Friday, February 8, 2013

வேங்கைகளின் வேட்டைக்கு தயார்படுத்தப் படும் வெள்ளாடுகள் !?


" ........ ஒரு காலம் வரும் அன்று சண் ஆ வில் இருந்து ஹல்றல் மௌத் வரை ஒரு பெண் தனியாகச் செல்லாலாம் ......" (நபி (ஸல் ))


     மனித சமூகத்தின் மீது மிகுந்த அக்கறையுடன் இஸ்லாம் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளிள் ஒன்றே இந்த பெண் பாதுகாப்பாக வாழும் சூழல் பற்றியதாகும் . இன்று அத்தகு வாக்குறுதிகளை செயல் படுத்த விடாமல் தீமையின் அதிகார ஆணிவேர்கள் போடும் ஆட்டத்தின் விளைவு மிகப் பயங்கரமாக உள்ளது . சத்தியம் பயங்கர வாதமாக்கப் பட்டு அசத்தியம் நியாமாக்கப் பட்டுள்ள இன்றைய சூழலை விளக்க கீழ்வரும் இரண்டு சம்பவங்களை ஒப்பிட்டுப் பாருங்கள் . 





தென்னாபிரிக்காவில் 17 வயதான இளம்பெண்ணொருவர் குழுவொன்றினால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின்னர் உயிரிழந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் கேப்டவுனிலிருந்து சுமார் 130 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பிரடஸ்டோர்ப் நகரில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின்னர் வீசப்பட்ட நிலையில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளார்.

அப் பெண் மிகவும் மோசமான முறையில் துன்புறுத்தப்பட்டுள்ளதுடன் அவரின் வயிற்றிலிருந்து, பெண்ணுறுப்பு வரை வெட்டப்பட்டிருந்ததாக அந்நாட்டு பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் உயிரிழப்பதற்கு முன்னர் அப் பெண் குற்றவாளிகளில் ஒருவரை பொலிஸாருக்கு அடையாளங்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்திற்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.




இப்படி நடப்பதற்கான காரணம் என்ன ? கீழே வரும் சம்பவத்தை பாருங்கள் .







இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் மனைவி, எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழாவின் போது, கவர்ச்சி உடையில் வந்திருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந் நாட்டில், கடந்த மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், பிரதமர் நேதன்யாகு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிய பாராளுமன்றத்தின், உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா கடந்த 5ஆம் திகதி நடைபெற்றது.

இப் பதவி ஏற்பு விழாவுக்கு, பிரதமர் நேதன்யாகுவின் மனைவி சாராவும் வருகை தந்திருந்தார்.

மெல்லிய துணியால் உள்ளாடைகள் தெரியும் வகையில் அவர் அணிந்திருந்த ஆடையை, அந்நாட்டு பத்திரிகைகள் விமர்சனம் செய்துள்ளன.

அமெரிக்க நடிகையும், பொப் பாடகியுமான பியொன்ஸே போன்று, சாரா உடை அணிந்து வந்தமை அவருடைய மட்டமான ரசனையையை காட்டுகிறது.இந்த வயதில் அவர் இதுபோன்று உடை அணிவது சகிக்க முடியவில்லை' என, பத்திரிகைகள் கருத்து தெரிவித்துள்ளன.

இவ் ஆடை விவகாரம் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.




          தலைகீழ் மற்றம் என்பது கீழிருந்து மேல் நோக்கி செல்ல வேண்டுமா ? மேலிருந்து கீழ் நோக்கி அமுல் நடத்தப் படவேண்டுமா ? என்பதை மனித சமூகம் தீர்மானிக்க வேண்டிய தருணம் இது . பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள் என்பதை பெண்கள் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் . இப்படி ஒரு அநீதி பெண் மீது நடக்கக் கூடாது, என்று முதலாவது சம்பவம் சொல்லி நிற்க ,இரண்டாவது சம்பவம் இப்படி ஒரு பெண் இருக்கக் கூடாது என்பதை அவர்களை அதிகாரத்தில் ஏற்றிய சமூகமே கூறி நிற்கின்றது .




     இந்த இரண்டு சம்பவங்களும் வெவ்வேறு காலப்பகுதியில் நிகழ்ந்தவை அல்ல , கடந்த ஒரு சில நாட்களுக்குள் நடந்தவை . இது போல் பல சம்பவங்கள் உலகம் தோறும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன . தவறான கலாச்சார மயப்படுத்தல் தவறான விளைவுகளை பெற்றுத் தருகின்றது . இஸ்லாம் 'ஔரத்' கோட்பாட்டின் கீழ் உடலை மறைக்கச் சொன்னால் மட்டும் போர்க்கொடி தூக்கும் பெண்ணுரிமை அமைப்புகள் இந்த தீமையின் ஆணி வேர்களின் ஆட்டம் பற்றியும் ஒரு போராட்டம் நடத்தலாமே !? முஸ்லீம் பெண் போட்டதை கலட்டும் பெண் உரிமை போராட்டங்கள் பற்றி மட்டும் தான் இப்போது உங்கள் கவனம் திருப்பப் பட்டுள்ளது . வேங்கைகள் வேட்டையாட வெள்ளாடுகள் தயார் படுத்தப் படுகின்றது . இதுதான் முதலாளித்துவ வழிமுறை . ரொம்ப நல்லாயிருக்கு .

No comments:

Post a Comment