Thursday, December 6, 2012

எங்களுக்கு தற்போது நாடென்று ஒன்று உள்ளது: பாலஸ்தீன அதிபர் அப்பாஸ்(புதிய கண்டு பிடிப்பு )!!


(கீழ்வரும் செய்தியை படியுங்கள் புதிய ஹிஜ்ரி வருடத்தின் முஸ்லீம்களுக்கான சிறந்த ஜோக் ......)

 பாலஸ்தீனத்தின் மேற்குக்கரையிலுள்ள தனது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் உரையாற்றியுள்ள பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், "எங்களுக்கு தற்போது நாடென்று ஒன்று உள்ளது" எனக் கூறியுள்ளார்.நியுயார்க்கில் ஐநா தலைமையகம் சென்று திரும்பிய அப்பாஸுக்கு பெரும் வரவேற்பு வழங்கப்பட்டிருந்தது.

 

உறுப்பு நாடல்லாத கண்காணிப்பாளர் நாடு என்ற ஒரு அந்தஸ்து பாலஸ்தீனர்களுக்கு வழங்கப்படுவது தொடர்பான ஐநா வாக்கெடுப்பில் வென்று அப்பாஸ் நாடு திரும்பியுள்ளார்.

 
தாங்கள் கடக்க வேண்டிய பாதை நெடியதாக இருந்ததென்றும், கடுமையான அழுத்தங்களை சந்திக்க வேண்டியிருந்தது என்றும் ஆனாலும் மனம் தளராமல் போராடி இந்த அந்தஸ்தை பாலஸ்தீனர்கள் வென்றுள்ளனர் என்றும் ரமல்லாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
 
பாலஸ்தீன மக்கள் அனைவரும் நல்லிணக்கம் காணவேண்டும் என்று அப்பாஸ் கேட்டுக்கொண்டார்.
 
மேற்குக்கரையின் பாலஸ்தீன நிர்வாகமும், காஸாவின் ஹமாஸ் நிர்வாகமும் பிளவுபட்டு நிற்பதை அவர் இதன் மூலம் சுட்டிக்காட்டியதாகக் கொள்ளலாம்.
 
இஸ்ரேல் கண்டனம்
 
 ஐநாவில் பாலஸ்தீனர்களின் அந்தஸ்து உயர்த்தப்பட்டிருப்பதன் பின்னணியில், அந்த மக்களுக்காக அறவிடப்பட்டிருக்கின்ற இந்த மாதத்துக்கான வரிவருமானங்களை அவர்களிடம் கையளிக்கப்போவதில்லை என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
 
12 கோடி டொலர்கள் பெறுமதியான இந்த வரிவருமானத்தை பாலஸ்தீன அதிகாரசபை இஸ்ரேலிய மின்சார கம்பனியொன்றுக்கு செலுத்தவேண்டிய கடனுக்காக செலுத்தவுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
 
ஐநாவில் பாலஸ்தீனர்கள் முன்னெடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் இஸ்ரேலின் பிரதமர் பென்யமின் நெதென்யாஹு கண்டனம் வெளியிட்டுள்ளார்.
 
முன்னைய ஒப்பந்தங்களை முழுமையாக மீறுகின்ற நடவடிக்கை இதுவென்று சுட்டிக்காட்டியுள்ள அவர், பாலஸ்தீனத்தின் பகுதிகளில் தொடர்ந்தும் தமது குடியிருப்புகள் நிர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். (BBC TAMIL)

( யாரின் சொத்தை யார் அங்கீகரிப்பது ? இல்லாத நாட்டை இருப்பதாக கூறி அங்கு   யூதனின் போராட்டம் இருக்க , சொந்த நிலத்தின்  துண்டத்தை பிச்சை வாங்குவது முஸ்லீம்களின்  போராட்டம் !!! அதுவும் துப்புக் கெட்ட U .N இல் இதை விட நாக்கை பிடுங்கிக் கொண்டு இவர்கள் சாகலாம் .)

No comments:

Post a Comment