Friday, July 12, 2013

அந்த நாள் முதல் இந்த நாள் வரை ......


    நான் கீழ்தரும் சம்பவம் 1965ல்  எகிப்தில் நிகழ்ந்தது . சோவியத் யூனியனதும் , அமெரிக்க ஏகாதி பத்தியத்தினதும் விசுவாசம் மிக்க கங்காணிகளாக தொழில்பட்ட ஜமால் அப்துல் நாசரின் அநீதமான அடக்குமுறை ஆட்சியின் கீழ் அல் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தினர் மிகக் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட காலப்பகுதி . அந்த இயக்கத்தின் அதி முக்கிய உறுப்பினரான செய்யத் குத்ப் (ரஹ் ) இரண்டாம் முறை கைது செய்யப் படுகிறார்.





             இவரது உடல் நலன் முற்றாக பலவீனமான நிலையில் இருந்தபோதும் இரும்புச் சங்கிலிகளால் பிணைத்து இழுத்துச் செல்லப் படுகிறார் . நாசர் தரப்பு இம்முறை ஒரு தெளிவான முடிவோடு இவர் விடயத்தில் இருந்தது . இவரது குற்றச் சாட்டுகள் மற்றும் விசாரணை தொடர்பில் இரகசிய விசாரணையோடு கூடிய இராணுவ நீதிமன்றமே தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தது. இந்த விசித்திர விசாரணையில் குற்றங்களை மறுக்கும் அனுமதி கூட மறுக்கப் பட்டிருக்க ஏறத்தாழ 11 குற்றச் சாட்டுகள் தொடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப் பட்டிருந்தது .


          இந்த 11 குற்றச் சாட்டுகளும் இவர் எழுதிய 'மைல் கற்கள் ' என்ற நூலை அடிப்படையாக வைத்தே அத்தீர்ப்பு வழங்கப் பட்டிருந்தது .armed force magazine ,volume number 446, 18 அக்டோபர் 1965ல் இத் தீர்ப்பின் விபரம் வெளியிடப் பட்டிருந்தது . இந்தக் குற்றச் சாட்டுகளின் சுருக்கம் ஒன்றை 'அல் இஹ்ராம் 'எனும் நாளிதழ் வெளியிட்டது . அது கீழ் வருமாறு இருந்தது .


1. செய்யத் குத்ப் தன் சொந்த நாட்டுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார் .இந்த வகையில் தன் சொந்த நாட்டுக்கு துரோகம் செய்தார் .

2.இவர் எகிப்தின் பொறுப்பு மிக்க தலைவர்கள் ,அதிகாரிகளை கொலை செய்ய திட்டம் தீட்டினார் .

3.எகிப்தின் புகழை உலகில் உயர்த்திடும் நடிகர்களையும் ,நடிகைகளையும் கொலை செய்ய திட்டம் தீட்டினார் .

4. மைல் கற்கள் எனும் இவரது நூலில் இந்த உலகில் இருக்கும் எந்தக் கொள்கையும் மனித இனத்தை அழிவில் இருந்து காத்திடாது . இஸ்லாம் மட்டுமே மனித சமூகத்தை அழிவில் இருந்து காக்கும் வல்லமை மிக்கது என சாதிக்கிறார் .

5.இவர் மைல் கற்கள் எனும்  இவரது நூலில் எகிப்தில் இருக்கும் ஆட்சியும் ,ஆட்சியாளர்களும் 'ஜாஹிலீயா ' எனும் அறியாமையில் இருப்பதாக நிரூபிக்கிறார் .இதன் மூலம் யாருக்கு கீழ்ப்படிய வேண்டுமோ ,அவர்களுக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்கிறார் .

6.இவர் மைல் கற்கள் என்ற நூலில் எகிப்திலிருக்கும் ஆட்சியாளர்கள் அல்லாஹ்வின் சட்டத்தை செயல் படுத்தவில்லை .இவர்கள் அல்லாஹ்வின் ஆட்சியை அபகரித்துக் கொண்டார்கள் .இவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக கிளர்ச்சி செய்பவர்கள் என வாதிக்கின்றார் .இதன் மூலம் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை கிளர்ச்சி செய்ய தூண்டுகிறார் .

7.மேலும் இந்த நூலில் எகிப்தின் இன்றைய ஆட்சியாளர்களின் கைகளில் இருந்து ஆட்சியை மீட்டே ஆகவேண்டும் எனப் பிரகடணப் படுத்துகிறார் .இதற்கு பலத்தை பிரயோகிப்பது விரும்பத்தக்கது மட்டுமல்ல கடமையும் ஆகும் என வாதிக்கிறார் . அல் குர் ஆன் வசனங்களை இதற்கு ஆதாரப் படுத்துகிறார் . இது ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய ஒரு புரட்சியை தூண்டிவிடும் மன்னிக்கவியலாத குற்றமாகும் .



8. மேலும் இந்த நூலில் இறைவன் தன் தூதரிடம் (ஸல் ) யாரெல்லாம் அவருடன்  போராட வருகிறாரோ அவர்களோடு போரிட வேண்டும் என்றும் ,யாரெல்லாம் போரிட விரும்பவில்லையோ அவர்களை விட்டுவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டதாக கூறுகிறார் .அத்தோடு இஸ்லாம் தற்காப்புக்காக தான் ஜிஹாதை கடமை ஆக்கியுள்ளது ;என்பதை மறுத்து ஜிஹாத் என்பது மனிதன் மனிதனை ஆதிக்கம் செலுத்தும் நிலை இருக்கும் வரை தொடர வேண்டும் என வலியுறுத்துகிறார் .இஸ்லாம் எனும் பேரியக்கத்தின் இயல்பும் ,போக்கும் இதுதான் என்கிறார் .

9. அதே போல இஸ்லாம் மேலோங்கிய பின்னால் பின்னால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறும் கிளர்ச்சியை யாரும் செய்ய முடியாது என்று கூறுகிறார் .

10. இஸ்லாத்தை நிலைநாட்டுவதில் ஏற்படும் அத்தனை தடைகளையும் அவசியமானால் பலத்தை பயன்படுத்தி அகற்றிட வேண்டும் ; இதை அல் குர் ஆன் வசனங்களை கொண்டே நிரூபிக்கிறார் .



11.மேலும் இந்த நூலில் குத்துப் ,அதிகாரம் ,பலம் ,அல்லாஹ்வின் ஆட்சி ,அதற்கு எதிரான தடைகள் அகற்றுதல் என்ற பதங்களை அதிகம் பிரயோகிக்கிறார் , இது ஒரு புரட்சியை தூண்டும் வசனங்களாகும் .


                                 மேலே தந்தவையே அந்த எகிப்திய இராணுவ நீதி மன்றம் செய்யத் குத்ப் மீது சுமத்திய குற்றமாகும் . இந்த மனோபாவத்தில் இருந்து இன்றுவரை எகிப்திய இராணுவம் தனது மனோபாவத்தை கைவிடவில்லை . அதாவது இஸ்லாத்தை வெறும் மதமாக சிந்திக்கும் முஸ்லீம் தவிர யாருக்கும் எகிப்தில் இடமில்லை . ஆனால் இஸ்ரேலோடு உறவு மட்டும் நிரந்தரமானது . இது யாருடைய இராணுவம் !? 



No comments:

Post a Comment