Monday, July 8, 2013

கற்ற பாடங்கள் போதும் சகோதரா.! (பகுதி 03)


செக்கியுலரிச அகராதியில் மார்க்கம் மதமாகி !
மஸ்ஜித் கதவுகளால் சற்று எட்டிப் பார்க்க 
'எக்ஸ்பயார்ட் ' ஆக்கப்பட்ட சத்தியத்தின் பூமி 
சண்டாளர்களால் சதிக்கோல வாழ்வியலால் 
பிரித்தாளப் பட்டிருந்தது ! இந்த அவமானத்தை 
அரவணைத்த உம்மத்தின் புத்திரர்கள் 
அறியாமைச் சடத்துவத்தில் புதுச் சுவை கண்டார்கள் !
இன்றுவரை தொடருது இந்த இழிவான அரசியல் !
அது தாகூதிய தாண்டவம் ! 
சகோதரா !அதில் நீயும் ஓர்  கூத்தாடியா !?

எரிந்து விட்டது கூரை இனி தெளிவாய் தெரியும் 
நிலா ! என சூழ்நிலையில் சுகம் காண முடியாது !
விரல் விழுந்து விட்டது இனி நகம் வெட்டும் நேரம் 
மிச்சம் ! என இருப்பதில் இலாபம் பார்ப்பது ஒன்றும் 
இஸ்லாம் கற்றுத் தந்த ' ஹிக்மத் ' அல்ல !
சந்தர்ப்ப வாதப் புதை குழியில் 'அல்ஹம்து லில்லாஹ் '
என்று அமர்ந்து நாமே எம் தலைக்கு மண்ணள்ளிப் 
போட முடியாது சகோதரா !

இஸ்லாம்தான் இலக்கானால் அதன் அடைவுப் 
பாதையை 'குப்ரா ' காட்டித்தரும் ! இப்லீஸ் சொல்லித் 
தந்த 'ஆயத்துல் குர்ஷி ' போன்றதா ' திமோ கிரசி '!?
வேத வாக்காகக் கொள்ள !? வஹியை வாழ்க்கையாக்குமுன் 
'மௌட்டீக ' குப்பையை நம்பியா குடும்பம் நடத்துவது 
முஸ்லீம் என்ன பொறுக்கித் திண்ணியா சகோதரா !?

ஏகாதிபத்தியப் பேய்கள் I. M.F  கடிவாளத்தோடு 
உன்வாசல் வந்தபோது, அது  ஏதோ அற்புத விளக்கு போல் 
காட்டி 'அலாவுதீன் கணக்கில் நீ 'ரீல் 'விட்டபோது ,
'ஹலாலின்' நிர்வாணத்தை வட்டியுடை உடுத்தி 
'ஹராம் ' எளனித்த போது,  வயிற்றெரிச்சலோடு 
உன்னை எச்சரித்தோம் ! அப்போதும் அபூஜாஹில்களுக்காக 
புறக்கணிக்கப் பட்ட உம்மி மக்தூம்களாக (ரலி )
நாம் ஆக்கப் பட்டாலும் , இன்று சில நேரம் புரிந்திருக்கும் 
பிறவிக் குருடன் காட்டும் காலைக் காட்சிதான் 
உன் விளக்கம் என்பதை !? இருந்தும் உனக்காக 
தொடர்ந்தும் பிரார்த்திப்பேன் நீ என்றும் என்  சகோதரன் ....
                                      
                                          (இன்னும் வளரும் )

No comments:

Post a Comment