Friday, February 1, 2013

முதலாளித்துவ அரசியல் சதிகளில் சிக்கியுள்ள மனித சமூகம் .


           இந்த பதிவு சித்தாந்த ரீதியில் முதலாளித்துவ வடிவத்தை முன்வைக்கும் அடிப்படையில்  எழுதப்பட்டதல்ல .நிகழ்காலத்தின் உண்மைகளை அரசியல் தரத்தில் மனித சமூகம் புரிந்து கொள்ள  வேண்டும் என்ற நோக்கத்தின் ஒரு சிறு முயற்சியாகும் .

                           ஒவ்வொரு தேசியமும் தனது எல்லைகளுக்குள் நலனையும் நியாயத்தையும் பேண முற்படும் போது . அதன் எல்லைகளுக்கு வெளியே வாழும் மனிதன் கருத்தளவில் மிருகத்தை விட கேவலமாகப் பார்க்கப் படுகிறான் என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் . இதுதான் இன்றைய சர்வதேச அரசியல் .

                            இவ்வாறே ஒவ்வொரு தேசியமும் தனக்குள் பெரும்பான்மை எனும் ஜனநாயக நியாயத்தில் கரைந்து போகும் போது இனவாதம் ,மதவாதம் என்ற உருவமெடுத்து  பேரினவாதம் என்ற பார்வையில் சிறுபான்மை அடக்குமுறை அரசியலாக்கப் படுகின்றது . இப்போது அது தவிர்க்க முடியாமல் எஜமான் அடிமை என்ற கீழ்த்தரமான தேசிய  அரசியலாகின்றது .

                                                        இந்த சாபக்கேடான பார்வைகளுக்குப் பின்னால்  
அவைகளை இயக்கும் தரத்தில் அமர்ந்திருப்பது முதலாளித்துவம் தான் என்பதை மறுப்பவர்கள் முடிந்தால் தங்கள் நியாயங்களை சொல்லட்டும் .
சுயநலம் , தான்தோன்றித்தனம் என்பவற்றை தவிர அதிகாரங்களோ அரசியலோ இன்று ஆதிக்கத்தில் இல்லை .

                                                     U .N இன் வீட்டோ அதிகாரம் முதல் , N A T O வின் சர்வாதிகாரம் வரை சர்வதேச சட்டங்களும் ,அமைப்புகளும் சுயநலத்தில் அல்லாமல் இயங்கவில்லை என்பதை நியாயப்படுத்த தைரியமுள்ள ஒருவரை வரச் சொல்லுங்கள் . 

                                                     மதச் சார்பின்மை என்ற மதத்தின் கீழ் ஆளப்படுவதே நியாயம் எனக் கூறிவிட்டு ஆடு புலி ஆட்டமாக சிறுபான்மையை ஜனநாயக முற்றுகையில் வெட்டுக்காய் ஆக்கி சந்தர்ப்ப வாத அரசியலில் குளிர் காயும்  இந்தியா , இலங்கை போதுமே முதலாளித்துவத்தின் முகத்திரையை கிழிக்க .

                                                     அமெரிக்கா ஈராக்கிலோ , ஆப்கானிலோ புகுந்த அரசியலுக்கும் , பாலஸ்தீன விவகாரத்தின் சர்வதேச அதிகார சக்திகளின் பார்வை , பிரான்ஸ் மாலி மீது ஆக்கிரமித்த அரசியலுக்கும் , அல்லது இந்தியா இலங்கையில் அமைதி காப்பு போர்வையில் அனுப்பிய I .P .K .F இராணுவத்திற்கும் , சோமாலியாவின் வறுமைக்கு நிவாரணம் கொடுத்தேன் பேர்வழி என்ற போர்வையில் நுழைந்து நிர்வாணமாக அடிவாங்கி வெளியேறிய U .S மரின்களுக்கும் இடையில் ஒரு பொதுத் தொடர்பு உண்டு .

        அல்லது தனது அரசியல் இலாபத்துக்காக U .S மரின்கலுக்கு எதிராக மக்களை திருப்பிய யுத்தப் பிரபு ஜெனரல் பரா ஐடிட்டுக்கும் , பர்மிய கோரப் படுகொலைகளுக்கும் , அதை எச்சரிக்கிறேன் பேர்வழி என ஏறத்தாள எல்லாம் முடிந்த பின் தலைமைத்துவ முகம் காட்ட பர்மா வந்த துருக்கியதூதுவர்கள் போன்ற சம்பவங்களின் பொதுவான  இடைத்தொடர்பு சமூக நலன் என்பதைவிட சாக்கடை முதலாளித்துவ அரசியல் தான் . 

                                செர்பிய இராணுவ முகாம்களில் பொஸ்னிய முஸ்லீம் பெண்கள் கிறிஸ்தவ சிப்பாய்களின் கருக்கொள்ளப்படும் வரையான காம  வெறியாட்டத்தின் முன் சிதைக்கப் பட்டபோது , ஈராக்கின் முஸ்லீம் பெண்கள் மீதான அமெரிக்க இராணுவ வெறியாட்டம் வெளித்தெரிந்த போதோ அடங்கி இருந்த மனித உரிமை ,பெண்ணுரிமை அமைப்புகள் ஆப்கானில் ஒரு பெண்ணின் கழுத்தை சிராய்த்து சென்ற ஒரு தோட்டாவுக்குப் பின் துள்ளி எழுந்த பிரச்சார அரசியலும் இந்த முதலாளித்துவ சுயநலப் பார்வையின் வடிவமே .

                                       ஓ மனித சமூகமே ! நீ நீதியை தேடினால் நியாயத்தை தேடினால் உனது மௌனத்தை உடைத்து சரியானதை புரிந்து கொள்ள முயற்சி செய் . உலகின் சம்பவங்களை கோர்த்துப்பார் ஒரு உண்மை உனக்குப் புரியும் அது இந்த சர்வதேச அநியாயக் காரர்கள் ஒட்டுமொத்தமாக பயங்கர வாதமாக விரல் நீட்டிக்காட்டுவது இஸ்லாத்தின் மீதே ஆகும் . அநியாயம் அதைப் பார்த்து அஞ்சுகிறது என்றால் நியாயம் அதன் பக்கம் தான் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள வேறு வார்த்தை தேவையில்லை .
                           
                                                   *************************************

இது ஜனநாயக பொய் முகப்  போர்வையின் வெட்ட வெளிச்சங்கள் .

No comments:

Post a Comment