திரிக்கப்பட்ட வரலாற்றின் சுவர்களில்
இந்து மத வாத ஓவியம் துவேஷ தூரிகைகளின்
கைவண்ணத்தில் கச்சிதமாக காட்சியாகியது !
புராதனங்களில் புகுந்த பொய்களில்
சிதைந்த புராணங்கள் கொம்பு சீவி விட
இராமன் வரலாற்றில் பாபர் நுழைக்கப் பட்டார் !
இந்துத்துவாவின் இழிவான அரசியல் அது
இந்த இதிகாசப் போலியில் மக்களும் மாக்களாகி
மதிகெட்டதால் மஸ்ஜித் முட்டி வீழ்த்தப்பட்டது !
பிணம் திண்ணும் சாத்திரங்கள் அங்கு
மத வாதப் பேய்களால் நிதர்சன மாக்கப்பட
அழிந்தது நிஜத்தில் என்னவோ மனிதம் தான் !
No comments:
Post a Comment