Sunday, March 16, 2014

மத்திய ஆபிரிக்க இன அழிப்பு ... சில அடிப்படை உண்மைகள் .

       தன்னிறைவையும் ,தமக்கு நிகரான வல்லாதிக்க தரத்தையும் எதிர்வு கூறக்கூடிய அரசியல் சூழலையும் ,அதன் பலத்தையும் தயவு தாட்சண்யம் இன்றி அழிப்பதும், கட்டுப்படுத்துவதும் கிறிஸ்தவ ஏகாதிபத்திய மேற்குலகின் அடிப்படை 'அஜண்டா' வாகும். இப்போது இந்த வரிசையில்
'மத்திய ஆபிரிக்க குடியரசின் முஸ்லீம் இன அழிப்பின் அடிப்படை அரசியல் இதற்கு நல்ல உதாரணம் ஆகியுள்ளது .

         சிரியாவிட்காக முதலைக் கண்ணீர் வடித்து ஏமம் கேட்ட  U.N எனும் முதலாளித்துவ திருச்சபை ,ஏறத்தாழ 140,000 மனித உயிர்கள் மிகக் குறைந்த காலப்பகுதியில் வெறும் 700 ஆக இனத் துடைப்பு செய்யப்பட்ட பின்னரும் ,மௌனியாக வேடிக்கை பார்ப்பதில் இருந்து இவர்களின் கபட முகத்தை நேர்மையான ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து கொள்ளலாம் .

       ஆபிரிக்கா என்றவுடன் உலகின் கண்களுக்கு காட்டப்படுவது ,வறுமை ,இனமோதல் ,கோத்திரச் சண்டை , போசாக்கின்மை என்ற சில விபரங்கள் தாம் ஆகும் . ஆனால் இவைகள் எல்லாம் காலனியாதிக்க கபட அரசியலின் திட்டமிட்ட சதிகளின் விளைவுகளே ஆகும் . மனித உயிர்களோடு அற்பமாக விளையாடும் இந்த வல்லரசு பொறியில் நிரந்தரக் குறியாக முஸ்லீம்கள் மாறியுள்ள அரசியல் புரியப்பட வேண்டும் .

        முதலாளித்துவ மேற்குலகை பொறுத்தவரை மத்திய கிழக்கு மற்றும் ,ஆபிரிக்க பெருநிலம் தொடர்பில் ஒரு தெளிவான நிலைப்பாடு இருக்கிறது .அது என்ன விலை கொடுத்தாவது இப்பகுதிகளில் தமது ஆதிக்க அரசியலை பலப்படுத்துவது . அதன் காரணம் அந்த நிலத்தின் கீழ் உள்ள பெறுமதி கணிப்பிட முடியாத கனிய வளங்களே ஆகும் .

        வல்லரசு என்ற நிலைப்பாட்டில் பிறரில் தங்கி வாழாமை என்பது அடிப்படையான விடயம் . இந்த நிலையில்  சக்திவளம் ,மற்றும் விவசாயம் மற்றும் யுரேனியம் போன்ற முக்கிய வளங்களை மிக பாரிய அளவில் தன்னுள் வைத்திருக்கும் நிலத் தொகுதிகளை ஆதிக்கப்படுதுவது அவசியமானது . இந்த சுரண்டல் பார்வையில் அப்பாவி சிவிலியன்கள் சல்லடை ஆக்கப்படுவது ஒரு கொடூர அரசியலே.இந்த அவலத் தொடர் கதையின் புதிய வெளியீடு மத்திய ஆபிரிக்க குடியரசு .

       நிறவெறி ,மற்றும் இன ஒதுக்கல் பார்வை காரணமாக ஆபிரிக்க மக்களால் இஸ்லாம் மிக விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளப்படுவது அன்றாட நிகழ்வு . கிறிஸ்தவ மிசனரிகளால் சாதிக்க முடியாத மாற்றத்தை இஸ்லாம் அரசியல் அதிகாரம் அற்ற நிலையிலும் சாதித்து இருப்பது சிலுவை சித்தாந்திகளால் சகிக்க முடியாததே .எனவே ஏகாதிபத்திய மௌன ஆசீர் வாதத்துடன் முஸ்லீம்  இனத்துடைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

        ஏகாதிபத்திய பக்கசார் நிறுவனங்களின் அடக்க முடியாத ஒரு எதிர்நிலைக்கான சாத்தியப் பாடுகளை இன்று ஆபிரிக்க பெருநிலம் காட்டி வருகிறது . அது நாளைய மத்திய கிழக்கின் மறு உதயமாக பரிணமிக்க இருக்கும் கிலாபா சாம்ராஜியத்துடன் அங்கு பறந்து வாழும் முஸ்லீம்கள் தோள் கொடுத்தால் ? சக்தி வளத்தோடு , கனிய வளங்களை தன்னகத்தே கொண்ட இஸ்லாமிய சாம்ராஜ்யம் தவிர்க்க முடியாத சவாலாக மாறும் என்பதில் சந்தேகமில்லை .

           இந்த உண்மையை 'மைக்ரோ ரிப்போர்ட்' ஆக கிறிஸ்தவ ஏகாதிபத்திய உளவுத்துறை எதிர்வு கூறியதன் அச்சம் இந்த இன அழிப்பில் தெரிகிறது . கத்தியை எடுத்து முஸ்லிமின் கழுத்தை சீவுவதால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என நினைத்தால் ....அந்த தவறுக்காக வருந்தப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை .

No comments:

Post a Comment