என் ஆன்மீக கண்களை கட்டி
'ஜாஹிலீய' கைத்தடி கொடுத்து
இருளுக்குள் நடைபோட
வைத்தது யார் ?
தூய சிந்தனைக்கு விலங்கிட்டு
அசத்திய சிறையில்
ஆயுள் கைதியாய்
தள்ளியது யார் ?
நிரந்தர நிம்மதிக்கான சோதனை
முட்படுக்கையை அகற்றி
வேதனைத் தீக்கு விறகாய் ஆக
அறியாமை பஞ்சு மெத்தையில்
வீழ்த்தியது யார் ?
பலவீனமேனும் நானா ? என் எதிரியா ?
ஆழ்ந்த கவலையில் கண்ணீருடன்
வீழ்ச்சியின் சரிதைக்கு விடை
தேட முனைந்த போது !!!!!
"ஓங்கி அடித்தார் ஆறு ஓட்டங்கள் " என
எங்கிருந்தோ வந்த வர்ணனை வார்த்தைகள்
என்னுள் எழுந்த வினாக்களை
ஆட்டமிழக்கச் செய்தது !!!!
No comments:
Post a Comment