சுன்னாவின் சாயம் பூசி தமது முதலாளித்துவ முகத்தை மறைக்க முயன்றாலும் நியோ சலபிசத்தின் சாயம் அடிக்கடி வெளுக்கின்றது .அந்த வகையில் ஐ .எஸ் மீதான அமெரிக்க கூட்டு யுத்தத்துக்கு சவூதி மன்னரிச பூட்ஸின் அடித்தூசியாக ஒட்டிக்கொண்டுள்ள இலங்கை இளவல்கள் இப்போது அப்பட்டமாக தமது எதிர்ப்பை காட்ட தொடங்கி உள்ளனர் .
ஐ .எஸ் மீதான கருத்து வேறுபாடுகள் ,மற்றும் சர்ச்சைகள் தொடர்பாக இங்கு நான் பிரஸ்தாபிக்க வரவில்லை .அது வேறுவிடயம் .ஆனால் மத்திய கிழக்கில் மன்னரிச பொம்மையாட்சிக்கு ஆப்படிக்கும் இஸ்லாமிய தேடல்களை நிராசை ஆக்கும் அமெரிக்க திட்டத்தின் நேரடி செயல் திட்டங்கள் இப்போது அமுலாகியுள்ள இந்நிலையில் அதற்கு இஸ்லாமிய நியாயம் பூசும் துரோக விளம்பர அரசியலையே இந்த நியோ சலபிகள் செய்து வருகிறார்கள்.
ஐ .எஸ் அமைப்பு சிவிலியன்களை கொல்கிறதாம்.தன்னிச்சையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளார்களாம் .எனவே அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என துண்டுப்பிரசூரம் வெளியிட்டு தமது அமெரிக்க இச்சையை நிர்வாண இஸ்லாமியமாக காட்டிப்பேசும் இந்த கயவர்களின் கபட நாடகம் இனியும் செல்லாது .
ஐ .எஸ் இனது கிலாஷ் நிகோ ரைபிளின் தோட்டாவுக்கு பலியாகும் முஸ்லீம் சிவிலியன்களை விட அமெரிக்க கார்பெட் பம்மிங்க்கில் சிதறிப்போகும் முஸ்லீம் சிவிலியன்களின் எண்ணிக்கை தான் இன்று அதிகமாகும் .இன்னும் சம்பந்தம் இல்லாத ஜபாஹ் அல் நுஸ்ராஹ் அமைப்பும் குறிவைத்து தாக்கப்படுகிறது ! இதற்கு நடுவில் பட்ச்சர் பசர் அல் அசாதின் படைகளும் இந்த கூட்டோடு தமது உத்தியோக பூர்வமற்ற இணைவை தெரிவிக்க இரசாயன தாக்குதல் கூட நடத்தியுள்ளது .
நியாயத்தை பேசும் புண்ணியவான்கள் இதையெல்லாம் கண்டும் காணாமல் விடுவது என்ன நியாயம் !? இந்த அமெரிக்க கூட்டு கொலைகார எதிரிகள் நினைப்பது தூய இஸ்லாம் அரசியல் இராஜ தந்திர சக்தியாக பரிணமிப்பதை தடுப்பதே தவிர ,மக்கள் நலன் அல்ல .அதற்கு ஐ .எஸ் ஒரு 'பெனர் 'மட்டுமே .
சரி இவர்களிடம் ஒரு கேள்வி இன்று அபூபக்கர் அல் பக்தாதியை அயோக்கியனாக காட்டி அமெரிக்க தயவில் அழிக்க துடிப்பவர்கள் .பெஞ்சமின் நேதன் யாகு காசாவில் புகுந்து விளையாடியபோது ,எஞ்சிய வீட்டுக்கு பேரீத்தம் பழம் அனுப்ப கொக்கை போட்டுக் கொண்டிருந்தார்களா !? அப்போது எங்கே போனது இந்த வீர பேச்சுக்கள் !? ஒப்பீட்டளவில் பக்தாதியை விடவும் நெதன்யாகு சிறந்தவரோ !?
இஸ்ரேலை வாழ வைக்கும் அமெரிக்க பொலிடிகல் ஒப்பீசின் துடைப்பம் கட்டைகள் தான் இந்த நியோ சலபிகள் .சுன்னாவை காட்டி இஸ்லாத்தை கூட்டித் தள்ளும் அயோக்கிய அரசியலுக்கு உதவுவதே இவர்களின் ஒரே பணி . நேற்று ஒசாமா பின் லாடன் சோவியத் ரஷ்யாவுக்கு எதிராக செயல்பட்டபோது சலபியாகவும் ,தியாகியாகவும் ,முஜாஹித் ஆகவும் போற்றப்பட்டவர் அமெரிக்காவுக்கு எதிராக அவர் செயல்பட தொடங்கியபோது இஹ்வானியாகவும்,கவாரிஜ் ஆகவும் ரீ
ப்ரோமோசன் கொடுக்கப்பட்டதும் இந்த நியோ சலபுகலால்தான் ஆகும்.
ரஷ்யர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக செயற்பட்டால் அது ஜிஹாதாம் . அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக செயற்பட்டால் அது பயங்கர வாதமாம் !? 'வைட் ஹவுஸ் ' வய்சுக்கு தப்சீர் கொடுக்கும் தரம் கெட்ட அரசியல் பினாமிகளே இந்த நியோ சலபிகள் என்பது மறுக்க முடியாத உண்மை .
No comments:
Post a Comment