Wednesday, September 18, 2013

'சியோனிச மிஷனில் 'வெள்ளைக் காக்கா சிரியாவில் மல்லாக்காய் பறக்குது !




      ஏகாதிபத்திய நாடக பாணி அரசியலின் அடுத்த கட்டமும் சிரிய விவகாரத்தில் அரங்கேறி விட்டது . அது ஐநாவின் பங்கி மூன் அவரது திரு வாயால் மொழிந்து அறிக்கையாக வெளியிட்டு விட்டார் . அது குறித்த இரசாயன தாக்குதலை செய்தது சிரியப் போராளிகளாம் .


                முன்பு பசர் அல் அசாத் இரசாயன தாக்குதல் நடத்தியதற்கு தம்மிடம் ஆதாரம் உள்ளதாக அமெரிக்க வெளி விவகார அமைச்சர் அறிக்கை விட்டது அவர்களுக்கே மறந்து போனதுதான் இன்று  ஆச்சரியம் ! 

                      உண்மையில் இந்த சிரியப் போர் முஸ்லீம் உம்மத்திற்கு பல உண்மைகளை விளக்கி நிற்கிறது .ஈரான் மற்றும் அவர்களின் 'ஹிஸ்புஸ் சைத்தான்களது ' உருவத்தை தெளிவாக தோலுரித்து காட்டியது  உட்பட   இஸ்லாத்திற்கு எதிரான அணைத்து தரப்பையும் ஒன்றாகவே  முஸ்லீம் உம்மாவின் முன் வெளிக்கொண்டு வந்துள்ளது .

                    இஸ்லாத்திற்கு மத அந்தஸ்து கொடுத்து 'மஸ்ஜித்தோடு' முடக்கிப் போட்டு ,முஸ்லீம் உம்மாவை பல்வேறு பிரிவினைகளில் வாழ வைத்தது வரை இந்த சண்டியர்கள் பாடு கொண்டாட்டமாய் இருந்தது .இப்போது இஸ்லாத்தின் மீள் அதிகார வருகை பற்றி ஒற்றுமையோடு தெளிவோடு சிரியாவில் இருந்து வரும் குரல்கள் தான் இவர்களின் திண்டாட்டத்துக்கு காரணமாகும் . 

                       

No comments:

Post a Comment