மனிதன் தனது உடல் சார்ந்த தேவைகளையும் ,உள்ளார்ந்த உணர்வுகளையும்
திருப்திப் படுத்துவதை உறுதிப்படுத்தும் விதத்தில் இஸ்லாம் அவற்றை
ஒழுங்கு படுத்துகிறது .பசி ,இனப்பெருக்கம் , உறவுகள் போன்ற எல்லாம்
இங்கு வஹி மூலம் மிகச்சரியாக ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது .
தேவையான ஒன்றை புறக்கணித்தோ , மிதமிஞ்சிய கட்டுப்பாடற்ற
வரையறுக்கப்படாத அனுபவிப்போ இந்த ஒழுங்கு முறையில் இருக்காது
என்பதுதான் எமது அகீதா.
முதலில் ஷரியாவின் எந்தப்பகுதிகளை பிரயோகிக்கலாம் எனும்
சிந்தனையை விட இஸ்லாமிய அகீதாவை இன்று சமூகம் எவ்வாறு
புரிந்துள்ளது ? எனும் அவதானிப்பின் ஊடாக எமது இஸ்லாமிய
மயப்படுத்தல் சமூகத்தின் எல்லா மட்டங்களையும் சென்றடைகின்றதா ?
என்பதும் மிக நிதானமாக ஆராயப்பட வேண்டும் .
காரணம் இஸ்லாம் அகீதாவில் இருந்தே வழிமுறைகள் தோற்றம்
பெறுவதாக கூறுகின்றது . எனவேதான் அல்குர் ஆன் 'அல்லாஹ்வையும்
மறுமை நாளையும் ..., ஈமான் கொண்ட விசுவாசிகளே ...,
மூமீன்கள் யாரென்றால் ... ' போன்ற பதங்களை பல இடங்களில் அல்லாஹ்
(சுப) கூறுவதாக நான் கருதுகிறேன் .
ஈமானியப் பெறுமானம் உணரப்படாத,அகீதா தெளிவற்ற பிகிஹ்
பேசப்படுவது மிகப்பெரிய தவறு .இன்று சமூகத்தில்
அது சர்வ சாதாரண நிகழ்வு . இதனால் தான் உலகியல் விவகாரங்களில்
இருந்து மார்க்கத்தை பிரிக்கும் முதலாளித்துவ அகீதா எமது
உம்மத்துக்குள்ளும் புகுந்து விளையாடுகின்றது !
முதலாளித்துவத்திட்கு இறைவனின் உள்ளமையை ஏற்றுக்கொண்டு
(இறைவன் அருளிய வாழ்வியல் விவகாரங்களில் மட்டும் அவனது
கட்டளைகளை ஏற்றுக்கொள்ளாமல் ) வாழ்வதும் ஒன்றுதான் ,அல்லது
இறைவன் மறுத்து வாழ்பவர்களும் ஒன்றுதான் . இங்கு இருதரப்பும் சம
உரிமை உடையது மதச்சார்பின்மை கோட்பாடானது இந்த இடத்தில்தான்
ஆரம்பிக்கின்றது .
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கொண்ட ஒரு ஆன்மீக
மதமாக இஸ்லாம் வாழ்ந்து விட்டுப்போவதில் முதலாளித்துவ
அகீதாவிட்கு எந்தக் கவலையுமில்லை .
முதலில் செய்ய வேண்டியது ஆன்மிகம் , உலகியல் என பிரித்து
நோக்கும் மனநிலையில் இருந்து மாற்றி முஸ்லீம் சமூகத்தை தனது
இஸ்லாமிய அகீதாவில் தனது இருந்தே வாழ்வியல் தோற்றம்பெற
வேண்டும் எனும் மனோநிலையை உருவாக்குவதற்கான
சாதகங்களையும் , சாதனங்களையும் பற்றி நாம் சிந்திப்பது
ஆரோக்கியமானது .
No comments:
Post a Comment