Friday, November 9, 2012

சிந்தனைத் தடைகள் !!



என் ஆன்மீக கண்களை கட்டி 
'ஜாஹிலீய' கைத்தடி கொடுத்து 
இருளுக்குள் நடைபோட 
வைத்தது யார் ?
 தூய சிந்தனைக்கு விலங்கிட்டு 
அசத்திய சிறையில் 
ஆயுள் கைதியாய் 
தள்ளியது யார் ?
நிரந்தர நிம்மதிக்கான சோதனை 
முட்படுக்கையை அகற்றி 
வேதனைத் தீக்கு விறகாய் ஆக 
அறியாமை பஞ்சு மெத்தையில் 
வீழ்த்தியது யார் ?
பலவீனமேனும் நானா ? என் எதிரியா ?
ஆழ்ந்த கவலையில் கண்ணீருடன் 
வீழ்ச்சியின் சரிதைக்கு விடை 
தேட முனைந்த போது !!!!!
"ஓங்கி அடித்தார் ஆறு ஓட்டங்கள் "  என 
எங்கிருந்தோ வந்த வர்ணனை வார்த்தைகள் 
என்னுள் எழுந்த வினாக்களை 
ஆட்டமிழக்கச் செய்தது !!!!

No comments:

Post a Comment