Friday, August 30, 2013

என்றும் மறவாத நினைவுகளில் புதைந்துள்ள உண்மைகள் ! (பகுதி 02)



  அது வீரத்தின் நிலம் என்பது புரியாமல்  கம்யூனிச செங்கரடி தன் நாஸ்திக சித்தாந்த நாகரீகத்தை ஆப்கானில் பதிக்க முனைந்தான் . அந்த வீர சமூகத்தை மண்டி போட வைக்க அலெக்சாண்டருக்கும் முடியாமல் போனது ! பிரிட்டிஷ் காரனுக்கும் முடியாமல் போனது ! என்பதை உணராமல், அல்லாஹ்வுக்கு மட்டுமே சிரம் சாய்த்த ஒரு சமூகத்தை மீண்டும் ஒருமுறை கம்யூனிசமும் மண்டி போடவைக்க  முயன்று பார்த்தது . முடிந்ததா ?



   ' தாகூத்களுக்கு' அடிமைப்படுவதை விட சஹாதத் மேலானது என அந்த சமூகம் தெளிவாகவே முடிவெடுத்தது . ஆரம்பத் தோல்விகளில் அது அனுபவத்தைக் கண்டது . எதிரியை அளவிட்டது . USSR எனும் சுப்பர் பவரின் இராணுவ ,அதி நவீன ஆயுத வலிமை இங்கு சுவன ஆசையின் முன் செல்லாக் காசாக மாறியது . ஆப்கான் முஸ்லீம் உம்மத்  கிடைத்ததைக் கொண்டே போராட்டத்தை தொடங்கியது .

       இந்த தூய போராட்டம் தொடரும் வழியில் முழு உலகில் இருந்தும் ஜிஹாதிய ஆர்வளர்கள், இமாம்கள் என ஒன்று குவிக்கப் பட்ட ஒரு களமாகவே ஆப்கன் மாறிப்போனது .ஒரே கல்லில் பல    மாங்காய் கள் விழுத்த இந்த ' ஜிஹாதை'அமெரிக்க பயன்படுத்தியது . 'அது ஏன் எப்படி ?. 
காரணங்கள் இதுதான் . 

1. பனிப்போரின் வலுச் சமநிலையை உடைத்து சோவியத் யூனியனின் அரசியல் இராணுவ பலத்தை கேள்விக்குறி ஆக்குவதன் ஊடாக தனது ஆதிக்க சக்தியை வலுப்படுத்துவது .

2. குறிப்பாக சவூதி அரேபியா உட்பட மத்திய கிழக்கின் ஜிஹாதிய ஆர்வளர்கள் ,இமாம்களை ஆப்கானை நோக்கி நகர்த்துவதன் ஊடாக மத்திய கிழக்கின் தனது  பிராந்திய ஆதிக்கத்துக்கும் , அதன் ஆட்சியாளர்களுக்கும்  (குறிப்பாக சவூதியின் மன்னராட்சிக்கு ) எதிரான சவால்களை தவிர்ப்பது .

3. சவூதி அரேபியாவுடன் , அமெரிக்கா இராணுவ பொருளாதார ரீதியான ஒப்பந்தங்களை இலகுவாக செய்து கொண்டது .(அதன் மூலம் பழைய இருப்பில் இருந்த ஆயுதங்களின் தொகுதிகள்  ஆப்கானுக்கு வழங்கவென சவூதி அரேபியாவிற்கு விற்கப்பட்டது .)

4. குறித்த இந்த இலக்குகளை தனது நேரடித் தலையீடோ ,செலவோ இன்றி முஸ்லீம் உம்மத்தின் உயிர் ,உடமைகளை பலியிட்டு செய்ய வைத்தது .

(சவூதியின் முதவாக்கள் ஆப்கான் ஜிஹாத் விடயத்தில் அது ஜிஹாத் தான் என்றும் அதில் மரணிப்பவர்கள் 'ஷஹீத் ' எனவும் 'பொசிடிவ் ரிபோர்ட் ' கொடுத்தனர் . ஆனால் சிரிய விவகாரத்தில் மௌனம் !, எகிப்து விவகாரத்தில் அந்த கிங் கோப்ராக்கள்  நெகடிவ் ரோல் ! முஸ்லீம் உம்மத்தே இது உனது சிந்தனைக்கு !)

                                   இப்படி பல இலாப அறுவடைகளை ஆப்கான் , USSR யுத்தத்தை வைத்து அமெரிக்கா செய்துள்ளது .என்பது வியப்பான செய்தியாக சிலருக்கு இருக்கலாம் . இந்த ஆப்கான் 'அசைன்மெண்டுக்கு' பாகிஸ்தான் உளவுப் பிரிவான I .S .I  தெளிவாகவே அமெரிக்கா பயன் படுத்தியது . இதன் பின் ஆப்கான் பெருநிலம் முஜாஹிதீன்களின் பக்கம் முற்றாகவே வீழ்ந்தது . ஆனால் இஸ்லாமிய சரீயாவை விரும்பிய ஆப்கான் மக்களுக்கு அந்த இலக்கை அடைய முடிந்ததா !? இந்த கேள்விக்கு விடையை இன்ஷா அல்லாஹ் இன்னொரு பதிவில் தருகிறேன் .  

No comments:

Post a Comment