Monday, July 8, 2013

கற்ற பாடங்கள் போதும் சகோதரா.! (பகுதி 02)


தாருள் இஸ்லாத்தை குப்ரால் குளிப்பாட்டி 
தேசிய விலங்கிட்டு மனித அடிமைதுவத்துக்கு 
முஸ்லிமை மறுபிரவேசம் புரிய வைத்தது 
அந்த 1924 ம் ஆண்டுதான் ! - வில்லங்கம் அன்று 
தாத்தாரியர் பாக்தாதுக்குள் நுழைந்தது போல் 
வாளேந்தி வரவில்லை ! அது இந்த முஸ்லீம் 
உம்மத்தின் உதிரத்தில் உதித்த ஒரு அடாவடி 
மகனால் தான் நிகழ்ந்தது 'ஜாஹிலீய ' மயக்கத்தில் 
மதிகெட்டு அந்த மாபாதன் முஸ்தபா கமால் அதாதூர்க் 
மிதித்தான் இஸ்லாத்தின் அரசியலை என்பது உண்மை .

ஆனால் அதற்குமுன் அரபி அஜமிக்கு அடிமையா !?
என்ற மமதை நெருப்பு 'கிலாபாவை ' பற்றவைத்து 
சகோதரத்துவத்துவத்தை சாம்பலாக்கி அதில் 
சுல்தானிசம் சுயநலத்தோடு சுகப்பிரசவம் கண்டதும் 
மறுக்க முடியாத உண்மையாகும் .அந்த எறிந்த வீட்டில் 
கொள்ளி பிடுங்குவது 'தாகூதிய ' கோட்டான்களுக்கு 
சுலபமாய் போனது !அது குரங்கு கையில் 
பூமாலையாகி மரம் தாவித் தத்துவத்தில் முஸ்லிம் 
உலகின் அரசியலை மாற்றியது !

கோலா லீற்றருக்கு மசகு எண்ணை பீப்பா சமன் என்ற 
'வெஸ்டன்' புரபிட் பேஸ்' அந்தப்புர' பெனிபிட்களால் '
புரிந்தும் புரியாமல் விடப்பட்டது ! இந்த முஸ்லீம் 
'கிங் கோப்ராக்களுக்கு ' மகுடி வாசிப்பு என்னவோ 
பிரிட்டிஷ் M I 5 வும் U .S பென்டகனும் தான் என்பது 
ஓபன் சீக்கிரட் ! எதிர்த்துக் கேட்போரை 'நீங்கள் 
கேட்டவை என அடக்கி வாசிக்கத்தான் 
'சரீயா ' சட்டமாம் இந்த பூச் சுத்தலுக்கு ரிசவ் 
'பதுவாக்களோடு ' கிளிப்பிள்ளை ஆலிம்கள் 
உலகெங்கும் ஏராளம் !
(இன்னும் தொடரும் ..)

No comments:

Post a Comment