Saturday, September 7, 2013

இந்த வரிகளுக்கு அர்த்தம் புரிந்தால் இவன் வலிகளுக்கும் அர்த்தம் புரியும் !!!


சிறுபான்மை என்ற அடங்கிய பார்வையில் 
'கொசுவுக்கும்' கொம்பு கொடுத்தோம் !
அதை சீவிவிட்டு பேரினப் பேய்களை எம்மீது 
ஏவிவிட நாசத்தின் சக்திகள் வந்தபோது ...!!!
பிச்சை வேண்டாம் உன் நாயைப் பிடி 
என்ற 'சரண்டர் பொலிடிக்சில் '  எமக்கு நாமே 
சமாதியும் தோண்டினோம் !



'தேசிய' நியாயத்தில் 'குப்பார் ' எம் மார்க்கத்தை 
விலைபேசியபோது ! தயங்காமல் அந்த வியாபாரத்தில் 
எஞ்சியதையும் விற்று அந்த 'தாகூத்தின் ' சின்னத்தை 
ஒரு சுண்ணத்தாக பேசி 'மஸ்ஜித்' மினாராக்களில் 
கம்பீரமாய் பறக்கவும் விட்டோம் ! - 'ஹலால்' பொலிசியை 
'நஷனல்  எக்ஸ்போட்டுக்காக ' இலவசமாக்கி 
இடி விழுந்த நியாயங்களில் வெற்றியாய் பேசியது !
நாளைய செய்தியாய் எம் தூய  'அகீதாவுக்கும்'
'சந்தூக்கு' வாங்கவா !?

இந்த கொத்தடிமை சாசனத்தின் பின்னும் 
உடைப்பதை உடைத்தார்கள் !! தடுப்பதை தடுத்தார்கள் !!
இப்போதும் நாம் 'லகும் தீனுக்கும் வலியதீன் 'என 
'மன்சூஹ் ' ஆன வசனத்தை ஓதி ஒதுங்கப் பார்த்தோம் !!
விட்டார்களா பாவிகள் !? இனி நாம் சொல்வதுதான் 
'நியூ வெர்சன்' இஸ்லாம் என 'கலிமாச்' சொல்லாதவன் 
கண்டிசன் வேறு போடுகிறான் !!!?

இப்போதும் 'சபூர் ' வாதத்தோடு 'ஹுப்புதுன்யா '
ரீசனோடு ' வஹியை அடிவருடி 'அல்லாஹ்விடம் 
பாரம் சாட்டிவிட்டு 'அல்ஹம்துலில்லாஹ் 'என
வாழ்க்கை வண்டி ஓட்டுபவனா உண்மை முஸ்லீம் !!!
    

  

No comments:

Post a Comment