Monday, December 2, 2013

அலிபோவின் உளவுப்பிரிவு தலைவன் மீதான மரண தண்டனையும் சிரிய முஜாஹித்கள் மீதான பொய்களும் !! (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)


 
(போராட்டங்களை அழிக்கும் சக்திமிகு ஆயுதங்களில் ஒன்று மீடியா. அது எப்படி சிரிய சமர்க்ளங்களி்ல் விளையாடுகிறது என்பதற்கு இது ஒரு சாம்பிள்)
 சில தினங்களிற்கு முன் இணையங்களில் சிரிய அல்-காயிதாவினர் மாற்று இஸ்லாமிய குழு உறுப்பினர்களை உயிருடன் பிடித்து அவர்களின் கைகளை பின்புறம் கட்டி முளந்தாள் நிலையில் வைத்து பிடரியில் பிஸ்டலால் சுடும் வீடியோ கிளிப்பை வெளியிட்டிருந்தன. கூடவே இரண்டு விடயங்களை போல்டாக ஹைலைட் பண்ணியுமிருந்தன. அதை அந்த இணையங்கள் இப்படி குறிப்பிட்டிருந்தன, “இஸ்லாமிய இயக்கங்களின் சகோதரபடுகொலைகள் என்றும், கைதிகளை (பிரிசினர்ஸ் ஒப் வோர்) கொள்வது மனித உரிமைக்கும் ஐக்கியநாடுகள் சபையின் சாஸனத்திற்கு முரணானது” என்றும். இதனை மேற்கின் ஊடகங்கள் வெளியிட்டவுடன் அதனை தமிழ் ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டிருந்தன. ஆனால் உண்மையில் அங்கே பரஸ்பரம் இஸ்லாமிய போராட்ட அமைப்புக்களிடையே உட்கொலைகள் நடக்கவில்லை. சரியான தெளிவுகள் இல்லாத செய்திகள் அவை. அப்படியென்றால் உண்மையில் என்ன நடந்தது.?..


  அலிபோவின் ஒரு பகுதி போராளிகள் கட்டுப்பாட்டிலும் இன்னொரு பகுதி சிரிய இராணுவத்தின் கட்டுப்பாட்டிலும் இருக்கின்றது. பல பிரதேசங்கள் மாறி மாறி இருதரப்பின் கைகளில் வீழ்வதும், மீளக்கைப்பற்றப்படுவதாகவும் உள்ளது. இப்பிரதேசங்களில் சிரிய உளவமைப்பினதும், இராணுவ உளவுப் பிரிவினதும் உத்தியோகத்தர்களும், அவர்களின் இன்போமர்களும் இருக்கின்றனர். இவர்கள் போராளிகள் பற்றியும், அவர்களது நகர்வுகள் பற்றியும், ஆயுதங்கள் உள்ள இடங்கள் பற்றியும் சிரிய இராணுவத்திற்கு துல்லியமான தகவல்களை வழங்கி வருகின்றனர். இதனால் போராளிகளிற்கு தொடர்ந்தும் இழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. 

  இவ்வாறான பஸர் அல்-அஸாதின் உளவாளிகளின் மிக முக்கியமானவன் Hasan Jazra என்பவனாவான். அலிபோவின் வோர் லோர்ட் என்று சொல்லுமளவிற்கு மட்டற்ற அதிகாரங்கள் இவன் வசம் இருந்தன. இவனது செயற்பாட்டு பாணியே அலாதியானது. இராணுவ உளவு செயற்பாடுகளிற்கும் அப்பால் சிரிய கிரிமினல் கொலைகார குழுக்களை அமைத்து படுகொலைகளை புரிந்து வந்தான்.

    மாபியா அமைப்புக்களின் நிர்வாக கட்டமைப்பையொத்த ஒரு நிழல் இராஜாங்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். போராளிகளின் ஆதரவு தளங்களை சிரிய இராணுவம் கைப்பற்றும் வேளைகளில் அவற்றை இவன் பொருப்பெடுத்துக்கொள்வான். மக்கள் ஆயுள்வரை மறக்க முடியாத கொடூரங்களை அங்கு நிகழ்த்துவான். அனைத்தும் கிரிமினல்கள் குழுக்களை கொண்டு. 

   அண்மையில் இவன் அலிபோவில் வைத்து “இஸ்லாமிக் ஸ்டேட் ஒப் ஈராக் அன்ட் ஷாம் எனும் ( ISIS ) போராளிகளினால் கைது செய்யப்படடான். இவனது குற்றங்கள் பட்டியலிடப்பட்டு ருசுப்படுத்தப்பட்டன.  "shabbihas" எனும் ஷியாக்களின் கொலைக்கும்பல்களை கொண்டே அப்பாவி சிரிய மக்கள் மீது கொலை பாதகங்கள் நிகழ்த்தப்பட்டன. 

  அதன் பின்னர் அவனிற்கான மரண தண்டனை பகிரங்கமாக நிறைவேற்றப்பட்டது. அவனுடன் கொலை பாதக செயற்பாடுகளில் நெருங்கி செயற்பட்ட அவனது சகாக்களிற்கும் அவனுடன் சேர்த்து தண்டணை வழங்கப்பட்டது. இதனைத்தான் ஊடகங்கள் “இஸ்லாமிய இயக்கங்கள் ஒருவரை ஒருவர் பிடித்து அல்லாஹு அக்பர் என்று முழங்கியவாறு படுகொலை செய்கிறார்கள் என்ற பொய்யான பிரமையை உருவாக்கின. அதனை நாமும் நம்பி விட்டோாம். .



***

You might also like:

No comments:

Post a Comment