Tuesday, September 17, 2013

அவர் சரியாகத்தான் சொன்னார் !

   அவர் சரியாகத்தான் சொன்னார் !
அவருக்கு பொன்னாடை போர்த்தி 
கொடிபிடித்து பட்டாசு வெடித்து 
நாம் தான் பிழையாக விளங்கிக் கொண்டோம் !

தாருல் குப்ருக்கு இவர்கள் விசுவாசம் 
இல்லாதவர்களாம் . அல்லாஹ்வுக்கும் 
அவன் 'வஹி' வழி அமைந்த தாருல் இஸ்லாத்துக்கும்  
தான் நாம் விசுவாசமானவர்கள்.
தேசிய அழுக்குப் படிந்திருந்தாலும் 
எதோ ஒரு ஓரத்தால் உண்மை உருவம் புரிந்ததால் 
சொன்ன 'சொலிட்டான ' வார்த்தை !

மறுமையை மறந்து இம்மைக்குள் 'டென்ட் ' அடித்து 
'ஹுப்புத்துன்யா' இயக்கத்தில்  நிர்பந்த நியாயத்தில் 
குப்ருக்கு சரண்டராகி மரணத்தை வெறுத்த 
போதும் அவர் சரியாகத்தான் சொன்னார் !

சந்தர்ப்ப பல் இளிப்பு ! வாக்குறுதி 'லிஸ்ட்' தூக்கி 
அவர் வந்தபோது 'போலின்' போட்டு 
'தாகூத்துக்கு' நாம்  பையத் கொடுத்தது அவர் தப்பில்லையே !
பிழையை சரியாக்கி 
இலுப்பம் பூக்களை
 சர்க்கரை ஆக்கியது எம் தப்புதான் !  

ஆனாலும்  அவர் இன்னும் சரியாகவே சொன்னார் !
சர்வதேசத்தோடு எமக்கு 'லிங்க்' உண்டாம் !
நல்ல கணிப்பு . நாம் சிறுபான்மை இல்லை என்பதை 
புரிந்து சொன்ன வார்த்தை அது !
' வன் 'உம்மாஹ் கென்செப்டை 'யார் சொன்னால் என்ன ?
'இப்லீஸ்' கற்றுத் தந்த 'ஆயதுல் குர்ஷி 'போல !

ஜாஹிலீய சக்தியை பஞ்சு மெத்தையாக்கி வாழ்ந்த 
எம் கடந்த காலம் !அதில் இனவாத முட்கம்பி 
முளைத்த போதும் ,மிச்ச சொச்சத்துக்காக 'அகீதாவையும்'
அடகு வைக்கும் அற்பப் பிறவிகளாக மாறியது 
எம் தப்புதான் . அவர் சரியாகத்தான் 
சொன்னார் . நாம் தான் எம் மார்க்கத்தை மதமாக 
பிழையாக விளங்கிக் கொண்டோம் !!!
சொன்னவன் காவியத் தலைவனல்ல 
காவிகளின் தலைவன் !  


No comments:

Post a Comment