Wednesday, July 3, 2013

இந்த முடிவு சரிதானா !?



சிதறிய சில்லரைகளாய் சிங்களத் தீவில் சிக்கித் தவிக்கும் சிறுபான்மை நாம் சமரச சதிவலையில் சரண்டர் 'பொலிடிக்சை' குப்பார் சொல்ல சமத்துவம் ,சகவாழ்வு என்று 
தனித்துவம் தொலைத்து தத்துவம் பேசுகிறோம் !!

தொட்டிலில் இருந்து கபுறு வரை கபிடளிசம் கோடு போட
அதில் ரோடு போட்டு வாழ்க்கை வண்டி விட்டு 
'அல்ஹம்துலில்லாஹ்' சொல்லுவது யாரை ஏமாற்ற !?
உன் சிலையை வணங்க மாட்டோம் ஆனால் 
பூஜைக்கு பூத்தருவோம் என்ற புது விளக்கம் புரியவில்லை !!

Tuesday, July 2, 2013

இது என் இனிய சகோதரனுக்கு .........

 
இலட்சிய தேடலில் ஆழமான போராட்டம் .
அதிர்ந்து போன எதிரி தந்த ஆழமான காயங்கள் 
அதற்கும் மருந்தாய் அவனே தர நினைக்கும் 
தீர்வெனும் 'கான்சர் செல்கள் '!! - அது
'வஹி ' வழி மறந்த அதே வரலாற்று தவறு நோக்கி !!
சத்திய அகீதாவையே அசைக்கும் 
விலை கொடுத்தா உன் விடுதலை !!

Friday, June 28, 2013

சிந்திக்க ஒரு உண்மைக் காட்சி ....

மனித இதயத்தை திண்ணும் காட்டு மிராண்டிகள் தான் சிரியப் போராளிகள் என்று நேற்று படம்காட்டிய மேற்கின் மீடியா மிலிடரிகள் இந்த சம்பவம் பற்றியும் பேசுவதுதான் மீடியா தர்மம் .



சம்பவம் இது தான் குறித்த ஒரு பகுதியில் நடந்த சண்டையில் அரச தரப்பு சிப்பாய் ஒருவன் உயரோடு போராளிகள் வசம் பிடிபட அவனிடம் நிலைமையை விளக்கி வீடு செல்ல அனுமதிக்கும் போராளிகள் பற்றிய உண்மை சம்பவமே கீழ்வரும் காட்சியாகும் . 


தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவ்வும் இருந்தும் இறுதியில் தர்மமே வெல்லும் .


 # அல்லாஹ் நாடியவரை உங்களிடையே நபித்துவம் இருக்கும் .அதன் பின்னர் அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான் .
 # பிறகு நபித்துவத்தின் வழியில் 'கிலாபா ' ஆட்சி முறையாக அது அமையும் ;அதன் பின்னர் அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான் .
 # பிறகு அது கடினமான மன்னராட்சி முறையாக அது அமையும் ;அல்லாஹ் எதுவரை நாடுகிறானோ அதுவரை அதுவரையிலும் அது நீடிக்கும் ;அதன் பின்னர் அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான் .
 # பிறகு அது அடக்கு முறையைக் கொண்ட மன்னராட்சியாக அது அமையும் .அல்லாஹ் எதுவரை நாடுகிறானோ அதுவரை அதுவரையிலும் அது நீடிக்கும் ;அதன் பின்னர் அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான் .
 # பின்னர் (மீண்டும் ) நபித்துவ வழிமுறையில் கிலாபா ஆட்சி ஏற்படும் என்று கூறி அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அமைதி காத்தார்கள் .
                                                                        அறிவிப்பவர் :- ஹுதைபா (ரலி )
                                                                        ஆதாரம் :-  முஸ்னத் அஹ்மத் 

Sunday, June 23, 2013

'அஷ் ஷாம் ' சில வரிகளில் ......



'வஹி' முன்னறிவித்த அப்தால்கள் வாழும்  வரலாற்று பூமியது .
சத்திய மீள்வருகையின் முகவுரை எழுத இன்று 
ஓர் 'தாகூத்திய ' அசிங்கத்தின் முடிவுரை எழுத 
முயற்சிக்கும் நிலமே அது 'அஷ் ஷாம் '

Thursday, June 20, 2013

அந்நாள் வெகு தூரமில்லை .........


      அறியாமையை அகற்றி சத்திய ஒளி கொடுத்தது  தாருல் இஸ்லாம். இருளை வெளிச்சமாக்கி சூனியத்தை பூரணமாய்  காட்டும் அசத்திய எதிரி அவன் சாக்கடை அகீதாவை சிந்தனாயுதம் கொண்டு சந்தனமாய் ஏவிய போது அதன் கீழ் ஒரு கொத்தடிமை போல வாழ்ந்தான் முஸ்லிம் ! காலத்தால் அந்த அநாகரீகம் நாகரீகமாய் வாழ்வை ஆக்கிரமிக்க அதில் நியாயம் கண்டான் !

         'ஜாஹிலியா ' வரைந்த சித்தாந்த வரிகளில் சுதந்திரம் எனும் சிறைச்சாலை தேசிய வேலியோடு பக்குவமாய் சகோதரத்துவத்தை சிதறடித்து முஸ்லிமை சிறைப்படுத்தியது . மறுபக்கம் இறுமாப்போடு இஸ்ரேலை பலப்படுத்தியது .

Friday, June 14, 2013

'விலாங்கு மீன்' அரசியலும் நடப்பு நிகழ்வுகளும் சொல்வதென்ன ?


                           இஸ்லாத்தின் மீள்வருகை தொடர்பில் படிமுறை மாற்றம் ஒரு   சாத்தியமான ,சரியான வழிமுறையாக சிந்திக்கப் பட்டும் அமுல் நடத்தப் பட்டும் வரும் இன்றைய காலப் பகுதியில் முஸ்லீம் சமூக சிந்தனா தரம் ஜாஹிலீய விருப்புகளால் ஆளப்  பட்ட போராட்ட ஒழுங்கில் தான் இன்னும் இருக்கின்றன என்பதை நடப்பு விவகாரங்கள் நமக்கு காட்டிக் கொண்டிருக்கின்றன .

Friday, June 7, 2013

முஸ்லீம் அரசியலால் விலை பேசப்படும் இஸ்லாமிய அரசியல் !



          ஒவ்வொரு புரட்சிகளும் ,போராட்டங்களும் ஒரு மாற்றத்தை வேண்டியே நடத்தப் படுகின்றன .அந்த மாற்றம் நிகழ்கால வாழ்வியல் ,அதன் அடிப்படை இலக்கு , அதை அடைவதற்கான வழிமுறைகளுக்கு பாதகம் இல்லாத ,அல்லது அதில் சிற்சில மேலோட்டமான பகுதி மாற்றங்களை செய்வது எனும் போராட்டமாக அமைந்து விட்டால் அதை ஒரு சித்தாந்த மாற்றமாக கருத முடியாது ; மாறாக அது வெறும் உரிமைப் போராட்டமாகவே கருதப்பட முடியும் .

Thursday, June 6, 2013


   இன்று உலகை ஆள்வது  முதலாளித்துவம் அது சிலரின் நலனில் பலரின் வாழ்கையினை பனையம் வைத்து பயணம் செய்யும் ஒரு சுயநல அரசியல். அது இன்று தனக்கான மாற்று அரசியல் இல்லாதநிலையில் தனிப்பெரும் சக்தியாக தன்னை நிலைநாட்டி வாழ்ந்து கொண்டு இருக்கின்றது .

Friday, May 31, 2013

அஹிம்சா ரீதியான சுய அழிப்பு நிகழ்கால அரசியலில் எவ்வாறு நோக்கப்பட வேண்டும் ?


         
            ' அஹிம்சை' தொடர்பான பார்வைகளில் அதன் வெளிப்பாடுகள் சில நியாயங்களை மறந்த வன்முறைத் தூண்டல்கள் மூலம் சமூக ஆதரவு மற்றும் ,அரசியல் எதிர்பார்ப்புகளை நோக்கியதாகவே காணப்படுவதை எவராலும் மறுக்க முடியாது . அனேகமாக அஹிம்சை சுய சுத்தப்படுத்தலுடன் கூடிய இலக்கு நோக்கிய தற்காலிக கருவியாகவே அநேகமான அரசியல், இராணுவ இயக்கங்களால் இன்று  பயன்படுத்தப் படுகின்றன . 

'சிரிய' நிலவரங்கள் சொல்லும் செய்தி .


                 ' சிரியா' யுத்தம்  பல ஆச்சரியமான களச் செய்திகளை எமக்கு தருகின்றது . அந்த வகையில் புதிய செய்தியாக கிடைத்திருப்பது சிரிய , ஈராக்கிய எல்லையில் ஈராக்கிய இராணுவம் சிரியப் போராளிகளுடன் கடுமையாக போரிட்டுள்ளது எனும் தகவல் ஆகும் .நிகழ்வுகளின் கோர்வைகள் ஒரு குழப்பமான அரசியலை காட்டி நின்றாலும் நிதானமாக சிந்தித்து ஒரு தூய போராட்டத்தை புரிந்து கொள்ளும் அவசியம் முஸ்லீம்களுக்கு இருக்கின்றது .

Tuesday, May 28, 2013

கசாப்பு அரசியலில் முஸ்லிம் பலிக்கடாவா !?


'ஜாஹிலீய' சத்துருக்களின் அநாகரீக சதுரங்கத்தில் 
அலட்சியமான வெட்டுக்காயா  நான்  !
இன்று என் வீட்டு முற்றத்தில் என்னை வைத்தே 
'கபுறு' தோண்டி ஆரத்தழுவி முதுகில் குத்த 

Monday, May 27, 2013

'வூல்வீச்' சம்பவம் தொடர்பில் சிந்திக்க வேண்டிய பகுதிகள் .



         இங்கிலாந்தில் படைவீரர் ஒருவர் வூல்விச் நகரில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்ட நிலையில் ,முஸ்லீம்கள் மீதே காழ்ப்புணர்வான பார்வை திசை திருப்பப் பட்டதாக நினைத்தாலும் சம்பவங்களின் காட்சி வடிவங்கள் சித்தரிப்புகள் ,குறித்த சந்தேக நபர்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் என்பன பிரித்தானிய மக்கள் மத்தியிலும் , சர்வதேச சமூகத்திலும் விதைக்க நினைக்கும் முக்கிய தகவல்கள் பற்றி முஸ்லீம்கள் அவதானமாக இருக்க வேண்டும் .

Sunday, May 26, 2013

முதலாளித்துவ உலக அரசியலில் மத்திய கிழக்கும் சிரியாவும் .


       சில அரசியல்  சம்பவங்கள் ஆழமாக ஆராயப்பட்டு  பேசப்படுவதில்லை . பலமுள்ளவன் சரியானவன் என்ற எழுதப்படாத ஒரு கொடூர விதியின் கீழ் அவை இராஜ தந்திர நியாயங்களாகவும் காட்டப்படுகின்றன . இவை இவை பற்றிய குறை மதிப்பீடு நிகழ்கால  அரசியல் அதிகாரங்களின் செயற்பாடுகள் பற்றிய பார்வையில்  முஸ்லீம்களுக்கு இருக்கின்றது .

Saturday, May 25, 2013

இது ஒரு வரலாற்றுப் பிரகடனம் .

Shaykh Ahmad al-Asir in the forefront of the battle front Qushair, province of Homs, Syria

Shaykh Ahmad al-Asir. லெபனானிய சுன்னி முஸ்லீம்கள் மத்தியில் நன்கு பிரபல்யமான இமாம் இவர் கடந்த 30/04/2013 இல் வெளியிட்டுள்ள ஒரு முக்கிய பிரகடனம் கீழே தரப்படுகின்றது . இந்த வார்த்தைகள் உண்மையில் முழு உலக சுன்னி  முஸ்லீம்களுக்கும் பொதுவானது என்ற வகையில் பதிவிடுகிறேன் .