Friday, August 23, 2013

இது ஒரு 'தாகூதிய' செருப்பு பற்றிய அறிமுகம் .


  இப்னு சலூல் தொடங்கி இப்னு சபாவை ஊடறுத்து முஸ்தபா கமால் வரை இந்த முஸ்லீம் உம்மா துரோகத்தின் வடிவங்களை நிறையவே கண்டு வந்துள்ளது .குப்ரிய 'தாகூத்' களோடு கூட்டுச் சேர்ந்து அந்த எதிரி காலில் செருப்பாய் மாறி' பாசிசம்' புரியும் சிரியாவின்' அசாத்' எகிப்தின் 'சிசி' என இந்த துரோக வரலாறு இரத்த தாகத்தோடு முஸ்லீம் உம்மத்தை துரத்துகின்றது .அந்த வகையில் எகிப்தில் முஸ்லீம்  இரத்தம் குடிக்கும் ஒரு காட்டேரியை  பற்றிய ஒரு பதிவை கீழே தருகிறேன் . 

   
 யார் இந்த சிசி? -  Abdel Fattah Saeed Hussein Khalil el-Sisi. எகிப்தின் இராணுவ ஏதேச்சாதிகாரி. ரபா படுகொலைகளை புரிந்து வரலாற்றில் தனது பெயரையும் ஏரியல் ஷரோன், பொல்பொட்டின் வரிசையில் பதிந்தவன். 12 ஓகஸ்ட் 2012 முதல் எகிப்தின் இராணுவ தளபதியாகவும், ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியாகவும், எகிப்தின் பாதுகாப்பு அமைச்சராகவும் ஒரே நேரத்தில் மூன்று அதிகாரமிக்க பதவியை வகித்தவன்.



    General Command and Staff Course-னை ஐக்கிய இராச்சியத்திலும், War Course மற்றும் Basic Infantry Course-னை அமெரிக்க குடியரசிலும் கற்று தேறியவன். சவுதி அரேபிய இராணுவ அகடமியிலும் கூட்டு கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவன். Master's Degree in Military Sciences இலும் Fellowship of the High War College இலும் தனது உயர் கற்கை நெறிகளை எகிப்தில் முடித்தவன். மொத்தத்தில் ஒரு மேற்கின் இராணுவ ஜெனரலிற்கு இருக்கும் அனைத்து அறிவுகளும், நுட்பங்களும், பண்புகளும் இவனிற்கு உண்டு. Defense diplomat ஆக சவுதி அரேபிய குடியரசில் பணியாற்றிய காலமுதல் சவுதி யின் ரோயல் இராணுவ தளபதிகளிற்கும் இவனிற்கும் நல்ல நெருக்கம். அது போலவே அமெரிக்க கற்கை நெறிகளின் போது அதே கற்கை நெறியை பூர்த்தி செய்ய வந்திருந்த யூத இஸ்ரேலிய ஜெனரல்களுடனும் மிக நெருக்கமான தோழமை இவனிற்கு உண்டு . 


இவனது தாய் பிறப்பில் யூத பெண்மனி. இவனது தாய் மாமன் இஸ்ரேலிய பாராளுமன்ற அங்கத்தவர். முஹம்மத் ஹுஸைன் தன்தாவியை பதவி விலகும் நிர்ப்பந்த நிலைக்கு தள்ள இஹ்வானிய சாணாக்கியம் எல்-சிசியை கைகளை விரித்து செயற்பட அனுமதித்தது. இப்போது இரண்டாம் நாஸராக அவர்கள் சிசியை பற்றி கட்டுரை எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 


பொதுவாக ஒரு தேசத்தில் ஒன்று பலத்த மக்கள் அதரவை கொண்ட தலைவன் இருப்பான். இல்லையென்றால் பலத்த இராணுவ மற்றும் முப்படை ஆதரவை கொண்ட தலைவன் இருப்பான். இதில் எது ஒன்றை கொண்டும் நிலையான அதிகாரத்தை செலுத்த முடியாது. இந்த இரண்டு சக்திகளும் இரண்டு கரங்களாக தொழிற்பட முனையுமானால் அவன் சர்வஅதிகாரம் மிக்க தலைவனாக உருவாவான். அடோல் ஹிட்லர் இவ்வாறே உருவானவன். பிடல் கஸ்ரோவும் இராணுவத்தையும் மக்களையும் தம் இரு கரங்களாக கொண்டவர். சாதம் ஹுஸைனும் மக்கள் இராணுவம் இரண்டையும் லாவகமான கையாளும் வித்தை தெரிந்தவர். இப்படி சில தேசங்களில் இரண்டு பலமிக்க சக்திகளையும் தம் வசம் கொண்டுள்ளவர்கள் தனித்துவமிக்க தலைவர்களாக உருவாகியுள்ளனர். 


பாகிஸ்தானின் பர்வேஸ் முஷாரப்பிற்கு இராணுவ பலம் இருந்த போதும் மக்கள் பலம் இருக்கவில்லை. அதனால் அவர் மண் கவ்வினார். மொஹமட் முர்ஸியிடம் மக்கள் பலம் இருந்த அளவிற்கு இராணுவ பலம் இருக்கவில்லை. அதனை கையாளும் வியூகங்களும் தெரியவில்லை. இதனை ஜெனரல் சிசி நன்குணர்ந்துள்ளான். அதனாலேயே அவன் இராணுவத்தில் தன் நிலையை வலுப்படுத்திய பின் மிலிட்டரி கூவை ஆரம்பித்தான். அப்போதும் கூட அவனிற்கு மக்கள் பலம் பற்றிய சந்தேகம் இருந்தது. 


மதச்சார்பற்றவர்கள், மேற்கத்தைய மோகமிக்க சடவாதிகள், இஸ்லாமியவாத எதிர்ப்பாளர்கள், கொப்ஸ்டிக் கிறிஸ்தவர்கள் என பல தரத்தவரையும் ஒன்று திரட்டி சவுதி அரேபியா வழங்கிய பணத்தை தண்ணீரை இறைந்து, ஒரு பெரிய மக்கள் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணையத்தான். இந்த இஹ்வானிய அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் இஸ்ரேலிய ஸியோனிஸ்ட்களால் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இரண்டும் தன் வசம் வந்த நிலையிலேயே அவன் ரபாவின் படுகொலைகளை மேற்கொண்டான். அவனது கொலை வெறிச்செயலை இரு புனித நகரங்களின் காவலர் என தன்னை புகழ்ந்து கொள்ளும் சவுதி அரேபிய தேசத்து அரசரே ஆதரிக்கும் அளவிற்கு அவனது அரசியல் செயற்பாடுகள் அகன்றுள்ளன. 


தன்னை ஒரு சிறந்த மனிதாபிமானமிக்க, தராள பொருளாதார கொள்கைவாதியாகவும் இவன் காட்டிக்கொள்ள தவறிவில்லை. தன்னை ஒரு லிபரல் தலைவனாக இவன் எப்போதும் வெளிக்காட்டி வந்துள்ளான். இவன் பேஸ்-புக்கில் (   https://www.facebook.com/Egyptian.Defense.Minister   ) இதற்காக மிக சிரத்தையுடன் பல பதிவுகளை வெளியிட்டு வெற்றிகரமாக மக்களை தன் கருத்துக்கள் சென்றடையும் வண்ணம் செயற்பட்டுள்ளான். இன்று இன்னொரு நாஸர்பாதி, கமால் பாஷா பாதி கலந்து செய்த கலவையாக ஆளவந்தான் சிசி உருவாகியுள்ளான். 

No comments:

Post a Comment