Thursday, July 18, 2013

இஸ்லாத்தின் மீள்வருகை தொடர்பில் தவறான அணுகு முறைகள் .


"இன்று முஸ்லீம்களின் நிலை இப்படி இருக்கிறது ; சுலபமாக இருக்கின்ற இஸ்லாமியச் சட்டங்களை அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறார்கள் . ஆனால் இஸ்லாத்திற்கும் குப்ருக்குமிடையில் அடிப்படையான மோதல் ஏற்படும் கட்டத்தில் தமது முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள் . தாம் இஸ்லாத்தில் தாம் பூரணமாக இருக்கிறோம் என கூறிக்கொள்ளும் பெரிய ,பெரிய ஆசாமிகளிடமும் இந்தப் பலவீனம் இருக்கிறது .



         'இஸ்லாம் ,இஸ்லாம் என அவர்கள் உரத்து சத்தம் போடுவார்கள் . அதற்கு விளக்கம் கொடுத்து கொடுத்து அவர்களின் நாவு வறண்டு போய்விடும் .இதற்காக அவர்கள் சிறிது பகட்டான வேலைகளும் செய்வார்கள் ! ஆனால் அவர்களிடம் "இஸ்லாத்தின் சிறப்பை நீங்கள் இவ்வளவு பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள் , அதற்குள் உங்களையும் நம்மையும் பூரணமாக உட்படுத்தும் ஒரு செயல் திட்டம் பற்றி நாம் சிந்திக்கலாமா ?" என்று கேட்டுப் பாருங்கள் ! உடனே அவர்கள் ,"இதில் தற்போது பாரிய சிரமம் இருக்கிறது !? இப்போதைக்கு விடயங்கள் அப்படியே இருக்கட்டும் "என்று கூறி விடுவார்கள் !?


           இதன் கருத்து என்ன ? பூரண இஸ்லாம் என்பது ஒரு கவர்ச்சி கரமான பொருள் ;அதனை முகட்டின் மேலே தனியாக (கடந்த வரலாறாக )வைத்து விடுங்கள் ; (அதன் தவிர்க்க முடியாத சொந்தக்காரர்களாக  ரசித்து ருசித்து) அதற்கு தூரத்தில் இருந்து கொண்டு) பாராட்டிக் கொண்டிருக்கலாம் . நம்மீது அதனை சுமத்த முயற்சிப்பது ( ஏதோ 
தற்கொலைத் தனமானது ) சிரமமானது (அல்லாஹ்வே விடயத்தை சுலபமாக்கித் தரும் வரை ) இந்த பேச்சுக்கே இடமில்லை என்பதா !? ......

 
                                                                        (ஒரு இஸ்லாமிய அறிஞர் )

                                                                     வஹி வரைந்த பாதை ,அதை நடைமுறைப் படுத்த எம் முன்னோர்கள் கண்ட சோதனைகள் என்பவற்றை மறந்து ,எதோ பேச்சளவில் இஸ்லாம் என்றும் பொருந்தும் எனக் கூறி தற்போது வாழ்வியலில் 'ஜாஹிலீயத்தின்' மேலாதிக்கத்தை ஒரு 'அட்ஜஸ்ட்மண்டாக ' சரிகண்டு அவர்களின் விருப்பப் படி எமது இஸ்லாம் மார்க்கத்தை வெறும் மதமாக பூஜிக்கும் எம்மவர்கள் சற்று சிந்திக்க வேண்டும் .


                                தனது மூக்கு நுனிவரை (பெயரளவில் ) எமக்கு சுதந்திரத்தை வழங்கியுள்ள குப்ர் இஸ்லாத்துக்கு எதிரான ஒரு மாற்று  சித்தாந்தம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது .அது அதன் பிரத்தியோகமான அரசியலில் இருந்து அதிகாரத்தையும் , அதற்கான வாழ்வியல் நோக்கிய ஒரு தெளிவான நாகரீகத்தையும் மனித வாழ்வியலுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வாழ விரும்பினால் வாழு என்பது தான் குப்ரின் முடிவு .


                    இறைவன் எமக்களித்த பிரதி நிதித்துவ (கிலாபா ) அரசியலையும் , முழு முஸ்லீம் உம்மாவுக்குமான பிரதி நிதித்துவ (கலீபா ) ஓர் தலைமை அதிகாரத்தையும் ,அதன் மூலம் எல்லாம் வல்ல இறைவன் பூரணமாக அவன் விரும்பிய பிரகாரம் வாழ வஹி மூலம்  கட்டமைத்து தந்த இஸ்லாமிய நாகரீகத்தையும் முஸ்லீம்களாகிய நாம் கைவிட வேண்டும் என்பதே குப்ர் எம்மீது தொடுத்துள்ள போர் ஆகும் .

                       இந்தப் போரை நாம் எவ்வாறு எதிர் கொள்வது !? இதுதான் இன்று ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சினை . ஏறத்தாழ கீழ்வரும் தீர்வுகளே எம்மவர்களால் முன்வைக்கப் படுகின்றது . 

 1. நாங்கள் சில அடிப்படை இபாதாக்களையும் ,அஹ்லாக்குகளையும் பேணுவோம் காலத்தால் அல்லாஹ் (எதோ மந்திரத்தால் பறிக்கும் மாங்காய் போல) எமக்கு வெற்றியை தருவான் எனக் கூறி கீழ்வரும் அல்குர் ஆன் வசனத்தையும் ஆதாரம் காட்டுகிறார்கள் 

   "உங்களில் ஈமான் கொண்டு நற்செயல்கள் (அமலுஸ் சாலிஹாத் )புரிகிறார்களோ அவர்களை , அவர்களுக்கு முன்னிருந்தவர்களை ஆட்சியாளர்கள் ஆக்கியபோல் ,  இவர்களையும் நிச்சயமாக  பூமியில் ஆட்சியாளர்களாக ஆக்குவதாகவும் ,இன்னும்   அவர்கள் பொருந்திக் கொண்ட(இஸ்லாம் ) மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக   நிலைப்படுத்துவதாகவும் , அமைதியையும் ,பாதுகாப்பையும் கொண்டு அவர்களுடைய  பயத்தை மாற்றி விடுவதாகவும் அல்லாஹ் வாக்களித்திருக்கிறான் "  
     
                                                                             ( சூரா அல் நூர் : வசனம் 55)

    
  
  
  
                                                                     அமலுஸ் சாலிஹாத் என்பது  வெறும் அடிப்படை இபாதாக்கலான( தொழுகை , நோன்பு ) போன்ற சிலவிடயங்களையும் ,இன்னும் சில அஹ்லாக்குகளையும் செய்வது மட்டுமல்ல ,வஹியின் திட்டமிட்ட எல்லா நகர்வுமே ஆகும் . (அது 'அர்க்கம் (ரலி)யின் வீட்டை தேடிச் சென்றது முதல் அபீசீனிய நகர்வு , அகபா ,பையதுர் ரிள்வான் போன்ற ஒப்பந்தங்கள் , ஜிஹாதியக் களங்கள் ,அதில்  கொல்லுதல் ,கொல்லப்படுதல் இப்படித் தொடரும் ) இப்படிதான் எம் முன்னோர்கள் மார்க்கத்தை விளங்கி இருந்தார்கள் விளக்கினார்கள் , நடைமுறையில் காட்டினார்கள் . சுன்னாவை புறக்கணித்து இஸ்லாம் பேசும் இந்தத் தவறை விட்டு விடுவோமா !?




                                                                                                                                                        (வளரும் ..)

No comments:

Post a Comment