Wednesday, December 11, 2013

மறைக்கப்பட்ட வரலாறுகள்!!!(ஒரு முக நூல் பதிவில் இருந்து ...)

  
    (சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் பற்றி முதலைக் கண்ணீரோடு பேசும் ஏகாதிபத்தியங்களும் அதன் கைக்கூலிகளும் அவர்களது மனித விழுமியங்களுக்கு மதிப்பளிக்காத  நாசகார செயல்கள் பற்றி மட்டும் உலகின் கண்களை ஏமாற்றிய செய்திகளையே தகவல்களாக தருகின்றன . என்பதை உணர்த்தும் ஒரு ஆதார சம்பவமே கீழே வரும் பதிவாகும் .     - ABU RUKSHAAN )  



    நாமோ அல்லது நம் பிள்ளைகளோ கடல் கொள்ளையர்கள் ஆவோம் என உங்களுக்கு தெரியுமா ?சோமாலிய என்றவுடன் நமது நினைவுக்கு வருவது கடும் பஞ்சம் மற்றும் கடற் கொள்ளையர்கள்...



    2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை நாம் யாரும் மறந்திருக்க வாய்ப்புகள் குறைவு.மாபெரும் கடல்சீற்றத்தில்ஆசிய நாடுகள் இலச்சக்கனகான மக்கள் கொல்லப்பட்டதையும் யாரும் மறந்திருக்க வாய்புகள் குறைவு.கடல் சீற்றம் அடங்கியபோது உலகின் மீடியாக்களில் சுனாமி தான் பல நாட்களுக்கு தலைப்பு செய்தி.


    ஆனால் சுனாமி பாதிப்பு என்பது ஆசிய நாடுகளை விட ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது...

கடல் சீற்றத்தின் வாயிலாக இல்லை..

    மாறாக இந்த கடல் சீற்றத்தின் போது பல அணு கழிவுகள் சோமாலிய மணற்பரப்பை வந்தடையும் சூழல் ஏற்பட்டது...இந்த கோரமான அணு கழிவுகளின் பாதிப்பில் இருந்து சில மாதங்களிலேயே இலச்சக்கணக்கான சோமாலிய மக்கள் பலியாகினர்..


   மேலும் பலர் புற்று நோயிக்கு பாதிப்புக்குள்ளாயினர் .இந்த செய்திகள் அனைத்தையும் திட்டமிட்டு மீடியாக்கள் வெளிவரவிடாமல் மறைத்தன.. காரணம் இந்த அணுக கழிவுகளை சட்டத்திற்கு புறம்பாக சோமாலிய கடற்பரப்பில் கொட்டியது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கப்பல்கள் ஆகும்.

  தொடர்ந்து கொட்டப்பட்ட இந்த கழிவுகளின் காரணமாக சோமாலிய கடற்பரப்பில் இருந்த மீன்வளங்கள் அனைத்தும் அழிந்து போயின.

   இன்று சோமாலிய கடற் கொள்ளையர்கள் என்று நாம் கூறும் இவர்கள் அனைவரும் முன்னர் மீனவர்கள்.. இதை நம்பமுடிகிறதா?

   அவர்களின் கடற்பரப்பில் வந்து கொண்டிருக்கும் கப்பல்களை பிடித்து அதில் உள்ள மாலுமிகளை பணயக் கைதியாக பிடித்து வைதிருப்பதை அல்லது அவர்களுடன் ஏற்படும் சண்டையில் கொல்லப்படும் மாலுமிகளை பற்றி தினம் தினம் செய்திகளை வெளியிடும் மீடியாக்கள் ஏனோ ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளின் அணுக்கழிவுகள் திருட்டுதனமாக சோமாலிய கடலில் கொட்டப்பட்டதன் விளைவு தான் சோமாலியாவில் இலட்சக் கணக்கான மக்கள் இறந்தனர் என்ற உண்மையை மட்டும் உலகிற்கு கூறாமல் மறைத்து வருகின்றனர்..

சரி........

கூடங்குளத்தில் ஒருவேளை அணு உலையின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் போது அதில் கிடைக்கும் கழிவுகளை இந்திய  அரசு என்ன செய்யும் தனது  சொந்த கடலில் கொட்டுமா ?

நன்றி- வரதராஜ் thanks to @Atika Ashrin — with Ahmed Yahya Ayyaz and 11 others.

No comments:

Post a Comment