Tuesday, September 30, 2014

சவூதியில் 'அய்யாமுத் தஸ் ரீக்' இலங்கையில் அரபா நோன்பு !?

(நபியே !தேய்ந்து ,வளரும்)பிறைகளை பற்றிஉம்மிடம் கேட்கிறார்கள்;அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்கு
காலம் காட்டியாகவும் ,ஹஜ்ஜை அறிவிக்கக் கூடியதாகவும்
இருக்கின்றது. (சூரா அல் பகரா :வசனம் 189)
   நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் ,அல்லாஹ்வின் பதிவுப்
புத்தகத்தில் வானங்களையும் ,பூமியையும் படைத்த நாளில்
இருந்து மாதங்களின் எண்ணிக்கை 12 ஆகும் அதில் (துள்
கஹதாஹ்,துள் ஹஜ் ,முஹர்ரம் ,ரஜப் ) ஆகிய நான்கு
மாதங்கள் புனிதமானவை ஆகும் .
                                 (சூரா அத் தௌபா :வசனம் 36)  
அவன்தான் சூரியனை (சுடர்விடும்) பிரகாசமாயும் சந்திரனை
பிரகாசிக்கும் ஒளி உள்ளதாகவும் ஆக்கினான்.ஆண்டுகளின்
எண்ணிக்கையையும் ,காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து
கொள்ளும் பொருட்டு (சந்திரனாகிய )அதற்கு மாறி மாறி வரும்
பல படித்தரங்களை உண்டாக்கினான் ;அல்லாஹ் உண்மை(யாகதக்க காரணம் )கொண்டல்லாது இவற்றைபடைக்கவில்லைஅவன்
இவ்வாறு அறிவுள்ள மக்களுக்கு தன் அத்தாட்சிகளை விவரிக்கிறான்
                                   (சூரா அல் யூனுஸ் :வசனம் 5)

Friday, September 26, 2014

அமெரிக்க Tomahawk ஏவுகணைகளும், அராபிய விமானங்களும் சிரியாவில் என்ன செய்துள்ளன?


       செப்டம்பர் 23 அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் தங்கள் முதலாவது தாக்குதலை சிரியாவின் ரக்கா, அலிபோவின் புறநகர் பகுதி, இட்லிப்பின் சில பகுதிகள் மீது மேற்கொண்டன. இவர்களின் இந்த இஸ்லாமிய அரசிற்கு (IS) எதிரான தாக்குதலில் முதல் பலியானது ஒரு தாயும் அவளது குழந்தையும். நேற்றைய தாக்குதலில் மட்டும் 120 முஸ்லி்ம்கள் பலியெடுக்கப்பட்டுள்ளனர். 300 இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் 5 வீகிதம் கூட I.S.போராளிகளா என்றால் இல்லை என்பதே பதிலாகும். சாதாரண சிவிலியன்களே பலியாகியுள்ளனர். அமெரிக்கா மேற்கொள்ளும் “இஸ்லாமிய அரசிற்கு எதிரான யுத்தத்தின்” கசுவாலிட்டி கவுன்டிங் ரிப்போட் இது. 

அமெரிக்க ஐ .எஸ் யுத்தமும் துருக்கியின் அந்தர் பெல்டியும்...!!

  
              ஐ .எஸ் இற்கு எதிரான அமெரிக்க கூட்டு தாக்குதலில் தான் பங்களிக்கப் போவதில்லை என துருக்கியின் அர்தூர்கான் அரசு தெரிவித்துள்ளது .இது சற்று நிதானமாக அலசவேண்டிய அரசியல் .கமால் பாட்சாவின் கிலாபா கவிழ்ப்பு துரோகத்துக்கு பின்னர் முதலாளித்துவ மேற்குலகின் விசுவாசம் மிக்க பொக்கட் பப்பியாகவே துருக்கி செயற்பட்டுள்ளது .இப்போது என்ன நடந்தது இந்த உஞ்சுக்கு!? அர்தூர்கானின் இஸ்லாமிய விழிப்புணர்வு வேலை செய்துள்ளதா !? அதுதான் இல்லை .

ஐ .எஸ் மீதான தாக்குதல் சொல்லும் செய்தி என்ன !?

         

    முஸ்லீம்களின் வளத்தையும் ,நிலத்தையும் தமது காலனித்துவ விதிக்குள் மீண்டும் முடக்குவதற்கான குப்ரிய முதலாளித்துவ யுத்தம் தொடங்கி விட்டது . ஐ .எஸ் என்ற காரண முகமூடியோடு அத்திவாரம் போடப்பட்ட எண்ணை கொள்ளையர்கள் மீண்டும் அதே கொலைகார நியாயங்களோடு கூட்டாக களம் இறங்கியுள்ளார்கள் .

Friday, September 19, 2014

ஜிஹாத்தின் பெயரில் நடாத்தப்படும் சகோதரப்படுகொலைகள் - இஸ்லாம் சொல்லாத போராட்டங்கள்.


“ஜிஹாத்” எனும் இறைவழியில் செய்யும் அறப்போர் பற்றி மௌலானா மௌதூதி முதல் ஷேய்ஹ் அன்வர் அல்-அவ்லாக்கி வரை பலரும் பேசியுள்ளனர். அதன் உள்ளடக்கங்கள், வரையறைகள், நோக்கங்கள், தெளிவுகள் என பல கோணங்களிலும் பல அறிஞர்களாலும் இவை பேசப்பட்டுள்ளன. ஆனால் அதே ஜிஹாத் எனும் அறப்போரின் பெயரை தங்கள் அரசியல், இராணுவ இலக்குகளை அடைந்து கொள்ள பல மாபியாக்களும் பயன்படுத்துவது கவலையளிக்கும் விடயமாகும். ஆப்கானில் ரஷ்ய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக நடந்த போரில் இதே ஜிஹாத்தின் பேரால் பல சகோதரப் படுகொலைகள் தாராளமாக நடாத்தப்பட்டிருந்தன். காஷ்மீரும் இதற்கு விதிவிலக்கல்ல. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யின் மேஷனரியாக பல குழுக்கள் உயிர் படுகொலைகளை நிகழ்த்தியுள்ளனர். அந்த தொடர்ச்சியில் சிரியாவிலும் சகோதரப் படுகொலைகள் ஏராளம் தாராளமாகவே நிகழ்த்தப்பட்டு வருகின்றன. 

ரைபிள் ,மகசின் ,கொகிங் காண்டில் ,பிஸ்டல் கிரிப் ,ரிகர் அல்லாஹு அக்பர் ஒருபார்வை ....

   இலக்கு அதை அடைவதற்கான பாதைகளை நியாயப்படுத்தும் என்பது குப்ர் கற்றுத்தரும் அரசியல் மொழி .குறிப்பாக கம்யூனிசம் இந்த பாடத்தை அடிப்படை ஆக்கியது .அந்தவகையில் வன்முறை மற்றும் பலாத்காரத்தை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றுதல் ,ஆட்சி செய்தல் இவர்கள் பார்வையில் சரியானது .இங்கு சித்தாந்த மாற்றம் என்ற நோக்கில் சில செயல்களை அடிப்படை மனித விழுமியங்களை தாண்டி பிரயோகிப்பதை இவர்கள் சரிகாண்பார்கள்.

சிரியாவில் “அஹ்ரார் அஷ்-ஷாமும்”, “அல்-காயிதாவும்” தம் தளபதிகளை இழந்தது - தாக்குதலின் பின்னணியில் I.S.I.S. ??



     ஒரு குண்டு வெடிப்பில் எல்லாமே நடந்து முடிந்து விட்டது. இட்லிப்பில் நடந்த குண்டு தாக்குதலில் இஸ்லாமிக் புரன்டின் முதன் நிலை தலைவர்கள் 28 பேர் மரணித்து விட்டனர். இது இஸ்லாமிக் புரன்டிற்கு ஒரு பெரிய இழப்பு. அஹ்ரார் அல்-ஷாமின் தலைவரும் Hassan Abboud இதில் பலியாகியுள்ளார். இஸ்லாமிக் புரன்டின் பொலிடிக்கல் லீடராகவும் இவர் செயற்பட்டிருந்தார்.அடுத்தவர் Abu Khalid al-Suri (Mohammed al-Bahaiya). முக்கியமான தலை. அல்-காயிதாவின் தலைவர் அய்மன் அல்-ஸவாஹிரியினால் சிரியாவிற்கான பிரதிநிதியாக நியமனம் செய்ய்ப்பட்டவர். இவரும் இந்த குண்டு வெடிப்பில் பலியாகியுள்ளார்.

இலங்கை அதிபரின் இராஜதந்திரமும் சீன மயமாகும் இலங்கையும் !!


       சீன மக்கள் குடியரசு தலைவர் க்ஷீ ஜி்ங்பின் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இலங்கையின் வரலாற்றில் இதுவரை மேற்கொண்டிராத அபிவிருத்தித் திட்டமான துறைமுக நகர் எனும் கடலை நிரப்பி டுபாய் ஸ்டைலில் ஒரு நகரை உருவாக்கும் மெகா திட்டத்தை சைனா ஹாபர் என்ஜினியரிங் கட்டிக்கொடுக்க முன்வந்துள்ளது. இலங்கை அரசு மேற்கொண்ட பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை, அதன் பின் அது முன்னெடுத்துள்ள அரசியல் தீர்வுகள் என அனைத்தையும் சீனத் தலைவர் பாராட்டியுள்ளார். பரஸ்பரம் சீன இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பினை புதிய லெவலில் நடைமுறைப்படுத்துவது குறித்தும் இணக்கம் காணப்பட்டுள்ளது. எல்லாம் சரி தான். இலங்கை அரச அதிபர் இதில் மிகச் சாணாக்கியமாக காய் நகர்த்தியுள்ளமையானது அவரது இராஜதந்திரத்தை நிரூபணம் செய்துள்ளது. 

Thursday, September 18, 2014

'ஜம்மியத்துல் உலமாவின்' 75 இலட்சமும் இலங்கை அரசியலின் போக்கும் !

                                        முதலாளித்துவ முதலைகளின் முதலீடுகளுக்காக பரந்த 
அடிப்படையில் திறந்து விடப்பட்ட சந்தையாக இலங்கை இப்போது மாறிக்கொண்டு இருக்கிறது .அவர்களுக்கு சேவகம் புரியும் ஊழியர் தரத்தில் சிவிலியன் வாழ்வு சிக்கவைக்கப்பட்டுள்ளது .தாய்வானை போன்ற ஒரு செயற்கையான உல்லாச புரியாக சடுதியாக இலங்கை மாறினாலும் ஆச்சரியம் இல்லை .ஒரு சில நேரம் ஆசியாவின் அற்புதமாக இலங்கை மாறும் என்ற ஜனாதிபதியின் கூற்றின் இரகசியம் அதுவாக கூட இருக்கலாம் . 

இலங்கையிலும் அபிவிருத்தியாமே !?

      யாவும் போலி எல்லாம் பித்தலாட்டம் என்பது முதலாளித்துவம் சொல்லி நிற்கும் ஒரே தெளிவான அரசியலாகும் .ஆளும் கட்சி எதிர்க்கட்சி பாராளுமன்றம் ,பெரும்பான்மை ,சிறுபான்மை இப்படியான எல்லாமே வெறும் பெயரளவுப் பெறுமானங்களே ஆகும். மக்களாகிய நாம் ஏமாளிகளாக இருப்பதால் ஏமாற்றப் படுகிறோம் ;என்பது மட்டுமே உண்மையாகும் .

    பொதுவாக மக்களுக்கு நன்மை செய்தல் என்பதே அரசியல் அதிகாரத்தின் அடிப்படை நோக்கம் .ஆனால் இன்று அது சில மேட்டுக்குடி முதலாளிகளின் நன்மைக்காக மக்கள் என்பதாக அது மாற்றப்பட்டுள்ளது .

Friday, September 12, 2014

இஸ்லாமிய எழுச்சியின் இயங்கு திசையில் ............

        இஸ்லாமிய தேசம் இஸ்லாத்தின் கீழ் வாழ்வு தொடர்பில் அடிப்படை தெளிவையும் அடையும் பாதை பற்றிய சுன்னா பற்றியும் மிகத் தவறாகவே சிந்திக்கப்படுகிறது ,சித்தரிக்கப்படுகிறது .பாமரத்துவமாக முஸ்லீம் சமூகமும் மதப் புரோகிதமாக தனிமனித வழிபாடும் இருக்கும் வரை இந்த தவறுகளை தவிர்க்க முடியாது .சில ஆரம்ப இலக்குகளை கூட அடைய முடியாது .

மேற்குலகு முஸ்லீம்களை மொழியைச் சொல்லும் மூன்று ஆபத்தான கலிமாக்கள் !

    1924 களில் இஸ்லாமிய கிலாபா சாம்ராஜ்யம் துருக்கியில் வீழ்த்தப்பட்ட போது அதன் விளைவுகள் முஸ்லீம் உம்மத்துக்கு எத்தைகைய பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது ? என்ற அரசியல் பார்வை மிகத் தெளிவாக உம்மத்துக்கு இருக்கவில்லை .தலைவர்கள் முதல் பாமரர்கள் வரை சிந்தனை வீழ்ச்சியில் இருந்தனர் .அந்த சிந்தனை வீழ்ச்சி என்பது குப்ரிய சித்தாந்த கவர்ச்சியில் இருந்து வாழ்வை நோக்கும் அகீதா புரள்வு அரசியலே ஆகும் .

Thursday, September 11, 2014

மதச் சார்பின்மை மார்க்க ஆதாரத்தோடு 'பராக் பராக் ' !! முஸ்லீம்களே ஏற்க தயாரா ?(மறு பதிவு )

         இன்றைய ஜாஹிலீய  மேலாதிக்க உலகு,  முஸ்லீம்கள் விடயத்தில் இறைவனோடு நேரடி தொடர்புள்ள அழுத்தமான ஆன்மீக தொடர்பு பற்றியோ , இபாதாக்கள் பற்றியோ அச்சம் கொள்ளவில்லை . மாறாக அது  அச்சம் கொள்வதெல்லாம் ஒரு முஸ்லீம் வாழ்க்கையையே வணக்கமாக்கி தனது(அரசியல் ,பொருளியல் ,சமூகவியல் ,கலாச்சாரவியல், சிவில் கிரிமினல் சட்டவியல்  போன்ற ) எல்லா விடயங்களிலும் இஸ்லாத்தின் வழிகாட்டளின் கீழ் வாழ விரும்பும்  போதுதான் எவ்வித பாரபட்சமும் இன்றி தனது கடுமையான எதிர்ப்பை காட்டத் தொடங்கும் .

தெற்காசியாவில் 'அல்கைதாவாம்' !ஏன் இந்த பீடிகை அரசியல் !?

      இஸ்லாமிய அடிப்படை வாதம் ,இஸ்லாமிய தீவிரவாதம் ,இஸ்லாமிய பயங்கர வாதம் ! இத்தகு வார்த்தைகள் முதலாளித்துவ ஏகாதிபத்திய மீடியா ஆர்மியின் உயிர் கொல்லி ஆயுதங்கள் .முதலாளித்துவ அகீதாவை தக்க வைப்பதற்கான , நிகழ்கால யுத்தத்தில் இஸ்லாமிய அகீதாவுக்கு எதிரான சமூகக் கருத்தை தமக்கு சாதகமாக்க இதை அளவு கணக்கு இன்றி பாவிக்கிறார்கள்.

Sunday, September 7, 2014

இது சத்திய எழுச்சிக்கு ஆப்படிக்கும் குப்பாரின் மொழி !!!



'ஜாஹிலீய' சத்துருக்களின் அநாகரீக சதுரங்கத்தில் 
அலட்சியமான வெட்டுக்காயா நான் !
இன்று என் வீட்டு முற்றத்தில் என்னை வைத்தே 
'கபுறு' தோண்டி ஆரத்தழுவி முதுகில் குத்த 
' தாகூதிய' மேலாதிக்க அரசியல் கூட்டாய்
களத்திலே நிற்கிறதே !!!

குப்ரிய அரசியல் பொறியை புரிந்து கொள்வோமா!


     ஒவ்வொரு புரட்சிகளும் ,போராட்டங்களும் ஒரு மாற்றத்தை வேண்டியே நடத்தப் படுகின்றன .அந்த மாற்றம் நிகழ்கால வாழ்வியல் ,அதன் அடிப்படை இலக்கு , அதை அடைவதற்கான வழிமுறைகளுக்கு பாதகம் இல்லாத ,அல்லது அதில் சிற்சில மேலோட்டமான பகுதி மாற்றங்களை செய்வது எனும் போராட்டமாக அமைந்து விட்டால் அதை ஒரு சித்தாந்த மாற்றமாக கருத முடியாது ; மாறாக அது வெறும் உரிமைப் போராட்டமாகவே கருதப்பட முடியும் .

இப்போது எமக்குள்ள தேடல் மத்திய கிழக்கின் மக்கள் எழுச்சி அதன் பின் நிகழ்ந்த அரசியல் மாற்றம் தொடர்பில் எமது பார்வையும் ,ஏகாதிபத்திய முதலாளித்துவ சிந்தனா வாதத்தின் சதித் தனமான நடத்தை தொடர்பாகவும் ஒரு தெளிவை வரையறை செய்யும் நிலையில் ஒரு மயக்கம் ஏற்படுகிறது எனும் அளவுக்கு முரணான ,அல்லது ஜீரணிக்க முடியாத தகவல்கள் கிடைக்கின்றது ! அது ஏன் ? என்பதுதான் .

நவ காலனித்துவ ஏமாற்று அரசியலில் துருக்கியின் பாத்திரம் !


      இன்று சிலர் கிலாபா அரசு என்ற இஸ்லாத்தின் அரசியல் கோட்பாட்டை ஒரு அர்த்தமற்ற சாம்ராஜ்யக் கனவாக சித்தரிக்க நினைக்கின்றனர் . அல்லது அதன் அடிப்படையான யதார்த்த உருவத்தை சிதைத்த மாற்றீட்டு அரசியல் ஒன்று பற்றி பேசுகின்றனர் .இவ்வாறு பேசுபவர்கள் யூதர்களோ ,கிறிஸ்தவர்களோ அல்ல .மாறாக முஸ்லீம் உம்மத்தின் உதிரத்தில் உதித்த முஸ்லீம்கள் என்பது கவலைக்கிடமான விடயம் ஆகும் .

இஸ்லாமிய அடிப்படைவாதம் & இஸ்லாமிய பயங்கர வாதம் இலங்கையிலுமா !?


இது ஆதிக்க அரக்கர்களின் அராஜக மொழி !
முஸ்லீம் இரத்தம் குடிக்க கொடிய பொறி!
பூர்சுவா சந்தையில் என்றும் மலிவான சத்திய எதிர்ப்பு சதி !!
நேற்று ஒபாமா வரை உரித்த அதே வெங்காயத்தை 
பக்தியோடு வாங்கி அரசியல் சாக்கடை சாம்பாரை 
சுவையூட்ட நினைக்கிறார்கள் சில லோக்கல் பன்னாடைகள் !

இது முதலாளித்துவ புரஜக்டரில் காட்டப்படும் காசாவின் காட்சிகள்.....



தேசிய வலையில் சில்வண்டுகளாய் முஸ்லீம் உம்மத் !
அது வேங்கைகளை பூச்சிகள் ஆக்கிய மெகா மேஜிக் !
வீரத்தையும் எல்லைகளால் வளைத்துப் பிடித்தது !
சகோதரத்துவத்தையும் சந்தி சிரிக்க வைத்தது !
சாத்தானோடு சமரசம் பேசி சமபந்தியில் அமர வைத்தது !

இதுதான் திமிங்கிலம் போட்டு இறால் பிடிக்கும் சிஸ்டம் !!!


    சுரண்டலும் சுயநலமும் மிக்க முதலாளித்துவ ஆதிக்க
விதியில் அடிப்படை நியதி மனித குலத்தை அதன் சித்தாந்த
விழுமியங்களோடு சமரசப்படுத்துவதாகும். தனிநபர்
சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் போன்ற போலி வடிவங்களின்
பெயரில் முரண்பாட்டு அரசியலுக்கான ஒரு காட்சிப்படுத்தலை
அது காட்டி நின்றாலும் ,அது அதிகாரத்தை பேணுவதற்கான
பெயரளவு விடயங்களே ஆகும்.