Saturday, August 31, 2013

என்றும் மறவாத நினைவுகளில் புதைந்துள்ள உண்மைகள் !(பகுதி 03)




              ஆப்கான் சோவியத் யுத்தம் சூடு பிடித்திருந்த அந்த இறுதிப் பொழுதுகளில் அமெரிக்கா தனது அசிங்கம் மிக்க சுயநலக் கரம் ஆப்கான் முஜாஹிதீன்களுக்கு சார்பாக நேரடியாகவே பங்களிப்பு செய்திருந்தது போலக்  காட்ட தனது மீடியாக்களை பல்வேறு வழிகளில் பாவிக்கத் தொடங்கியது .

                        ஆப்கன் யுத்தத்துக்கு நிதி சேர்க்கும் சாட்டில் மாபியாத் தனமாக ஹெராயின் ,கொகாயின் வியாபாரத்தை வேறு ஆப்கான் போடர்களில் படர விட்டிருந்த அமெரிக்கா    , தான் எப்படியான ஆயுத உதவி செய்தேன் என்பதைக் காட்ட 'ஹோலிவூட் ' பாணியில் சொன்ன கதைதான் FIRST BLOOD (PART 3) அல்லது RAMBO  (PART 3) திரைப்படம் ஆகும் .

மத்திய கிழக்கில் நவ காலனித்துவம் சொல்லும் புதுக்கதை என்ன !?


சிரியா தாக்கப்படுமானால் ரஷ்யா சவுதி அரேபியாவை தாக்கும் !! - விளாடிமிர் புட்டின் அசோல்டிங் ஓடரில் கையொப்பமிட்டார்!!

“இதன் பெயர் எண்ணைய் யுத்தம். மத்திய கிழக்கின் ரஷ்யாவின் பெறுமதிமிக்க ஒரே ஒரு தளத்தையும் அழித்து அதன் பின் மத்திய கிழக்கு நாடுகளை தன் அடிமை தேசமாக மாற்றி பூகோள பெற்றோலிய அதிகாரத்தை தக்க வைக்கும் முதலாளித்து தேங்களின் பொறியில் இருந்து விடுபட ரஷ்யா தாயராகிறது. அதனை செய்ய சிரியாவை காப்பாற்றல் என புருடா விடுகிறது”

பிளீஸ் சிந்திக்க சில நிமிடங்களை ஒதுக்குங்கள் !


இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா…!


ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதோ அந்த ஊழலில் சில துளிகள்…

1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் – ரூ 1.76 லட்சம் கோடி (தமிழனாக இருந்து நமக்கு அந்த பெருமையை கொடுத்துள்ளார் ராசா ) இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001-ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் அடித்துள்ள கமெண்ட் இது:

‘இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களை வெட்கப்படச் செய்துள்ளது 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு’ (‘The spectrum scam has put ‘all other scams to shame!’.)

Friday, August 30, 2013

என்றும் மறவாத நினைவுகளில் புதைந்துள்ள உண்மைகள் ! (பகுதி 02)



  அது வீரத்தின் நிலம் என்பது புரியாமல்  கம்யூனிச செங்கரடி தன் நாஸ்திக சித்தாந்த நாகரீகத்தை ஆப்கானில் பதிக்க முனைந்தான் . அந்த வீர சமூகத்தை மண்டி போட வைக்க அலெக்சாண்டருக்கும் முடியாமல் போனது ! பிரிட்டிஷ் காரனுக்கும் முடியாமல் போனது ! என்பதை உணராமல், அல்லாஹ்வுக்கு மட்டுமே சிரம் சாய்த்த ஒரு சமூகத்தை மீண்டும் ஒருமுறை கம்யூனிசமும் மண்டி போடவைக்க  முயன்று பார்த்தது . முடிந்ததா ?

சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது !அசத்தியம் நிச்சயம் அழிந்து போவதே !


This is ISIS's (Islamic State of Iraq and Al-Sham)e photo of Shariah Committee's Headquarters in Ad-Dana (rural part of Idlib).

நம்புங்கள் 'கிலாபா ' நாளை உதிக்கும். 
மனித அடிமை விலங்கு தெறிக்கும் !

ஒரே தலைமையில் 'உம்மாஹ் ' நிமிர்ந்திடும் .
'பை அத் ' கொடுத்திடும் வாய்ப்பும் வந்திடும் !

'தாகூத்திய சக்திகள் அஞ்சி நடுங்கிடும் .
'ஜிஸ்யாவா '? ஜிஹாதா ? கேள்வி பிறக்கும் !

'வஹியின் ' வழிதனில் சட்டம் வேலிபோடும் .
குனிந்த முகங்களும் நிமிர்ந்து சிரிக்கும் !

நீதியின் உண்மையை உலகம் உணரும் .
முஹம்மதின் (ஸல் ) படையணி மீண்டும் ஜொலிக்கும் !

'சியோனிச 'அதிகாரம் ஓடி ஒதுங்கும் .
தூய பாலஸ்தீன் மீண்டும் கிடைக்கும் !

'பைத்துல் முகத்திஸில் ' அதான் ஒலிக்கும் .
'குப்ரின்' தடைகளை இஸ்லாம் ஒடிக்கும் ! 
          

ஏகாதிபத்தியம் இராணுவ சப்பாத்துக்களை பதிக்க இன்னொரு முஸ்லீம் பெருநிலம் தயாராகி வருகிறது!!


                       ஆளும் தாகூத்தின் அநியாயம் போதாமல்  முதலாளித்துவ ஏகாதிபத்திய தாகூத்தும் தன் ஆதிக்கத் தாண்டவத்தை ஆட இன்னொரு முஸ்லீம் பெருநிலம்! அதுவும் நாளைய இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் முன்னறிவிப்பாக வஹி குறிப்பிட்ட  'ஆஷ் ஷாம் 'இன்று தயாராவது இன்று எதற்காக !? ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களின் துள்ளியமான 'கபுருஸ்தானாக ' அது மாறுமா ? சமரச குள்ளநரித் தனத்தில் சுருண்டு விடுமா !? என்ற எதிர் பார்ப்புக்கு  இன்ஷா அல்லாஹ் பதில் சொல்வார்கள் எம் போராளிகள். ஆயிரம் ஆயிரம் படை வந்தாலும் ஆட்கள் தொகையா வெல்லும் !? ஓ முஸ்லிம் உம்மாவே  ! உனக்கு அல்குர் ஆன் பதில் சொல்லும் . 

Thursday, August 29, 2013

என்றும் மறவாத நினைவுகளில் புதைத்துள்ள உண்மைகள் !





              சோவியத் யூனியன் (USSR ) என்ற பெயர் புதிய தலைமுறையினருக்கு சற்று அறிமுகமல்லாமல் போயிருக்கும் . கம்யூனிசத்தின் சித்தாந்தக் கடவுள் கார்ல் மார்க்ஸ் வடித்த' டாஸ் கபிடல் ' எனும் நூலின் 'தியரிக்கு' பிராக்டிகல் கொடுக்க 'லெனின் கிராட் ' எனும் இன்னொரு கடவுளால் உருவாக்கப் பட்ட தேசமே சோவியத் யூனியனாகும் . இன்று இந்த கூட்டு யூனியன்கள் எல்லாம் உடைந்து ரஷ்யா எனும் கௌரவப் பிச்சைக்காரனாக அது காட்சி தந்தாலும் அதன் அடாவடித்தனம் மட்டும் குறைந்த பாடில்லை .

Wednesday, August 28, 2013

பிர் அவ்னை தட்டிக்கேட்க நும்ரூதின் கூட்டணியா !?


       சிரியாவில் சிவிலியன்கள் மீதான இரசாயன ஆயுதப் பிரயோகத்தின் பின் அதை காரணமாக வைத்து அமெரிக்கத் தலைமையிலான NATO கூட்டுக் கொலைகாரக் கொள்ளையர்கள் ஒரு இராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வரும் செய்தியே இன்று மீடியாக்களின் பிரதான HOT NEWS ஆக மாறியிருக்கிறது .

             தனது அரசியல் ,இராஜ தந்திர , பொருளாதார நிர்ணயங்களுக்காக சில சூழ்நிலைகளை திட்டமிட்டு உருவாக்குதல் , உருவாகியுள்ள சூழ்நிலையை சரியாகப் பயன்படுத்தல் என்பதுதான் முதலாளித்துவத்தின் அடிப்படையான செயல் விதி .

Monday, August 26, 2013

இன்றைய தேவை வெறும் போர்க்குணமா ? அல்லது போராட்ட உணர்வோடு கூடிய போர்க்குணமா ?



         ஒரு தாய் அவளின் குழந்தையிடமிருந்து பிரித்து வைக்கப் பட்டபின் அது பசி கொண்டு அழுகின்றது . இப்போது அதற்கு ஏதாவது ஒரு பால் புகட்டப்படும் போது அழுகையை நிறுத்தி ,அதை பருகி ஜீரணித்து வாழ தொடங்கினால் அது சராசரிப் போர்க்குணம் . இது அணைத்து விலங்குகளுக்கும் பொதுவானது .ஆனால் தனது சொந்தத் தாயே தனக்கே உரிய தாய்ப்பாலை தரும்வரை ஒரு குழந்தை  வீரிட்டு கதறி அழுவது சற்று வித்தியாசமானது இதுதான் போராட்ட உணர்வோடு கூடிய போர்க்குணமாகும்  . ஒரு சராசரி மனிதனுக்கும் தெளிவான  இஸ்லாமிய வாதிக்கும்  இடையிலான வித்தியாசம் இதுதான் .

Sunday, August 25, 2013

வருமுன் காக்க நினைக்கிறதா சியோனிசம் ?



           தேசிய எல்லைகளைக் கொண்ட பிரித்தாளும் கொள்கை மூலமே மத்திய கிழக்கின் இலாப அறுவடைகளை குப்ரிய மேலாதிக்கங்கள் சாதித்து வருகின்றது . இந்த நவகாலனித்துவ சிறைப்படுத்தளின் பின்னரே மிகப் பக்குவமாக யூதன்  எனும் நாசகார கங்காணியும்  அங்கு வரலாற்று நியாயங்களோடு  குடியமர்த்தப் பட்டான் .

                          இதே பிரித்தாளும் கொள்கையில் இருந்தே சியோனிச இஸ்ரேல் 
தனது பலத்தையும் இருப்பையும் பாதுகாத்து வருகிறது . இதற்கான இராணுவ offensive எல்லைகளாக எகிப்து ,சிரியா ,ஜோர்தான் என்பன காணப்பட விரிந்த சிந்தனா எல்லையில் மதச் சார்பின்மை எனும் diffidence   அரசியல் முஸ்லீம் உம்மாவிடம் இருந்து இஸ்ரேலை பாதுகாக்கின்றது என்பதுதான் தெளிவான உண்மையாகும் .

Friday, August 23, 2013

இரசாயன தாக்குதலினால் எப்படி ஒரு மனிதன் துடிதுடித்து மரணிப்பான்?..... (சிரிய அரசின் தாக்குதலில் தவிக்கும் எம் சகோதர உயிர்கள் )









சிரியாவின் இரசாயன ஆயுதப் பிரயோகம் சொல்லும் செய்திகள். (ஒரு கணிப்பு.)

          சிரியாவின் இரசாயன ஆயுதப் பிரயோகம் பசர் அல் அசாத்தின் உண்மை நிலையை  மீண்டுமொருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளது . அத்தோடு மேற்கின் பக்குவமான முதலைக் கண்ணீரும் அதன் மீடியாக்களால் இதன் விடயத்தில் வடிக்கப் பட்ட நிலையில் இந்த சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட இராணுவ அரசியல் பற்றிய பார்வைகள் இதன் மூலம் மறைந்து போகின்றது .

          பசர் அல் அசாதின் தரப்பு குறித்த ராக்கெட்டுகளை தான் ஏவவில்லை என மறுப்பதுடன் வேண்டுமானால் அதுபற்றி ஆய்வு செய்ய சர்வதேச சமூகத்தை வேண்டியுமுள்ளது  .சம்பவம் இடம்பெற்ற பகுதி தலைநகர் டமஸ்கசின் மாகாண எல்லையான Ghouta என்ற பகுதியே

இது ஒரு 'தாகூதிய' செருப்பு பற்றிய அறிமுகம் .


  இப்னு சலூல் தொடங்கி இப்னு சபாவை ஊடறுத்து முஸ்தபா கமால் வரை இந்த முஸ்லீம் உம்மா துரோகத்தின் வடிவங்களை நிறையவே கண்டு வந்துள்ளது .குப்ரிய 'தாகூத்' களோடு கூட்டுச் சேர்ந்து அந்த எதிரி காலில் செருப்பாய் மாறி' பாசிசம்' புரியும் சிரியாவின்' அசாத்' எகிப்தின் 'சிசி' என இந்த துரோக வரலாறு இரத்த தாகத்தோடு முஸ்லீம் உம்மத்தை துரத்துகின்றது .அந்த வகையில் எகிப்தில் முஸ்லீம்  இரத்தம் குடிக்கும் ஒரு காட்டேரியை  பற்றிய ஒரு பதிவை கீழே தருகிறேன் . 

Thursday, August 22, 2013

என் கேள்விக்கென்ன பதில் !?



          இது ஜனநாயகத்தின் கோவிலாம் !குட்டிக் கடவுள்கள் அடிக்கடி இங்கே கூத்தாட்டமும் வைத்துக் கொள்ளும் ! இது அவசியம் போல் காட்டப் படும் குட்டிச் சுவர் .இதில் சந்தனம் நுழைந்தாலும் சாக்கடையை பெரும்பாலும் சுமக்க வேண்டும் .கொள்கைக் 'கன்று' களாய் இங்கு சென்றவர்கள் கூட மலம் உண்ணும் பக்குவத்தில் மாற்றப் படுவர் ! மக்களால் ,மக்களுக்கு மக்களுக்காக எனும் மதிமயக்கும் தந்திரத்தால் வேலிபோட்ட இந்த மாக்களின் பண்ணையில் காளை மாடுகளும் அடிக்கடி வார்த்தை ஜாலங்களால் கன்று போட்டு பால் கொடுக்கும் !

டமஸ்கஸ்ஸில் சிரிய இராணுவம் 'விஷவாயுவினை' உபயோகித்து தாக்குதல் !! 1300 பேரிற்கு அதிகமானவர்கள் பலி.



டமஸ்கஸ்ஸில் தம் பரம வைரிகள் நுழைவதை தாங்க முடியாமல் பஸர் அல் அஸாதின் இராணுவம் முஸ்லிம் போராளிகள் தாக்குதல்களை மேற்கொள்ளும் கள முனைகள் நோக்கி விஷ வாயு குண்டுகளை கொண்டு தாக்கியுள்ளது. கடந்த புதன்கிழமை (21 / 08/2013)இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. டமஸ்கஸ் மாகாணத்தின் Ghouta மாவட்டத்திலேயே இந்த நச்சு குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிகாலையில் நடாத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் பரிதாபகரமாக தங்கள் உயிரை இழந்துள்ளனர். மக்கள் நெருக்கம் மிக்க Jobar பகுதியில் இந்த குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன. டமஸ்கஸ்ஸிற்கு 03 கிலோ மீட்டர் தொலைவிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விஷவாயு குண்டுகளை ஏந்திய முனைகளை ரொக்கட்களில் பொருத்தியே இந்த தாக்குதல் நிகழ்த்ப்பட்டுள்ளது. 


சிரியா இரசாயன ஆயுதப் பிரயோகம் ! காணொளிகள் ...









Tuesday, August 20, 2013

எகிப்திய தேசத்தின் மாற்றங்கள் - அரசியல் ஆழங்களை ஆராய்தல்!!


எகிப்திய இராணுவ ஆட்சி இரத்தம் தோய்ந்த ஒடுக்குமுறைக்கு மத்தியில் இராணுவச் சட்டத்தை அமுலாக்கியுள்ளது
எகிப்திய ஆளும் வர்க்கத்தின் முயற்சிகளின் இரக்கமற்ற தன்மைக்கு நிரூபணமாக நேற்று இராணுவ ஆட்சிக் குழுவால் இரத்தம் தோய்ந்த படுகொலை மற்றும் அவசரகால ஆட்சி ஆகியவை எகிப்தில் நடைமுறைபடுத்தப்பட்டது என்பதுடன், வாஷிங்டன் மற்றும் ஐரோப்பாவில் உள்ள அதனுடைய ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் எகிப்திய புரட்சியை குருதியில் மூழ்கடிப்பது என்ற இரக்கமற்ற தன்மைக்கும் இது நிரூபணமாக உள்ளது.

Saturday, August 17, 2013

நாங்கள் யார்? எமக்கு ஏன் இந்த நிலை?


                குப்ரிய ஆதிக்கப் பேய்களின் வெறியாட்டம் அரசியல் ,இராணுவ பொருளாதார வடிவங்களில் இந்த முஸ்லீம் உம்மாவின் இயல்பு வாழ்க்கையோடு உலகெங்கும் தொடர்ச்சியாக மோதிக் கொண்டே இருக்கின்றது .நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  இந்த அதிகார மமதை மிக்க கசாப்புத் தத்துவத்தில் முஸ்லீம் உம்மாவின் உயிர் ,உடமை ,உரிமை , எல்லாவற்றிலும் 'தாகூத்திய ' அடங்காப் பிடாரிகள் தம் கைவரிசையை தாராளமாக காட்டி நிற்கின்றனர் .

Friday, August 16, 2013

இலட்சியவாத போராட்டமா ? பெரும்பான்மையின் தீர்ப்பா ?

     
     ஒரு இலட்சியவாதி தனது வாழ்வில் எத்தகு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்ட போதும் தனது இலட்சியத்தை விட்டுக் கொடுக்காத மரண பயத்தை தாண்டிய போராட்ட உணர்வு கொண்டவனாகவே இருப்பான் . இப்போது அவனது மரணத்தில் கூட அவன் சுமந்த இலட்சியம் வாழவேண்டும் என்ற ஒரே எதிர்பார்ப்பு தவிர வேறு எதுவும் எஞ்சியிருக்காது .அவனது குரல்வளை மிதிக்கப் படும்போதும்  வெளிப்படும் வேதனை முனகல் கூட இலட்சியமாகவே இருக்கும் . இங்கு சிறுபான்மை பெரும்பான்மை ஒரு விடயமே அல்ல .

சோமாலியாவில் அஷ்-ஷபாப் முஜாஹித்களின் ஈத் தொழுகை - கருப்பு மனிதர்களின் வர்ணமிகு பெருநாள் !!





ர்வதேச பிறையா, லோக்கல் பிறையா என நாம் இங்கு எழுத்து யுத்தம் செய்து கொண்டிருக்கும் அதே பொழுதுகளில் ஆபிரிக்காவில் அது அற்புதமாக கொண்டாடப்பட்டுள்ளது.  பெருநாள் என்பது ஒரே விதமானதே. தேசத்திற்கு தேசம், பிராந்தியங்களிற்கு பிராந்தியம் இந்த பெருநாள் வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அஷ்-ஷபாப் போராளிகள் சோமாலியாவில் மீண்டும் ஒரு ஈத் பெருநாளை சந்தோஷகரமாக கொண்டாடியுள்ளார்கள். அந்த வண்ணமிகு காட்சிகளை காண கிளிக் செய்யுங்கள்

மீண்டும் வருகிறது அந்த சத்திய வசந்தம் .! அல்லாஹு அக்பர் ....







சிரியாவின் அலிபோவில் Ahbab Al Mustafa Brigade தனது போராளிகளிற்கு பயிற்ச்சி வழங்கும் காட்சிகள்..


இஸ்லாத்தில் பெண்கள் சமைப்பதற்கும் சிற்றின்பத்திற்கு மட்டுமே வைத்திருக்கப்படுகிறார்கள் என பிரச்சாரம் செய்யும்  குப்பாரிய ஊடகங்களிற்கு இது சமர்ப்பணம். !!



சிறிய ரக ஆயுத கையாள்கை பற்றிய பயிற்ச்சிக்கு முன்னரான விளக்க வகுப்பு

வார்த்தைகள் சொல்லாத உண்மைகள் காட்சிகளாக ..!!




சில விடயங்களை வார்த்தைகள் வைத்து விளக்க இயலாது அவ்வாறு கருதி நமது அமைதியை எதிர்த்து உலகம் முழுவதும் சில நன் மக்கள் விளக்கம் கொடுத்த காட்சிகள் நான் எனது கண்களுக்கு பட்டவைகளை மட்டும் உங்களுக்கு விளக்குகிறேன் என் நண்பர்களே உங்களது பணிகளை சிறிது முடக்கி இதன் நோக்கத்தை நிறைவு பேச செய்யுங்கள் நீங்களும் இதனை கண்டு உங்களால் முடிந்தால் உங்களது பதிவுகளிலும் இதனை பதிந்து இதனை உலக முஸ்லீம்களின் கண்களுக்கு கொண்டு செல்லுங்கள் இவ்வாறு அறியாமை சமூகத்திற்கு நமது சமூகத்தின் நிலையை பற்றி எடுத்துரைப்பது ஒவ்வொரு முஸ்லீமின் கடமை

ஒன்று படுவோம் வெற்றி பெறுவோம் !


         எவ்வளவு காலம் !? அசத்திய இராணுவ 'பூட்சுகளால் ' 
சத்தியத்தின் காவலர்களது கழுத்தை மிதித்தது !? இப்போது 
பதில் சொல் இது இறைவனின் அணி முஹம்மதின் படை !
தேசிய விலங்கிட்டு கோடரிக் காம்புகளை தலைவர்களாக 
எம் தலையில் கட்டி திட்டம் போட்டு விளையாடிய 'தாகூதிய '
சர்வாதிகாரங்கள் இனி சரியும் என்ற சுப செய்தியை இன்று 
பற்றிஎரியும் 'ஷாம்' முதல் எகிப்து வரை சொல்லி நிற்கின்றது !

ஆளுக்கொரு பிறை ,நாளுக்கொரு பெருநாள்!!!

 


          அவர்கள் அல்லாஹ்வை விடுத்தும் தம் அறிஞர்களையும் , துறவிகளையும் , மர்யமுடைய மகன் ஈசா மசீஹையும் தம் கடவுள்களாக்கி கொண்டனர் ; அவர்கள் ஒரே இறைவனை வழிபட வேண்டும் என்றே கட்டளை யிடப்பட்டனர் . அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை .அவர்கள் கற்பிக்கும் இணைகளை விட்டும் அவன் (அல்லாஹ் ) தூயவன் ஆவான் .

                                                                                  (சூரா அத்தௌபா : வசனம் 31)

Thursday, August 15, 2013

ஒரே பிறை பல பெருநாள் !!!






(கொழும்பு கிரான்பாஸ் மஸ்ஜித் உட்பட 24 மஸ்ஜித்கள் மீது இதுவரை கைவைக்கப் பட்டுள்ளது.புத்தகாயாவில் வெடித்த குண்டுக்காக பீரிட்ட உலமா சபையின் கண்டனச் சீற்றத்தின் ஒரு துளியாவது இலங்கை மஸ்ஜித் விவகாரங்களில் வெளிப்படவில்லை ! ஆனால் கண்ட பிறையை வானிலை ஆய்வுகளை முன்னிறுத்தி மறுக்கும் துணிவு மட்டும் மிக அற்புதமாக வெளிப்பட்டுள்ளது !? இலங்கை முஸ்லீம் உம்மாவை சர்வதேச முஸ்லீம் உம்மாவை விட்டும் பிரித்து தாம் அதன் 'பஞ்சாயத்து' போர்ட் ஆகி சிங்கத்தின் வேலிக்குள் கன்றுக் குட்டிகளாக முஸ்லீம் உம்மாவை குடியிருக்க வைக்க விரும்பும் அடிவருடிக் குள்ளநரிகளை இனம் காண இந்த பிறை விவகாரம் ஒரு நல்ல சந்தர்ப்பமே )

Friday, August 9, 2013

ஈராக்கில் பிறந்த குழந்தையிது - “ஒப்பரேஷன் பலூஜா” தெரியுமா சகோதரா ? ”




யுத்தம் தன் வங்கிக்கணக்கில் வரவு வைத்த இன்னொரு உயிர் இது. ஈராக்கின் பலுஜாவில் ஜுலை 25, 2013-ல் பிறந்த குழந்தை இது. இந்த குழந்தையின் சகோதரன் 2004-ல் பிறந்து 13 நாடகள் மட்டும் வாழ்ந்து மரணித்தது. இவர்களது குடும்த்திலோ அல்லது பரம்பரையிலோ இவ்வாறான குழந்தைகள் இதற்கு முன்னர் அதாவது அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு முன்னர் பிறந்ததேயில்லை.

சரியான விடையை தெரிவு செய்க?





வினா இலக்கம் 01
இலங்கை வாழ் முஸ்லீம்களில் ஒருவராகவும், சர்வதேச முஸ்லீம் உம்மாவின் அங்கமாகவும் இருக்கின்ற நீங்கள் நேற்றைய தினம் (வியாழன் 07-08-2013) அன்று

1) நோன்பாளியாக இருந்தேன்.
2) நோன்பும் இல்லை, பெருநாளும் இல்லை என்றிருந்தேன்.
3) பெருநாள் கொண்டாடியவனாக இருந்தேன்.

பதில் ???????

குறிப்பு :- 
பதிலின் அடிப்படையில் 1.சூழ்நிலை வாதி 2.விலாங்கு மீன் 3.இஸ்லாமிய வாதி !!! அப்படியா முடிவு ? இது சுத்த மோசமான கேள்வி .

பிறைப் பிரச்சினை - குற்றம் யார் மீது?

VS


(இது  ஒரு நபி மார்களின் வாரிசு! இன்னொரு நபிமார்களின் வாரிசுக்கு!! இலங்கையின் பிறை விவகாரத்தில் கொடுத்த பதிலின் சுருக்கம் .)

றிஸ்வி முப்தியின் உரை தொடர்பான விமர்சனப்பார்வை!

“வினா இது தான்: வானவியல் நுட்பங்களை அறிந்த சர்வதேச மற்றும் உள்ளுர் நிபுணர்களின் வழிகாட்டலுக்கேற்ப இலங்கையில் புதன் மாலை வெற்றுக்கண்களுக்கு பிறை தெரிவதற்கான வாய்ப்பே இல்லாதிருந்தால் பிறை தீர்மானிக்கும் மாநாட்டை அன்று ஏன் கூட்ட வேண்டும்? பிறை பார்க்குமாறும் பிறை கண்டால் அறியத்தருமாறும் மக்களுக்கு ஏன் வேண்டுகோள் விடுக்க வேண்டும்?

இதனைவிட புதன் மாலை மாநாட்டைக் கூட்டி வியாழன் பிற்பகல் ஒரு மணிக்குக் கொடுத்த விளக்கத்தை அப்போது கொடுத்திருக்கலாமல்லவா. அல்லது செவ்வாய் பின்னேரம் மாநாட்டைக் கூட்டி இந்த விளக்கத்தைக் கொடுத்த பின் புதன் மாலை பிறை தீர்மானிக்கும் மாநாடு நடைபெறமாட்டாது என்பதை அறிவித்திருக்கலாமல்லவா? அப்போது ஊர் மட்டங்களில் தீரமானமெடுக்கும் பொறுப்புதாரிகள் ஜம்இய்யதுல் உலமாவின் முடிவுடன் பெரும்பாலும் உடன்பட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கலாம். சமூகத்தில் ஏற்பட்ட குழப்பங்களையும் தவிர்த்திருக்கலாம்.”

Thursday, August 8, 2013

ஓ முஸ்லீம் உம்மாவே ! நாங்கள் கண்ணியமானவர்களா ? இழிவானவர்களா ?


                         வெறும் உலகியல் வெற்றிகளில் வாழ்வை தேடும் சராசரி மனிதன் அல்ல முஸ்லீம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் . எமது இழப்புகளிலும் இறை திருப்தியை மட்டுமே தேடும் இலட்சிய வாதியே முஸ்லீம் . அல்லாஹ்வின்  பாதையில் உறுதி கொண்ட உள்ளத்தோடு போராடி அந்த குருதி தேய்ந்த உடலோடு " என்னுடைய ரப்பே ! இதோ உனக்காக என்னை அர்ப்பணித்தேன் ; உனது 'தீன்' மேலோங்க (வாழ்வதற்காக மரணித்துக் கொண்டிருக்கும்  உலகில்) 'சஹாதத்துக்காக' வாழ ஆசை வைத்தேன் !இதோ அதை பெற்றுக் கொண்டேன் ! இன்னும் ஓராயிரம் தடவை இந்த அற்புத சுகத்தை பெரும் வாய்ப்பை பெற என்னை மீண்டும் மீண்டும் உலகத்திற்கு அனுப்பு நானே !"என்று கூற வேண்டும் எனும் ஒரே இலட்சியமே முஸ்லிமிடம் இருக்க வேண்டும் .

அஷ் ஷாம் கடந்த ரமழான் பொழுதுகளில் .....


                  என் சகோதர சகோதரிகளே !கண்ணியம் நோக்கியே நாங்கள் அழைக்கிறோம் .நாம் சந்தித்ததை ,சந்திப்பதை இதோ உங்களுக்காக சொல்கிறோம்.  இது இந்த உம்ம்மத்தின் உயிரோட்டமான ஒரு தியாகக் களத்தில் இருந்து வரையப்படும் வார்த்தைகள் .

Wednesday, August 7, 2013

கிலாபத்தைப் பற்றி இப்போது ஏன் பேச வேண்டும்?

அகீதாவை நோக்கி அழைப்போம். சரியாகச் சொன்னீர்கள். அகீதா தான் முதல் கட்டப்பணி இது தான் நபி வழியும் கூட.நாம் எடுக்க வேண்டிய முதல் முயற்சியும் இது தான்.

இஸ்லாம் பூரணத்துவமாகிவிட்டது. ஆனால் இஸ்லாத்தின் பூரணத்துவம் ஏட்டில் தான் இன்று இருக்கின்றது.ஏட்டில் இருக்கின்ற சட்ட திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்கான வழி முறைகளையும் காட்டித் தந்த மார்க்கம் இஸ்லாம் மாத்திரம் தான்.

முஸ்லிம் உம்மத்தின் பலமும் அவர்களது இன்றைய நிலையும்!






1924 ஆம் ஆண்டுவரை முஸ்லிம் உம்மத் ஒரு தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்து இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னர் 50 இற்கும் மேற்பட்ட தேசங்களாக காலனித்துவ வாதிகளால் துண்டாடப்பட்டது.

முஸ்லீம் பெரும்பான்மை நிலம் முதல் சிதறிவாழும் நிலம் வரை இதோ இன்னொரு 'ஈத் முபாரக் '!


             மனித அடிமைத்துவத்தில் முஸ்லிமை  மறுபிரவேசம் புரிய வைத்த அந்த 1924 இல் கிலாபத்தின் வீழ்வோடு  பல ரமழான்கள் 'ஜாஹிலீய ' அதிகாரங்களின் கீழ் கடந்து போக, வழமை போலவே புத்தாடை உடுத்தி புதுப் பொழிவோடு அசத்திய  வீதிகளில் தொடர்ந்தும் பயணிக்கும்  இந்த உம்மத்தின் அவல ஊர்வலங்களுக்கு வயது இன்று 90. இந்த அரசியல் அநாதைகளுக்கு இது இன்னொரு பெருநாள் !

Friday, August 2, 2013

சிரிய சமர்க்களம் 2013 (விண்ணை நொறுக்கி மண்ணை கிழித்து தாகூத் படையை அழித்திடுவோம் .)


மீண்டும் மீண்டும் தாகூதிய எல்லைக்குள் ஓட்டப் பட்டு விடுகிறோம் ஏன் ? ('தாகூத்கள் ' ஒரே விதம் அதன் (action)'அக்சன்கள் ' பலவிதம் ! பகுதி 3 )

"(இஸ்லாம் எனும் இந்த )தீனில் எந்த கட்டாயமோ நிர்ப்பந்தமோ (அதைப் பின்பற்றாதோர்க்கு )இல்லை .வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது .இனி எவர் 'தாகூத்தை ' நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் திட்டமாக ,மிகப் பலமான பிடிமானத்தை பற்றிக் கொண்டார் . அது என்றுமே அறுந்து விடாது .(அவர் தன்னுடைய ஆதரவாளனாக தேர்ந்து கொண்ட ) அல்லாஹ் (யாவற்றையும் ) செவியுறுவோனும் ,நன்கறிந்தோனுமாக இருக்கின்றான் . "