Sunday, September 16, 2012

யாருக்காக இது யாருக்காக ?!!!



           எமது முஸ்லீம் சமூகத்தின் சில கருத்துக்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது !
இஸ்லாமிய சமூகம் ,இஸ்லாமிய வாழ்வு ,இஸ்லாமிய ஷரீஆ ,என்பது முற்றிலும்
குப்ரின் கீழ் இருந்து சாத்தியப்படலாம் ,அல்லது இஸ்லாத்தின் மிக அதிகமான பகுதிகள், விடயங்கள் சாதிக்கப்படலாம் எனும் தவறான கருதுகோள் ஒருபுறமும் , இஸ்லாமிய ஷரீஆ பகுதியில் தளர்வோடு கூடிய விட்டுக்கொடுப்பும் ,அல்லது அதில் சில பகுதிகளை புற
க்கணித்தல்
  
ஊடாக குப்ரியத்தை திருப்திப்படுத்தி இஸ்லாமிய வழிமுறையை நியாயப்படுத்தலாம் எனும் தவறான எடுகோலும் இன்று எம்மத்தியில் புழக்கத்தில் உள்ளது .

                 இன்றைய இவர்களின் செயல்களால் குப்பார்கள் மிகக்குறிப்பாக இன்று உலகை ஆதிக்கப்படுத்தியிருக்கும் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் ஏகபோக சொந்தக்காரர்களான யூத ,கிறிஸ்தவர்கள் தமது வார்த்தைகளாலும் நடத்தைகளாலும்தமதுதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள் !  இத்தகு மனோநிலையில்  இருப்பவர்கள் ந்தஅல் குர்ஆன்வசனத்தின் முன் தமது செயல்களை மீள் பரிசீலனை செய்யவேண்டும் .


(நபியே! ) யஹுதிகளும் ,நசாராக்களும் நீர் அவர்களுடைய மார்க்கத்தை பின்பற்றாமல் இருக்கும் வரை உம்மைப்பற்றி அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள் (ஆகவே அவர்களை நோக்கி ) "அல்லாஹ்வின் வழி (யாகிய இஸ்லாம் )தான் நிச்சயமாக நேரான வழி (அதனையே பின்பற்றுவேன் ) எனக்கூறி விடும் அன்றி உமக்கு மெய்யான ஞானம் ( வஹி வழிகாட்டல் ) வந்தபின்னும்(சாபத்துக்குள்ளான ,வழிதவறிய )அவர்களுடைய விருப்பங்களை பின்பற்றுவீரானால் , அல்லாஹ் விடத்தில் (இது பற்றி ) உம்மை இரட்சிப்பவன் எவனுமில்லை , (உமக்கு ) உதவி செய்பவனும் எவனுமில்லை .(அல் பகரா : 120௦)
அல்லாஹ்வின் எதிரி திருப்தியடையும் போது அல்லாஹ் கோபப்படுகின்றான் ! ஆனால் முஸ்லீம்களாகிய நாமோ அதில் நியாயம் காண்கிறோம் ! அல்லாஹ்வின் எதிரி அவனது வழிமுறைகளை எமக்கு பிச்சையாக தருவதை அல்லாஹ் எடுக்க வேண்டாம் எனகூறமுஸ்லீம்களாகிய நாமோ அதை நடைமுறை சாத்தியம்  என்கிறோம் ! 

 அல்லாஹ்விடம்  செவிமடுத்தோம்  , வழிப்படுவோம் “தாகூதிடம்” எனும் கேவலமான தத்துவத்தை "பிராக்டிகல் வே " என அல்லாஹ்வின் எதிரியின் பாசையில் பேசுவதுதான் இஸ்லாமா !!??


No comments:

Post a Comment