Wednesday, July 3, 2013

இந்த முடிவு சரிதானா !?



சிதறிய சில்லரைகளாய் சிங்களத் தீவில் சிக்கித் தவிக்கும் சிறுபான்மை நாம் சமரச சதிவலையில் சரண்டர் 'பொலிடிக்சை' குப்பார் சொல்ல சமத்துவம் ,சகவாழ்வு என்று 
தனித்துவம் தொலைத்து தத்துவம் பேசுகிறோம் !!

தொட்டிலில் இருந்து கபுறு வரை கபிடளிசம் கோடு போட
அதில் ரோடு போட்டு வாழ்க்கை வண்டி விட்டு 
'அல்ஹம்துலில்லாஹ்' சொல்லுவது யாரை ஏமாற்ற !?
உன் சிலையை வணங்க மாட்டோம் ஆனால் 
பூஜைக்கு பூத்தருவோம் என்ற புது விளக்கம் புரியவில்லை !!

'ஹிஜாபும் ,நிகாபும் ' இங்கு தேவையில்லை ''அவுரத்'
ஒன்லி அரேபியன்ஸ் ' என்று முஸ்தபா கமாலின் 
பேரப் பிள்ளைகள் இங்கு பட்டிமன்றம் போட 
சல்மான் ருஸ்டியும் , தஸ்னிமா நஸ்ரினும் சபாஸ் போட
'லம்யா கடோல்' புன்முறுவல் பூக்கிறார் !!

நேட்டோவோடு கைகுலுக்கி ,வீட்டோ பவர்களின் 
தத்துப் பிள்ளையாகி சுவரில்லா சித்திரமாய் இஸ்லாம் 
காட்டும் 'ஹிக்மத் ' தொண்டர்கள் பெரும்பான்மைக்குள் 
சிறுமைப்பட்டுப் போக நாமும் வாழவேண்டும் 
இந்த இம்மையில் இழிமை பட்டாலும் பரவாயில்லை!!
எனும் முடிவு சரிதானா !?

No comments:

Post a Comment