Tuesday, February 5, 2013

'இஸ்ரேலின் டெல அவிவ் ' வரையான முஸ்லிமின் பாதுகாப்பான பயணத்திற்கும் , அமெரிக்க 'வைட் ஹவுசின் ' செங்கம்பளத்தில் முஸ்லீம் தொழவும் இதோ ஓர் அரிய வாய்ப்பு !!!


      தீமையில் இருந்து  நல்லதை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும் எனும் முஸ்லீம் உம்மத்தின் முடிவில் அதில் இருக்கும் தீமையின் அளவு அதன் ஆதிக்கப் பாய்ச்சல் அதன் நன்மையின் மீது தாக்கம் செலுத்தியிருக்காது என்ற உத்தர வாதத்தை யாராலும் தர முடியாது .
 

சாக்கடை கழிவு கலந்த பாலில் இருந்து பாலை மட்டும் பிரித்து பயன் பெற முனைவது அதிக 'ரிஸ்க் ' அதவிட அப்பழுக்கற்றது ,தீமையே இல்லாதது இஸ்லாம் என்பதுதான் எமது நம்பிக்கை அதன் பிரயோகம் தொடர்பில் ஜாஹிலீயத் உடன் பாலம் போட முனைவது இஸ்லாத்திடம் இந்த காலத்திற்கு எதுவும் இல்லை என்ற கருத்தையே வலுப்படுத்துகின்றது . 


அறிவியலையோ ,தொழில் நுட்பத்தையோ முஸ்லீம் உம்மா வெளியில் இருந்து பெறவேண்டாம் என நான் கூறவில்லை அவை பொதுவானவை .அனால் குப்ரின் சித்தாந்தத்தை சரிகாணும் அந்த  நாகரீகத்தை தழுவச் சொல்லும் அரசியலையும் அதன் வழிமுறைகளையும் முஸ்லீம் உம்மா எந்தக் காரணம் கொண்டும் சரிகானவே கூடாது .


அவ்வாறு செய்தால் நடக்கப் போவது இப்போது அதிகார நிலையில் மிகைத்திருக்கும் எதிரி அவனது நாகரீகத்தை எம்மீது திணிக்கும் முகமாக அதன்  தவறுகளையும்  சரிகாண பணிப்பான் . இப்போது சரணடைவென்பது காலத்தின் தேவையாக உணரப்படும் .எஞ்சியதை வைத்து எதோ வாழ்ந்து விட்டுப்போதல் எனும் தோல்வி அரசியலின் கைதிகளாக நாம் வாழ தலைப்பட்டு விடுவோம் .


மேற்கு இவ்வாறான ஒரு அரசியலை முஸ்லீம் உம்மத்தின் மீது சர்வதேச அளவில் திணிக்கவே முயல்கின்றது  .அதை முஸ்லீம் உம்மா ஏற்றுக்கொண்டால், (இந்த வெற்றி எனும் தோல்வியோடு )'டெல் அவிவ் ' வரை ஒரு முஸ்லீம் பயணிக்கலாம் . 'வைட் ஹவுஸ்' செங்கம்பளத்தில் கூட்டுத் தொழுகை கூட முஸ்லீம்கள் நடத்தலாம் . யஹூதியும் , நசாராவும் பாதுகாப்பு வேறு கொடுப்பார்கள் . ஆனால் நாம் 
ஒரு கௌரவ 
அடிமையாக எமது சில மத அடையாளங்களோடு வாழ்ந்து விட்டு போகலாம் அவ்வளவுதான் .

No comments:

Post a Comment