Sunday, March 2, 2014

பத்துவா பீரங்கிகளின் வைரஸ் குண்டுகள்! முஸ்லீம் உம்மாவே எச்சரிக்கை !


                                  
       கிலாபா அது வீழ்த்தப்பட்ட பின் அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது !
மீண்டும் அதை கட்டி எழுப்ப சில மனிதர்கள் இயக்க கட்டமைப்போடு
எழுந்த வரலாறு 1924 ம் ஆண்டுகளின் பின் தொடங்கியது ! சில
இயக்கங்கள் மக்கள் மத்தியில் செல்வாகுப்பெற்றன .ஆனால் இலக்கை
மிகச்சரியாக வரையறுத்தவர்கள் அதன் பாதையினை சுன்னாவிலிருந்து
வரையறுக்கவில்லை ! விளைவு இலக்கை அடைய எதையும் பயன்
படுத்தலாம் என்ற தவறான முன்மாதிரி இஸ்லாத்தின் அரசியல்
என்ற நிலைக்கு முஸ்லிம் உம்மா சிந்திக்கவைக்கப்பட்டது .துருக்கி ,எகிப்து
போன்ற நாடுகளில் இத்தகு இஸ்லாமிய இயக்கங்களால் அரசியல் அதிகாரம்
கைப்பற்றப்பட்டது இத்தகு நிலைப்பாட்டால் தான்.

    இஸ்லாத்தின் எதிரிகளுக்கு இந்த பாதை நல்ல வாய்ப்பாக ஆகியது அதாவது
தங்களது சரக்குகளை இஸ்லாத்தின் பெயரால் அறிமுகப்படுத்த இஸ்லாமிய
இயக்கங்களே பயன்படுத்தப்படலாகின !! இந்த இஸ்லாமிய இயக்கங்கள்
அந்த குப்ரிய சரக்குகளை இஸ்லாத்தில் இருந்துதான் குப்பார்கள் எடுத்தார்கள்
என்ற புதிய விளக்கத்தையும் !! முன்வைத்து இஸ்லாத்தின் எதிரிகளோடு
சமரசமானார்கள் .

         இதன் விளைவே இஸ்லாமிய ஜனநாயகம் & இஸ்லாமிய
குடியரசு எனும் கோட்பாடுகளாகும் .வெளிப்படையில் நல்ல விடையமாகவும் ,தீர்வாகவும் தெரிந்தாலும் .சிவில் கிரிமினல் சட்டம் என்று வரும்போதும் ,
சர்வதேச உறவு எனும் போதும் காலத்தின் தேவை , மனித உரிமை , கருணை ,நாகரீகம் எனும் போர்வையோடு இஸ்லாமிய 'ஷரீயா' வுடன்

        இஸ்லாத்தின் எதிரிகள் தளர்வை வேண்டும் போது புரிந்துணர்வு அடிப்படையில் இந்த இஸ்லாமிய இயக்கத்தின் உள 'மாக்கள்' தமது விசுவாசப் பீரங்கிகளை முழக்குவார்கள் !! குப்பார்களின் சிந்தனைப்போரின் வைரஸ் சுமந்த இந்த பத்துவா குண்டுகள் முஸ்லிம் உம்மாவின் மத்தியில் வெடித்து அந்த வைரசை பரப்பும் !! மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதிப்பது போல் முஸ்லிம் உம்மாவின் நிலை என்றும் பரிதாபம் தான் .


No comments:

Post a Comment