Friday, October 31, 2014

அந்த அக்டோபர் முப்பது 1990 முதல் இன்றுவரை ! (மறந்த சுவடுகளை மீட்டிப்பார்க்கும் ஒரு முஸ்லீம் அகதி !)

    
       ஒரு அராஜஹத்தின் அசிங்கத் தீர்ப்பு ! மனிதம் மீறிய அடாவடி இறுமாப்பு !விடுதலைப் புலிகள் வடக்கில் வைத்த ஆப்பு ! அது முஸ்லீம் 
உம்மத்தின் வாழ்விட உரிமை பறிப்பு !அந்த அக்டோபர் முப்பது 1990 !

   தம்பியின் (பிரபாகரன் ) இயக்கம் 'தம்பிலா' என எம்மை வாஞ்சையோடு விளிப்பவர்களை அணைக்கச் சொன்னதா !?அநாதை தனத்தை உணர்த்தி உலகளாவிய உம்மத்தின் நிஜத்தோடு சேர்த்துப் பார்த்ததா!? 

Friday, October 24, 2014

ஹிஜ்ரி 1436 ! அல்ஹம்துலில்லாஹ் சொல்வதா !? இன்னாலில்லாஹ் சொல்வதா !?

      ஒரு சுயநலமிக்க கொடூரமான குப்ரிய சித்தாந்த அதிகாரத்தின் கீழ் அந்த அசத்திய (அ)நாகரீகத்தின் அடிப்படையில் மாதங்களையும் வருடங்களையும் கணிப்பிட்டு ஏதோ பெயருக்காக ஹிஜ்ராவை கல்குலேட் பண்ணுவது  முஸ்லீம்களுக்கு இன்று ஒரு சம்பிரதாயம் !

Thursday, October 23, 2014

ஒரு தேசத்தின் வேஷம் கலைகிறது !(மறு பதிவு )

       அது 2001 செப்டம்பர் 11 திகதி  வழமை போலவே விடிந்த அந்தப் பொழுது ஒவ்வொரு அமெரிக்க குடிமகன் உள்ளத்திலும் 1940 களில் ஜப்பான் நடத்திய 'பேர்ல் ஹார்பர் ' தாக்குதலை விட பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது .

ஹராத்தில் தேடப்படும் ஹலால் !!!

       ஒரு கதை சொல்வார்கள் ; நைட் கிளப் ஒன்றை முஸ்லிம் ஒருவன் நடாத்தி வந்தானாம் ! போதை வஸ்துக்கள் ,நிர்வாணப்பெண்கள் இப்படி எதற்குமே பஞ்சமில்லையாம் !ஒரு முறை அவனது முஸ்லிம்!! வாடிக்கையாளர்களுக்கு ஒரு சந்தேகத்துக்கிடமான தகவல் ஓன்று கிடைத்தது ; குறித்த நைட் கிளப்பில் இறைச்சி வகையோடு பன்றி இறைச்சியும் பரிமாறப்படுகின்றது ;என்பதுதான் !!

Wednesday, October 22, 2014

மாற்றம் என்றும் மாறாது !!!(பிக்ஹுள் அகல்லியாத் பற்றிய ஒரு தெளிவுக்காக. )

     எனது பெயர் மாற்றம் சடவாதத்தை பூஜிக்கும் உலகில் சத்தியத்தை சாத்தியமாக்கும் தீராத தாகத்தோடு வாழும் அபலை  .மாறும் உலகில் நிலையானது இஸ்லாம் என அடித்துக் கூறிய பலர் டொலர் சித்தாந்தத்தை பஞ்சனை ஆக்கி அசத்திய வாழ்வில் ஆனந்தம் கண்ட போது இந்த மாற்றத்துக்கு எல்லாமே தூக்கி வாரிப் போட்டது .

முதலாளித்துவ ஏகாதிபத்திய ஏமாற்று ஒரு புரிதல் .......

 
  பட்டாங்கதியை பல அங்குலங்கள் நெஞ்சினுள் பாய்த்து விட்டு ஒரு இரண்டு அங்குலம் பின்னால் இழுத்து எதோ விடயத்தை சரிப்படுத்தியதாக (முதலாளித்துவ அமெரிக்க) அரசு எம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது .              - மார்டின் லூதர் கிங் -
               வெள்ளையர்கள் அல்லாதோரை மிருகத்தை விட கேவலமாக நடாத்தி விட்டு அதற்கு எதிரான இரத்தம் சிந்தும் போராட்டம் வலுவான போது சமரச அரசியலின் தூண்டில் அமெரிக்காவில் முதலாளித்துவ வாதிகளால் போடப்பட்டது .அதன் இரையாக கறுப்பின மக்களுக்காக சில சலுகைகள் வழங்கப்பட்டது .அந்த எமாற்றின் உண்மையை உணர்ந்த ஒரு கறுப்பின போராட்ட தலைவனின் வார்த்தைகளே மேலே தந்தவை .

Friday, October 17, 2014

சூடு பறக்கும் குப்ரிய எதிர்ப்பும் சுரணை கெட்ட முஸ்லீம் உட்கட்சி மோதலும் .....!!!

         இலங்கையின் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையிடம் விசாரணை நோக்கில் சிங்கள ,ஆங்கில அல் குர் ஆன் மொழி பெயர்ப்புகளை பெற்றுக்கொண்டுள்ளது .அதற்கான சந்தேகங்களும் ஊகங்களும் ஒருபுறம் இருக்க போலீஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்திருக்கும் விளக்கம் விடயத்தின் திசையை இன்னொரு கோணத்தில் சிந்திக்க தூண்டியுள்ளது .

Thursday, October 16, 2014

நோபல் பரிசு அதர்ம அரசியலின் ஆதாரச் சின்னமா !?

         (ஆல்ஃபிரட் நோபல்  1833, அக்டோபர் 21 அன்று சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரில் பிறந்தார். அவரது குடும்பம் ஒரு பொறியியலாளர் குடும்பமாகும்[1]. இவரது வாழ்நாளில் வேதியாளராயும் பொறியாளராயும் கண்டுபிடிப்பாளராயும் விளங்கினார். 1894-ஆம் ஆண்டு போஃபர்சு இரும்பு மற்றும் எஃகு ஆலையை நோபல் வாங்கினார்.

Friday, October 10, 2014

சமரசக் காவடி எடுக்கும் சகோதரர்கள் புரிவார்களா !?

                                    "இறைவன் மீது ஆணையாக ,நான் இந்த இலட்சியப் பணியை கைவிடுவேன் என்ற நம்பிக்கையில் (குறைசித் தலைவர்களாகிய ) அவர்கள் எனது ஒருகையில் சூரியனையும் ,மறுகையில் சந்திரனையும் கொண்டு வந்து வைத்தாலும் இப்பணியில் இருந்து நான் பின்வாங்க போவதில்லை "                 - முஹம்மது (ஸல் ) -

வெற்றியை நோக்கி .........

பூர்சுவா புலிகளின் 
புளுகு அரசியல் !
பலியாக  பின் செல்லும் 
மந்தைகளின் வரிசைகள் !!

சொந்த முற்றங்களில் 
எமக்கே கபுருகள்!
நாமே தோண்ட 
எதிரியின் உதவிகள் !!

Saturday, October 4, 2014

அமெரிக்க இச்சையில் நிர்வாண இஸ்லாம் பேசும் நியோ சலபிகள் !!

 
       சுன்னாவின் சாயம் பூசி தமது முதலாளித்துவ முகத்தை மறைக்க முயன்றாலும் நியோ சலபிசத்தின் சாயம் அடிக்கடி வெளுக்கின்றது .அந்த வகையில் ஐ .எஸ் மீதான அமெரிக்க கூட்டு யுத்தத்துக்கு சவூதி மன்னரிச பூட்ஸின் அடித்தூசியாக ஒட்டிக்கொண்டுள்ள இலங்கை இளவல்கள் இப்போது அப்பட்டமாக தமது எதிர்ப்பை காட்ட தொடங்கி உள்ளனர் .
    ஐ .எஸ் மீதான கருத்து வேறுபாடுகள் ,மற்றும் சர்ச்சைகள் தொடர்பாக இங்கு நான் பிரஸ்தாபிக்க வரவில்லை .அது வேறுவிடயம் .ஆனால் மத்திய கிழக்கில் மன்னரிச பொம்மையாட்சிக்கு ஆப்படிக்கும் இஸ்லாமிய தேடல்களை நிராசை ஆக்கும் அமெரிக்க திட்டத்தின் நேரடி செயல் திட்டங்கள் இப்போது அமுலாகியுள்ள இந்நிலையில் அதற்கு இஸ்லாமிய நியாயம் பூசும் துரோக விளம்பர அரசியலையே இந்த நியோ சலபிகள் செய்து வருகிறார்கள்.        

இதோ எம்மை கடக்கும் இன்னொரு தியாக திருநாள் !!!

 (இவ்வாறே கிறிஸ்தவர்களாகிய  )அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்கள் பாதிரிகளையும் ,சந்நியாசிகளையும் ,மர்யமுடைய மகன் மசீகையும் தங்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர் .இன்னும் 
ஒரே இரட்சகனையே வணங்க வேண்டுமென்று அல்லாது அவர்கள் கட்டளை இடப்படவில்லை ;அன்றியும் வணக்கத்துக்கு தகுதியானவன் 
ஒருவரும் இல்லை ;அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மிக 
பரிசுத்தமானவன் . (சூராஹ் அத் தௌபாஹ் :வசனம் 31)

        தௌஹீதின் யதார்த்தத்தையும் ,தியாகத்தின் உச்சத்தையும் நினைவு கூறும் இந்த ஈதுல் அல்ஹா எனும் திருநாளில் சகோதரர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .ஆனாலும் நெஞ்சை அழுத்தும் ஒரு கடின வலி என்னைமட்டுமல்ல இந்த முஸ்லீம் உம்மத்தை தொடர்கிறது .

Thursday, October 2, 2014

முதலாளித்துவ 'பிரைன் கியூமரில்' இலங்கை சிவிலியன்கள் !!

   கொஞ்சம் கொஞ்சமாக இலங்கை ஒரு அசாதாரண மாற்றத்தை நோக்கி நகர்த்தப்படுகிறது .அது நவகாலனித்துவ அடிமை அரசியலின் வெளிப்படை உண்மைகளாக இன்று அமுலாகின்றது . மூன்று தசாப்த இனவாத யுத்தத்தின் ஆச்சரியமான முற்றுப்புள்ளியின்  தெளிவான விடையாக கூட அது இருக்கலாம் .

                                         நேற்று அந்த கொடிய நாடகத்தின் பாத்திரங்கள் பிளஸ் பார்வையாளர்கள் என்ற சிறப்புப் பாத்திரத்தை ஏற்றிருந்த அதே சிவிலியன்கள் ,இன்று புதிய நாடகத்தின் பாத்திரங்களாக 'டேக் அப் பிளஸ் மேக்கப் 'செய்யப்படுகிறார்கள் . அது 'பயங்கர எதிர்ப்பு என்ற முகமூடியில் முஸ்லீம் எதிர்ப்பு' என்ற டைட்டில் .