் சிப்பம் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. “இந்த ஏவுகணைகள், காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத  இயக்கத்துக்காக ஈரானால் அனுப்பப்பட்டவை” என்கிறார், இஸ்ரேலிய கடற்படை செய்தித் தொடர்பாளர், லெப். கர்னல் பீட்டர் லெர்னர். இவை “சிரியா தயாரிப்பு, தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் ரொக்கெட்டுகள் (Syrian-manufactured surface-to-surface rockets) . அதி தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Saturday, March 8, 2014

இமாமுல் முஜாஹிதீனின் வைரம் பதித்த சத்திய வார்த்தைகள் ....!




    மேற்குலகும் அமெரிக்காவும் வெள்ளை உடை தரித்த ஆடு ஆறுக்கும் மனிதரைப் போன்றவர்கள். உயிர் பிரியும் வேளையில் துடிக்கும் ஆட்டைக் கண்டு அதை முரட்டுத்தனமானது எனக் கூறுவர். அதைப்போல வெள்ளை உடை தரித்து உலகில் வலம் வரும் அவர்கள் நம்மைக் கொலை செய்யும் பொழுது நம்முடைய உடல் துடித்தால், கை கால்களை அசைத்தால் நாம் முரடர்கள், வன்முறையாளர்கள்!

உண்மை பேசும் அமைச்சர்கள் !

    இலங்கையின் மேல் மாகாணத்தில் மாகாண சபை தேர்தலுக்கான களம் இப்போது சூடு பிடித்துள்ளது . துப்புக் கெட்ட சித்தாந்தத்தின் கீழ் இருந்து தூய்மை கெட்ட அரசியல் புரியும் சுயநலமிகளை நம்பி ஏமாறும் மக்களும் எதிர்வரும் 29 ம் திகதியை ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள் .தமது வாக்குகளை பாவித்து இருக்கும் சுமை போதாமல் இன்னும் பரிதாபத்தை எதிர்காலத்தில் தலையில் சுமக்க தயாரான நிலையில் இருக்கிறார்கள் .

Friday, March 7, 2014

'பிக்ஹுள் அகல்லியாத்' அமுதமா விஷமா!?


         இஸ்லாம் என்ற அரபுச் சொல்லுக்கு கட்டுப்படுதல் என்ற பொருளும் உண்டு . அதே போல முஸ்லிம் என்ற சொல்லுக்கு கட்டுப்படுபவன் என்ற பொருளும் உண்டு . அதாவது இறைவனுக்கு முற்று முழுதாக கட்டுப்படும் வாழ்வியல் ஒழுங்கு எனும் தெளிவான அரசியலில் இருந்தே முஸ்லிம் என்ற சொல்லின் சரியான அர்த்தம் நிரூபிக்கப்படுகிறது.இந்த நிலையில் சுதந்திரமான இஸ்லாமிய அமுல்படுத்தல் நோக்கிய போராட்ட ஒழுங்கே அவனது ஒரே தெரிவாகவும் பாதையாகவும் மாறிவிடுகிறது

Tuesday, March 4, 2014

இது சிரியாவின் முகவரியில் இருந்து உலக முஸ்லீம் உம்மாவின் உள்ளத்தை நோக்கி……


 

மரத்துப் போன மனதில் இருந்து 
விறைத்துப்போன விரலுக்கு 
வரும் வாத்தைகள் இந்த 'உம்மாவின்'
சோகங்களால் கண்ணீர் வடிப்பினும் 
மீண்டும் இஸ்லாம் சக்தியாய் மாறி 
கிலாபாத்தின் கேடயத்தில் 
விடுதலைக்கதவுகளை
தட்டித்திறக்கும் நாள் வெகுதூரமில்லை.

Monday, March 3, 2014

சிரியா சில உண்மைகள்....

         'பேஸ் புக்' தொடர்பாடலில் ஈடு பட்டார் என்ற குற்றச் சாட்டின் பெயரில் ,சிரியாவில் ஒரு பெண் ஷரீஆ நீதிமன்றில் நிறுத்தப்பட்டு குற்றம் நிரூபிக்க பட்ட நிலையில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப் பட்டார் ! எனும் தகவல் ஒன்று ஊடகங்கள் மூலம் பரப்பப் படுவதாக ஒரு சகோதரர் எம்மிடம் விளக்கம் கேட்டு இருந்தார் . சிரியப் போராட்டத்தையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் இந்த தகவல் தொடர்பில் விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளோம் .

Sunday, March 2, 2014

பத்துவா பீரங்கிகளின் வைரஸ் குண்டுகள்! முஸ்லீம் உம்மாவே எச்சரிக்கை !


                                  
       கிலாபா அது வீழ்த்தப்பட்ட பின் அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது !
மீண்டும் அதை கட்டி எழுப்ப சில மனிதர்கள் இயக்க கட்டமைப்போடு
எழுந்த வரலாறு 1924 ம் ஆண்டுகளின் பின் தொடங்கியது ! சில
இயக்கங்கள் மக்கள் மத்தியில் செல்வாகுப்பெற்றன .ஆனால் இலக்கை
மிகச்சரியாக வரையறுத்தவர்கள் அதன் பாதையினை சுன்னாவிலிருந்து
வரையறுக்கவில்லை ! விளைவு இலக்கை அடைய எதையும் பயன்
படுத்தலாம் என்ற தவறான முன்மாதிரி இஸ்லாத்தின் அரசியல்
என்ற நிலைக்கு முஸ்லிம் உம்மா சிந்திக்கவைக்கப்பட்டது .துருக்கி ,எகிப்து
போன்ற நாடுகளில் இத்தகு இஸ்லாமிய இயக்கங்களால் அரசியல் அதிகாரம்
கைப்பற்றப்பட்டது இத்தகு நிலைப்பாட்டால் தான்.