Saturday, September 15, 2012

இந்த நியாயம் சற்று அநியாயம் !!!!




ஒலியினால் ஒழி !
ஒளியினால் ஒழி ! முடிந்தால் 
ஒழி இனாலும் ஒழி ! இந்த 
ஒலி, ஒளி, ஒழி தான் 
அந்த சாத்தானிய சந்ததிகளின்
 இஸ்லாத்திற்கு எதிரான 
காலம் காலமான ஒரே மொழி !!!!


சாணுக்கு சாண்  
என்றார் எம் தூய நபி (ஸல் )
ஆனால் முஸ்லிமின் பார்வையோ 
இப்போது முற்றாக அவர்களின் வழி!!!!


அவர்களின் படத்தில் அறிந்தும் அறியாமலும் 
முஸ்லிமும்  பாத்திரம் !!!!
ஆனால் அதில் தூய  நபியை 
கிண்டினால் ஏனோ அதிக ஆத்திரம் !!!!


ஏவல்களை கேட்போம் ஆனால் ஏற்கோம்  
விலக்கல்களிலேயே நடப்போம்!!!! 
இது  யஹூதியத்  தலைக்கேறிய 
நசாராத்தனம்!!!! நாமுமா!!!!


"திமோ கிரசி" இகுவல் இஸ்லாம் "என்றால்  
"யெஸ் சார்" போட்டவர்கள் நாம்!!!! எமக்கே 
"ஸினா சமன்  நிகாஹ் "ஆகிப்போனபோது 
அவர்கள் நபியை நிந்திப்பது "கல்லி வல்லி"!!!!


நெகிழும், நெகிழும் என்று 
அகீதா முதல் சரீயா வரை 
சடையல் போட்டு 
தூய மார்க்கத்தை சிலுவையில் 
தொங்கப் போட்டவர்கள் நாம் !!!!

கிலாபா தீர்வு என்றால் அதை 
மக்கிப்போன வரலாறாய் காட்டி !!!!
"சியோநிசத்திடம் " மார்க் வாங்கி 
அதில் மார்க்கம் காண்கின்றோம் நாம் !!!!

ஆத்திரத்தில் நியாயம் உண்டு

ஆனால் நடத்தையில்!!

நாம் same side goal அடித்தாலும் அது சரி 
எதிரி அடிக்கும் போது மட்டும் வலி !!!!
இந்த நியாயம் சற்று அநியாயம் !!!!

No comments:

Post a Comment