Monday, February 4, 2013

வேஷம் போடும் வேதாளங்களும் 'பாத்தில்' சகதியில் புதைக்கப் படும் 'ஹக்' கும் !!!



முதுகை அழுத்திய அந்த காலனித்துவ பூட்சுகள் 
அகற்றத் துணிந்த எமது பார்வைகளை அவர்களது 
கண்களால் பார்க்கவே கற்றுத் தந்திருந்தார்கள் 
அந்த 'வெள்ளைத் தோல் ' போர்த்திய ஏகாதி பத்திய 'SIR 'கள் !
எமது 'ஐயா ' க்களும் அவர்களின் பாதணிகளாகி 
பக்குவமாக அவர்களின் பாதங்களுக்கு முகமூடி போட்டார்கள் !

 விடுதலை எதிர் பார்ப்புகளுக்கு ஏட்டுச் சுரக்காய் உருவத்தோடு 
ஒரு கொடியும் தரப்பட்டது ! - சுவைக்கும் ஆசையோடு ஏற்றினோம் !
உற்சாகமாய் 'சல்யூட்டும் அடித்தோம் . நாம் அடிமையல்ல 
என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றவர்களாக . - நடந்த கதை 
சுதந்திரத்தின் பெயரால் சுரண்டல் தத்துவத்தின் 
இரண்டாம் பாகம் இனிதே அரங்கேறியது !

அந்த நவகாலனித்துவம் தேச எல்லைக்குள் பிரித்துச் சிதைத்து 
எமக்கு' திமோகிரசி ' கடிவாளம் பூட்டி கனவுகளோடு 
'செக்கியூலிரிச' செக்கிழுக்க வைத்தது . - அதிலும் 
எண்ணை 'வெஸ்டனுக்கு ' சென்று விடுமாம் !
புண்ணாக்கை மட்டும் நவீனம் என்ற பெயரில் 
ரசித்து ருசித்து புசிக்கத் தருவார்களாம் !!!

'வஹி ' சுமந்த கழுதைகளாக இந்த பன்றி திண்ணும் 
குட்டிச் சுவர்களுக்குள் சம பந்தியில் அமர்ந்து
 நடுத்துண்டு கேட்டோம் ! நிர்ப்பந்தத்தை இபாதத் ஆக்கி 
ஹராத்தை இணைத்து ஒரு இஸ்லாமிசமும் செய்தோம் !
நேற்று முழங்கிய 'ஹாக்கிமியத்' வாதங்கள் 'எக்ஸ்ப்பயார்ட் ' ஆக 
'பாத்தில்' படுகுழி 'சிஸ்டத்தில்' பக்குவமாய் அது புதைக்கப் பட்டது !!!   

No comments:

Post a Comment