Thursday, July 25, 2013

நாங்கள் முஹம்மதின் (ஸல் ) படை ...


இந்த முஸ்லீம் உம்மத்தின் வாழ்வின்  மீது 
அநீதப்  பூட்டுப் போட்டு அதன் சொந்த முற்றங்களில் 
அவலங்களால் நிரப்பி ஆனந்தப் படும் 
அல்லாஹ்வின் எதிரிகளே !?

அயோக்கியத்தை நியாயமாக்கி  நீ 
அடிவருடித்தனத்தை சுயநல இலாப பிச்சை காட்டி 
எமக்குள் விதைத்தாய் ! அந்த கோடரிக் காம்புகள் 
தேசிய விலங்கிட்டு சகோதரத்துவத்தை 
ஒருபக்கம் கேள்விக்குறி ஆக்கின !

'ஹரத்தின்' எல்லைக்குள் 'ஹராம்' வந்தாலும் 
பரவாயில்லை ! என பரம்பரை முடிகாக்க  வெள்ளைத்தோல் 
கொள்ளையருக்கு இஸ்லாத்தின் தூய நிலங்களில் 
சல்லாபிக்க மடம் கட்டிப்போட்டு அவன் 
சாவகாசமாய் பவனி வர கழுதையாய் 
உழைக்கும் கண்றாவி மன்னர்கள் மறுபக்கம் !

சதிகளும் ,சாக்கடையில் புரள்வதில் சந்தோசமும் 
இருண்ட வாழ்வின் மீது சந்தர்ப்ப நியாயங்களால் 
வார்த்தை ஒளி கொடுக்கும் 'செக்கியூலர் இஸ்லாமிச'
செம்மல்கள் வேறு மல்லாக்காய் பறக்கும் 
வெள்ளைக் காக்கை காட்டுவோம் !! என்ற 
குருட்டு நம்பிக்கையில் இன்னொரு புறம் !!

ஆனால் அந்த முஹம்மதின் (ஸல் ) படை மட்டும் 
ஓயாத அலைகளாய் சத்திய விடியல்களை படைக்க 
குருதியின் விலை கொடுத்து சுன்னாவின் வழி 
உறுதியோடு உழைக்கிறார்கள் ! சஹாதத்தின் வேட்கையில் 
மரணபயம் வெருண்டோட அல்லாஹ்வை 
இன்முகத்தோடு  சந்திக்க 'தாகூத்' மீது 
இடியாய் இறங்குகிறார்கள் ! இன்ஷா அல்லாஹ் 
நம்புங்கள இறையாட்சி மீண்டும் பிறக்கும் 
மனித  அடிமை  விலங்கு தெறிக்கும் 
அல்லாஹு அக்பர் .. அல்லாஹு அக்பர்..அல்லாஹு அக்பர்

No comments:

Post a Comment