Friday, September 21, 2012

இதோ முதலாளித்துவம் பேசுகிறது !



நான் பொய்யன் ஆனால் இப்போது 
சில உண்மைகளை சொல்கிறேன் !
என் சித்தாந்த தோல்வியை 
வாய் விட்டுச்சொல்ல காலம் 
நெருங்கிவிட்டது !


நான் என்ற அகம்பாவத்தின் மீது 
சத்திய இஸ்லாத்தை ஏறி 
மிதிக்கத்தொடங்கிய தவறில் 
உச்சக்கட்டமாய் இப்போது 
எனக்குள் இருந்த ஒரு சாக்கடை மகன் 
தனது துர்நாற்றத்தை சந்தனமாய் 
அரங்கேற்ற  நான் பிரித்து மேய்ந்த 
வெள்ளாடுகள் ஒன்று சேர்ந்து 
தாம் வேங்கைகள் தாம் 
என்பதை வெளிச்சம் போட
தொடங்கி விட்டன !

பலமுள்ளவன் சரியானவன் 
எனும் கசாப்புச்சட்டத்தில்  அநீதிகளை 
நீதியாக்கிய ஆக்கிரமித்தளில்
மயானமாக்கிய அவர்களின் நிலங்கள் 
ஏராளம் தாராளம் ! நேற்று 
பனிப்போர்  மாயை மேல் 
'டிபென்ஸ் லைன் ' எழுப்பிய 
என் சுவாரிஸ்யமான  வியாபாரத்தில் 
மூர்க்கமான பங்காளர்கள் இவர்கள் !
இருந்தும் அதில் இவர்களின் 
உயிர் பலிகளை விட 
விற்கப்பட்ட பரீட்சிக்கப்பட்ட 
என் ஆயுதங்களின் தரத்தில் 
நான் பெருமை கொண்டவன் !

எனக்கு தெரிந்ததெல்லாம் 
நட்டத்தையும் விற்று இலாபாமாக்க 
வேண்டும் என்பதே ! அதனால் 
ஜனநாயகத்தை அச்சப்படாமல் 
அரசியலாக்கி ரோம ,கிரேக்கர்களின் 
மாயா ஜாலத்திட்கு புத்துயிர் கொடுத்தேன் !
அதை இவர்களுக்கும் கொடுத்தேன் .
அது  இந்த மக்களை 'மா'க்களாக்கி 
"மெஜாரிட்டி பவரில் " அது நியாயத்தை 
சுயநலக்கயிற்றில் தூக்கிலிடும் 
என்பதால் ! இப்போது "அப்பாவி முஸ்லீம்கள் "
என்ற சீண்டலால்  எல்லாமே 
நாசமாகிப்போனதே !

நாளை கிலாபாவும் வந்தால் !!!
நாறிப்போகும் என்பாடு !?
வாழ்வதற்காக இறக்க தயாரான 
என் இராணுவங்கள் மரணிக்கவே 
வாழும் அந்த முஜாஹிதீன்களின் முன் 
எம்மாத்திரம் ! அதன் பின்னால் 
ஒரு" ரியல் இண்டிபெண்டன்ஸ் டே "
நோ சான்ஸ் !!!!

No comments:

Post a Comment