Friday, September 21, 2012

'குப்ரிய' ஏகாதிபத்தியத்தின் ஆபத்தான எதிர்பார்ப்பும் அதில் வீழ்ந்துகொண்டிருக்கும் முஸ்லீம் உம்மாவும் !



காகம் இருக்க பனம்பழம் விழுந்ததா ? பனம்பழத்தை வீழ்த்துவதற்காகவே காகம் இருந்ததா ? எனும் வினாவிற்கு இங்கு விடை தெரியாதது தான் ஆனால் இந்தத்தடவையும் வழமைபோலவே குறிதவறாமல் முஸ்லீம்களின் தலையிலேயே விழுந்து
ள்ளது ! எனும் அடிப்படையில் சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதால் இந்த விடயத்தை உற்று நோக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது .
நான் சொல்ல வருவது 'அப்பாவி முஸ்லீம்கள் ' எனும் அந்த திரைப்படம் பற்றியதுதான் . 'நேடோ ' கூட்டு என்பது' யுனைடட் ஸ்டேட் 'இன் இராணுவ ஆதிக்கத்தின் ஒரு வல்லமையாகத்தான் இதுவரை புரிந்துகொண்டது . ஆனால் இத்தகு கீழ்த்தர திரைப்பட விவகாரத்திலும் இந்த கூட்டின் ஆதிக்கம் அவர்களின் செயல்கள் மூலம் உணர்த்தப்படுகின்றது . கடந்த 19/௦09/2012 அன்று பிரான்சின் 'சார்லி ஹெப்டோ ' எனும் பத்திரிகை சுமார் இருபது கேலிச்சித்திரங்களை சர்வ சாதாரணமாக எமது தூய நபி (ஸல் ) அவர்களையும் , தமது எதிப்புணர்வை அந்த திரைப்படம் தொடர்பில் வெளிக்காட்டும் முஸ்லீம் உம்மாவை நோக்கியும் ஏவி தமது பங்கை கச்சிதமாக செய்துள்ளது.

அதாவது இங்கு முஸ்லீம்களின் ஆழமான அகீதா மட்டத்தை தவிடு பொடியாக்கும் அமெரிக்க மீடியா ஏவுகணைக்கு உதவியாக பிரான்சின் ஊடகத்துறை குறிதவறாமல் 'ஆட்டிலறி' தாக்குதலை
நடாத்தியுள்ளது . வழமையிலேயே ஒரு 'விசன் , மிசன் ' அற்று இத்தகு குறிகளை இவர்கள் இடுவதில்லை எனும் அடிப்படையில் அவர்களின் எதிர்பார்ப்பு என்ன ? என்பது பற்றி விடை தேடுவது முஸ்லீம்களாகிய எமது
கடமையாகின்றது .

சுமார் ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன் "The davincy code" எனும் 'ஹோலிவூட்' திரைப்படம் ஓன்று வெளியானதை நீங்கள்
அறிந்திருப்பீர்கள் . மரியமின் மகன் ஈசா (அலை ) தொடர்பில் கிறிஸ்தவ உலகத்தின் நம்பிக்கை கோட்பாட்டின் மீது பேரடியாக அது வெளிவந்திருந்தது . அதாவது "லியனாடோ டாவின்சி' வரைந்த இயேசுவின்
இறுதி இராப்போசனம் எனும் ஓவியத்தை ஆதாரமாக்கி அதில் வரக்கூடிய
'மரகதலோனா மரியாள் ' எனும் முன்னாள் விபச்சாரியும் பின் ஈசா(அலை) இன் சீடராகவும் மாறிய பெண்ணுக்கும் ஈசா(அலை)க்கும் இடையில் பாலியல் ரீதியான காதல் உறவு இருந்ததாகவும் (அல்லாஹ் (சுப) எம்மை பாதுகாக்க வேண்டும் ) அதன் விளைவாக ஒரு பெண் குழந்தை பிறந்ததாகவும் அதன் மூலம் ஈசா (அலை ) அவர்களின் சந்ததி தற்போதும்
பூமியில் வாழ்வதாகவும் அந்த திரைப்படம் குறிப்பிட்டது ! கிறிஸ்தவ உலகின் அதியுயர் மதகுரு குழு ஓன்று வரலாற்று நெடுகிலும் இத்தடயங்களை எத்தகு விலை கொடுத்தும் அழிப்பதாகவும். அந்த வடிகட்டளிலும் தப்பிப்பிழைத்து ஈசா (அலை ) அவர்களின் சந்ததி தற்போதும் வாழ்வதாகவும் அது காட்டி நின்றது .
இங்கு விடயம் என்னவென்றால் அத்திரைப்படம் வெளியான காலப்பகுதியில் கிறிஸ்தவ உலகம் கொந்தளித்தது . அதற்கு எதிராக பல போராட்ட முன்னெடுப்புகளை செய்தது .இருந்தும் கருத்துச்சுதந்திரம் , ஊடகச்சுதந்திரம் எனும் சிந்தனா தரத்தின் கீழ் அவர்கள் தமது வழமையான பாணியில் சமரசமானார்கள் ! இங்கு நான் பேச வருவது முஸ்லீம் உலகும் இத்தகு சிந்தனா வாதத்தின் தரத்தில் இயலாமை எனும் அழுத்தத்தின் மூலம் வீழ்த்தப்படும் அபாயம் தெரிகின்றது . அதாவது இங்கு
அவ்வாறு வெளியிடுவது அவர்கள் சுதந்திரம் ,நீங்கள் போராடுவது உங்கள் உரிமை ஆனாலும் அந்த போராட்டத்திற்கான விதிமுறை இதுதான் என
ஒரு "அஜெண்டா" விற்குள் முஸ்லீம் உம்மாவை சிக்கவைப்பதன் மூலம் இதுதான் தற்போதைய உலகம் எனும் கருத்துமாயையில் சுழல விடுவது !

இங்கு சமரசம் எனும் அரசியல் இஸ்லாமிய மயமாக்கப்பட்டு "ஷரீயா முதல் அகீதா" வரை ஒரு விவாதப்பொருள்தான் எனும் வாழ்வு
ஏற்கனவே சிதைந்துள்ள முஸ்லீம் உலகிலும் திணிக்க எத்தனிக்கப்படுகின்றது! அல்லது அவர்கள் அவ்வாறுதான் பேசுவார்கள் ,செய்வார்கள் நாம் எமது நம்பிக்கையின்படி சரியாக இருப்போம் எனும் "டோன்ட் கேயார் லைப் செட்டப் " நோக்கி முஸ்லீம் உம்மாவை இழுத்து வருவது . அல்லாஹ்(சுப ) எம்மை பாதுகாக்க வேண்டும் .

1 comment:

  1. சரியாக சொல்லிருக்கிரீர்ஹள் .அதனால் நாம் இஸ்லாமிய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து நமது அறிவார்ந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்

    ReplyDelete