Wednesday, March 6, 2013

எங்கள் நிலமும் இன்திபாதாவை நோக்கி...


யா யாஸீன்......................

உங்கள் தேசம் இரத்தத்தினால்
   யஹுதிகளால் குளிப்பாட்டப்படுகிறது.

நிலத்தில் சிந்திய இரத்தத்தின் அச்சத்தில்
   குழந்தைகள் கூட சிறுநீர் கழிக்க   மறுக்கின்றன இங்கே.

யஹுதியின் “மர்கபா” டாங்கிகள்
   உங்கள் வாசல் வரை வந்து விலாசம் தேடுகின்றன

எதிரி சாவகாசமாக எல்லையில் நின்று குண்டு போட
   எம் எல்லைக்குள் அரபு தேச எஜமானரின் பூட்ஸ் லேஸ்
கூட உள் நுழைய அச்சப்படுகிறது.
எதிரி எங்கள் தலைகளை குறிவைத்தான்
   எதிரி எங்கள் குரல்களை குறிவைத்தான்
இப்போது அவன் எங்கள் சுரங்க பாதைகளை
   குறிவைக்க தயாராகிறான் மெதுவாக...

அராபியாவின் சோமாலியா தான் நாளைய காஸா.
   கலஷ்னிகோவ் மடியில் கிடந்தும் அதனை
லோட் செய்ய இயலாத, பலமற்ற போராளிகளாக
   நாங்கள் மாற்றப்பட போகிறோம்.

வறுமை, பசி, பஞ்சம், என காஸாவின் அடையாளங்களை
   நாளை யூத மீடியாக்கள் படம் போட்டு காட்டும். ..
அப்போது மாட்டிறைச்சியும் பேரீச்சம் பழமும்
   எம் அராபிய மன்னர்களால் அனுப்பி வைக்கப்படும்
எங்கள் துயர் துடைக்க. அதனை நாளை அரபு ஊடகங்கள் காட்டும்


பழகிப்போன இஸ்ரேலின் ஷெல் வீச்சு சத்தத்தில்
   எங்கள் குழந்தைகள் கண்னயர்கின்றன.
நாங்கள் செய்வது ஜிஹாது இல்லை என கூப்பாடு போடும்
   ஸலபிகளின் ஓலத்தில் எங்கள் குழந்தைகள்
 மீண்டும் கண் முழிக்கின்றன....

யா ........யாஸீன்......

எங்களிற்கு இன்திபாதாவை கற்றுத் தந்த நீங்கள்
   இடைவழியில் அதனை எம்மிடம் விட்டு சென்றுவிட்டீர்கள்.
ஆனாலும் நாம்...
   போராடுகிறோம். இறைவனின் உதவியை மட்டும் நம்பி....

No comments:

Post a Comment