Saturday, December 8, 2012

இடிக்கப்பட்டது' பாபர் மஸ்ஜித் 'அல்ல மனிதம் .



  திரிக்கப்பட்ட வரலாற்றின் சுவர்களில் 
  இந்து மத வாத ஓவியம் துவேஷ தூரிகைகளின் 
  கைவண்ணத்தில் கச்சிதமாக காட்சியாகியது !

  புராதனங்களில் புகுந்த பொய்களில் 
  சிதைந்த புராணங்கள் கொம்பு சீவி விட 
  இராமன் வரலாற்றில் பாபர் நுழைக்கப் பட்டார் !

   இந்துத்துவாவின் இழிவான அரசியல் அது 
   இந்த இதிகாசப் போலியில் மக்களும் மாக்களாகி 
   மதிகெட்டதால் மஸ்ஜித் முட்டி வீழ்த்தப்பட்டது !

   பிணம் திண்ணும் சாத்திரங்கள் அங்கு 
   மத வாதப் பேய்களால் நிதர்சன மாக்கப்பட 
   அழிந்தது நிஜத்தில் என்னவோ மனிதம் தான் !

No comments:

Post a Comment