Thursday, November 27, 2014

குரங்கு மாறினால் பூமாலை தப்பிக்குமா !?

        
   "பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கிறது ! அதற்கு ஏண்டா புனிதமான அரசியல பாவிக்கிறீங்க !?" என்பது ஒரு கலைக் கூத்தாடி சினிமாவில் பாவித்த வசனமாகும் .அபூஹுரைராவுக்கு (ரலி ) சைத்தான் கற்றுக் கொடுத்த ஆயதுல் குர்சி போல பொய்மையின் தெளிவான உருவமான சினிமா சொன்ன உண்மை இதுவாகும் .

Friday, November 21, 2014

அட இது தாண்டா மனிதாபிமானம் ...!

    
   1845ல் 10 லட்சம் பேரை அயர்லாந்து பஞ்சம் காவு வாங்கியது. உதுமானிய கலீஃபா அவர்களுக்கு உதவிட 10,000 ஸ்டெர்லிங்கை நிதியாக தர முன் வந்தார்.

            ஆனால் ஐயர்லாந்தின் அரசி வெரும் 2000 ஸ்டெர்லிங்கை மட்டுமே தன் நாட்டு குடி மக்களுக்கு தர உத்தேசித்திருந்ததால் கலீஃபாவின் உதவியை வெரும் 1,000 ஸ்டெர்லிங்கோடு நிருத்திக்கொள்ள கேட்டுக்கொண்டாள் .

இலங்கையில் இன்று ........

                         நம்பி ஏமாறுதல் இந்த உம்மத்தின் தலைவிதி என்றால் அதற்கான இன்னொரு கதவு இப்போது திறக்கப் படுகிறது .இருக்கின்ற பேயில் நல்ல பேயை தேர்வது உலமாக்களால் காலத்தின் கடமையாக வேறு சொல்லப்படுகிறது .என்ன செய்வது பிணம் தின்னும் சாத்திரத்தில் தானே இரையாகும் ஏமாந்த ஜென்மங்களை ஜனநாயக தேசிய சிறுபான்மையில் தவிர வேறு எங்கும் காண இன்று முடியாது .

ஐ .எஸ் இனது நகர்வு இஸ்லாமிய அரசியலா !?(சில கேள்விகள் )

                                                            ஒரு காலம் இருந்தது ,அது முஸ்லீம்களிடமும் முஸ்லீம் உலகத்திடமும் முஸ்லீம் அல்லாதோரும் பாதுகாப்பையும் புகழிடத்தையும்,வேண்டக்கூடியதாக இருந்தது .அது இஸ்லாத்தின் தனிப்பெரும் அரசியலான கிலாபா சாம்ராஜியத்தோடு முஸ்லீம்கள் ஒன்றி இருந்த நேரமாகும் .அப்போது இஸ்லாத்தை தவறாக பயன்படுத்திய அதிகாரங்களும் ,அதிகாரிகளும் இருந்தார்கள் .ஆனால் முஸ்லீம் உம்மத் அவமானத்தோடு தலைகுனிய வேண்டிய நிரந்தர நிலை ஏற்படவில்லை.

Thursday, November 20, 2014

ஐ .எஸ் .இனது நகர்வு இஸ்லாமிய அரசியலா !?

   இன்று பட்டி தொட்டி எங்கும் பேசப்படும் ஒரு பிரதானமான விடயம் ஐ .எஸ் பற்றியதே என்றால் அது மிகையான கருத்தல்ல .இன்னும் என்னோடு பழகும் முஸ்லீம், முஸ்லீம் அல்லாதோர் என அநேகமானோர் இப்போது கேட்கும் கேள்விகளில் பிரதானமானது இந்த ஐ .எஸ் கூறும் இராணுவ இராஜாங்கம் பற்றியதே .ஆனால் விடயத்தை அவர்களுக்கு புரிந்த வகையில் விளக்குவது சற்று கடினமானது என உணரக்கூடியதாக உள்ளது .

Saturday, November 15, 2014

பொய்க்கால் குதிரையில் போவோமா ஊர்கோலம் !!!!

 
மாயையில் மயங்கிய மதிகெட்ட கோலங்கள் !
விஷத்தை அமுதாக்கிய விநோதப் பார்வைகள் !
பிழைக்குள் பிழைப்புத் தேடும் புரியாத வாழ்க்கைகள் !
இது இன்று அண்டம் சுமக்கும் ஆச்சரிய உண்மைகள் !

Friday, November 14, 2014

அமெரிக்க தரப்பு சொல்லும் அம்புலிமாமா கதையின் உண்மை நிலை என்ன !? (ஒரு புரிதலுக்கான பதிவு )

    
    ஈராக் விவகாரத்தில் அண்மைய செய்திகள் ஒரு திட்டமிட்ட அரசியலின் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கான வடிவத்தை சுட்டுவதாக இருக்கிறது .வெறும் அமெரிக்க எதிர்ப்பு என்ற மேலோட்ட பார்வைகளை தாண்டிய ஒரு இரகசிய சூத்திரத்தின் நிறுவல் எனும் உண்மையாக நாளை அது காட்டி நிற்கலாம் .அது என்ன ?

          கடந்த இரு வாரங்களுக்கு முன் ஐ .நா .சபை சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிக்கும் தனது உறுதியான செயல்திட்டத்தை அமுல் படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது .அதேநேரம் 1500 துருப்பினரை ஈராக் அரசுக்கு சார்பாக ஐ .எஸ் அமைப்புக்கு எதிராக நேரடி களமிறக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது .

Friday, November 7, 2014

இஸ்லாமிக் எமிரேட்ஸ் மாயை மேல் எழுப்பப் படும் எதிரியின் சமரசம் !

               
  நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப் பட்ட ) மார்க்கம் 
இஸ்லாமாகும் ....(ஆள இம்ரான் :வசனம் 18)

 ( அல்லாஹ்வின் தூதரின் (ஸல் ) அரசியல் நகர்வு தொடர்பில்  வெற்று ஆன்மீகப் பதிவோடு பார்க்கும் மதவாதமே தெரிகிறது .மதீனா யுகம் என்ற சித்தாந்த எழுச்சியின் மைல் கல்லாக அந்த ஹிஜ்ரா பார்க்கப்படுவதில்லை .அதனால்  ஆட்சி தொடர்பான இஸ்லாத்தின் கட்டளை மற்றும் செயல் கிரமம் மறைந்து போகின்றது .

     இங்கு நான் பதிவிட வருவது இகாமதுத் தீன் என்பதன் சுன்னா எது என்ற கோட்பாட்டு பார்வை பற்றியதே .அதிகாரம் மற்றும் இஸ்லாமிய சரீயாவின் பிரயோகம் தொடர்பில் ஒரு பக்குவமான பிரிகோட்டை போட்டது காலனித்துவ வாதிகளின் சதியே .அந்த வகையில் சிலுவை சித்தாந்திகளை அரவணைக்கும் மன்னரிசம் முதல் நவ காலனித்துவத்துக்கு சலாம் போடும் இஸ்லாமிய ஜனநாயகம்,மற்றும் முரண்பாட்டு இராணுவ அரசியலை காட்டி நிற்கும் இஸ்லாமிக் ஸ்டேட் ,எமிரேட்ஸ் போன்ற தேடல்களின் உண்மை நிலையை உணர்த்த இந்தப்பதிவு உதவலாம் .)