Thursday, July 4, 2013

எகிப்தில் 'மெஜாரிட்டி பவரில் ' மிளிரப் போகும் சத்தியம் .... ஒரு பார்வை (2012 டிசம்பர் 20இல் பதிந்தது காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு )


         ஒளியை  மிளிரச் செய்ய இருளிடமும் அனுமதி கேட்பதா ? 'ஹக்கை ' அமுல் படுத்த 'மெஜாரிட்டி 'பவரா ? அதுவும் இஸ்லாத்தை அமுல் படுத்த முஸ்லீமிடமே உத்தரவு வேண்டப் படுகின்றதா ? சற்று குழப்பமான  விடயம்தான் . வேலி போட பயிரின்  அனுமதி வேண்டுமாம் !!


 நியாயங்களை புதைத்து விட்டு ஒப்புக்காக காரணம் தேடுவது அயோக்கியத்  தனமானது . 'வஹியின் ' தேவைப்பாடு தொடர்பில் விகிதாசாரம் பார்ப்பது ஒரு முஸ்லிமை பொருத்தவரை மிகத் தவறானது . அல்லாஹ்வின் மார்க்கத்தை பலதோடு ஒன்றாக நிணைப்பதும் அறிவிற்கு பொருந்தாதது . நடப்பது இதுதான் (நவீன ஜாஹிலீயத் எனும் )ஜனநாயக விழுமியங்களின் கீழ் 'வஹி ' விளையாட்டுத் தனமாக ஏளம் விடப்பட்டுள்ளது .



                                         'வஹி' விருப்பாளர்கள் வெற்றி பெற்றால் அதுவும் சில நிபந்தனைகளோடு பிரயோகிக்கப் படலாம் ,  'வஹியை ' விரும்பாதோர் வெற்றிபெற்றால் வழமை போலவே 'வஹி , கிடப்பில் போடப்படும் .அவ்வளவுதான் . 

                                             ஜெஸ்மின் புரட்சியின் சடவாத முன்னுரிமை இதுதான் .அதாவது ஆட்கள் தொகையே சத்தியத்தையும் நடைமுறை சாத்தியமாக்கும் .மேலும் நவீனம், காலத்தின் தேவை  'வஹியை ' காலாவதி ஆக்கும் வல்லமை பொருந்தியதாம் .

                                               உண்மையில் இங்கு நடக்கின்ற கதை சாத்தியத்தை காரணம் காட்டி இஸ்லாம் மதச்சார்பின்மை எனும் தூக்குக் கயிற்றின் முன் நிறுத்தப் பட்டுள்ளது . கடைசி நிமிடத்தில் அதனை பெரும்பான்மை சிலநேரம் காப்பாற்றலாம் .அல்லாது விடின் அசத்தியம் சாத்தியமாக உலாவரும் .ஆச்சரியமான தீர்ப்பு ! இது அல்லாஹ்வுக்கே நியூ சிலபஸ் போல் தோன்றவில்லையா !!?

                                           நாம் முஸ்லீம் என்பதிலேயே இன்று வெட்கப்பட வேண்டியுள்ளது . வாக்குச் சாவடிக்குள் முண்டியடித்து 'வோட்டுப்' போட்டுத்தான் அல்லாஹ்வின் மார்க்கத்தை அமுல் நடாத்த கோரவேண்டியுள்ளது . முஸ்லீம் என்ற சொல்லுக்கு கட்டுப்படுதல் எனும் பொருள் உண்டு தெரியுமா ?எதற்கு ?என்ற இன்னொரு கேள்வி கேட்டால் இங்கு  நாறிப் போகும் பிழைப்பு !!


                                           இந்த முஸ்லீம் உம்மத்தின்உயிரோட்டம் மழுங்கடிக்கப் பட்டுள்ளது. அது சுத்திச் சுத்தி சுப்பனின் கொல்லை என்பது போல் 'திமோகிரசி ' கண்ணாடி போட்டுத்தான் உலகத்தை பார்க்க வேண்டுமாம் .என்பது ஏவல் விலக்கல் தொடர்பில் முஸ்லீம்களுக்கு  கிறிஸ்தவம் போல இனி ஒரு புதிய ஏற்பாடு .அதாவது வாழ்வியலை தீர்மானிப்பது' மெஜாரிட்டி பவர் ' !! சுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது .

                                           இஸ்லாத்தின் எதிர்பார்ப்பு அது தன்னை அமுல் படுத்த நிபந்தனையற்ற உதவியையே வேண்டி நிற்கும் .அந்த உறுதிப்பாடான நிலை உருவாகும் வரை சிந்தனா ரீதியாக போராடும் .தனது எழுச்சிக்காக ஆள் வளத்தை திரட்டுவதென்பது வேறு ,தன்னை நியாயப் படுத்த ஆள்வளத்தில் தங்கி நிற்பது வேறு .இந்த இரண்டு நிலைப்பாடுகளும் ஒன்றாகி விடாது . தவிர 'சுன்னாவில்' இருந்து ஆதாரம் காட்ட முடியாதது .   

                                              சத்தியத்தின் போராட்டம் என்பது கிடைப்பதை சுருட்டிக் கொண்டு கிடைக்காததற்கு பெரும் பான்மையின் வாக்குப் பிச்சை வேண்டுவதல்ல . இஸ்லாத்தை இகாமத் செய்யவே  இங்கு அதிகாரம் கோரப்படும். அதிகாரத்துக்காக இஸ்லாம்  சோடை போக வைக்கப்படக் கூடாது . அல்லாஹ்தான்  நம் அனைவரையும் யகூதி ,நசாராவை பின்பற்றும் கீழ்த்தரமான வழிமுறைகளில் இருந்து பாதுகாக்க வேண்டும். 
              

No comments:

Post a Comment