Thursday, March 27, 2014

ஒரு உறையில் பல வாள்கள் !! 'பைஅத்' சாத்தியமா !?



          கிலாபா எனும் இறைவன் வகுத்து தந்த அதிகார அரசியலுக்கு கட்டுப்படுவதும் ,அதன் ஏகோபித்த தலைவரான கலீபாவிட்கு ('பைஅத்'  )உறுதிப்பிரமாணம் கொடுப்பதும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அடிப்படைக் கடமையாகும் . இந்த 'பைஅத்' தொடர்பாக வரும் ஆதார பூர்வமான நபி மொழிகள் பிரகாரம் இந்த விடயம் அகீதா சார்ந்ததாகும் .

    அதாவது திட்டவட்டமான (முதவாதிரான ) வஹி அறிவிப்புகள் பிரகாரம் முன் வைக்கப்படும் எந்த விடயமும் அகீதா சார்ந்தது. இது இஸ்லாமிய பிக்ஹ் துறை இமாம்களில் அதிகமானோர் ஏற்றுள்ள நடைமுறையாகும் . இதில் கருத்து வேறுபாடு கொள்வதோ ,புறக்கணிப்பதோ பாரிய குற்றமாகும் .

        கிலாபா என்பது அதன்கீழ் கட்டுப்பட்டு வரும் முஸ்லீம்கள் ,முஸ்லீம் அல்லாதோர் தொடர்பில் ,அவர்களது அடிப்படை உரிமைகள் ,பாதுகாப்பு , அடிப்படை வசதிகள் ,சேவைகள் தொடர்பான பகிர்வுகள் விடயத்தில் பூரணமாக பொறுப்பு சொல்லவேண்டிய ஒரு அதிகார அரசியல் ஆகும் .வெறுமனே இராணுவ வலிமையை முன்னிறுத்தி சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அங்கு 'சரீஆ' சட்டத்தை அமுல் படுத்தும் வடிவத்தை கிலாபா எனும் விரிந்த அரசியல் குறித்து நிற்காது .

   கிலாபா அரசில் இராணுவம் ஒரு மிக அவசியமான பகுதி என்பதில் சந்தேகம் இல்லை .இஸ்லாமிய தவ்வா வை கொண்டுசெல்லும் பாதையில் குப்ரியத் தடைகளை தகர்ப்பதற்கும் , (தாருல் இஸ்லாம் ) இஸ்லாமிய நிலம் ,மற்றும் முஸ்லீம் உம்மத்தின் பாதுகாப்பு தொடர்பில் ,இஸ்லாமிய இராணுவம் மிகுந்த கடப்பாடு உடையது . ஜிஹாத் பர்ளுஐயின், பர்ளு கிபாயா எனும் ரீதியில் அந்த இஸ்லாமிய இராணுவத்துக்கு பூரண ஒத்துழைப்பு தேவைக்கு ஏற்ப வழங்கும் கடப்பாடு ,அந்த கிலாபா அரசுக்கு கட்டுப்பட்டு வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு .

       ஆனால் இதற்கும் ஒரு இஸ்திர அரசற்ற நிலையில் ஒரு போராடும் முஸ்லீம் ஆயுத குழுவிற்கும் இடையில் பலத்த வித்தியாசம் உள்ளது . இன்னும் இத்தகு அமைப்பு தானே இஸ்திரமற்ற நிலையில் ,முஸ்லீம் அல்லாதோர் மீது ஜிஸ்யா போன்ற வரிகளை விதிப்பதும் , முஸ்லீம்கள் இடம் 'பைஅத்' வேண்டுவதும் மிகத் தவறானது .

         'பைஅத்' மேலோட்டமான பெயரளவுப் பெறுமானத்தோடு கேட்கப்படவும் கூடாது .; கொடுக்கப்படவும் முடியாது . இத்தகு அரசியல் பார்வையுடன் தான் சில முக்கிய சஹாபாக்கள் கூட அபூபக்கர் (ரலி )போன்ற முக்கிய கலீபாக்களிடம் கூட குறிப்பிட்ட காலம்  'பைஅத்' செய்யாமல் இருந்துள்ளார்கள் .

        ஒரு இஸ்திரமற்ற நிலையில் இருந்து 'பைஅத்' கோரப்படுவதும் ஒரு ஆர்வக் கோளாறு அரசியலாகவே இருக்கின்றது .(ஒரு சில நேரம் முஸ்லீம் உம்மா மீதான ஆர்வத் தூண்டலை நோக்கி இத்தகு ஏற்பாடு செய்யப்படுமாக இருந்தால் அது வரவேற்கத் தக்கது .)ஆனாலும்  சித்தாந்த தெளிவற்ற இத்தகு போக்கு ஒரு போட்டி அரசியலை இஸ்லாத்தின் பெயரால் உசுப்பிவிடும் அபாயத்தையும் அதிகமாக்கலாம் . அது குப்பார்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் உள்ளார்ந்த அழிவு அரசியலாகவும் மாறிவிடும் .

No comments:

Post a Comment