Thursday, July 11, 2013

கற்ற பாடங்கள் போதும் சகோதரா ...! (பகுதி 04)

கிங்க்ஸ் ஸ்டைல் பொலிடிக்ஸ் முஸ்லீம் நிலங்களில் 
இஸ்லாத்தை எதோ 'ஊறுகாய்' போல் தேவைக்கு ஏற்ப 
அவ்வப்போது தொட்டுக்கொள்ளும் ! அந்த 'கிங் டோமை '
'கூல்' ஆக்கும்'முதவாக்களின் பத்துவாக்கள்' சிலுவை 
நிழலில் மன்னன் சொல்லும் நியாயங்கள் முன் 
மௌனித்து வஹியை கௌரவமாக எளனிக்கும்!

செக்கியுளர் திமோகிரசி இஸ்லாத்தை முஸ்லிமுக்கே 
கறி வேப்பிலை ஆக்கி சற்று வாசனையோடு வாழ விடும் 
ஆனால் இஸ்லாத்தால் ஆல விடாது ! இங்கு 
அல்லாஹ்வின் விருப்பம் மனித தேர்வுகளின் முன் 
ஒரு கௌரவப் புறக்கணிப்பு ஆகிவிட 'வஹி' யும் 
ஒரு தேர்வாக பெயரளவில் உலா வரும் !

நுபுவ்வத்தின் வழியில் கிலாபாவை கொண்டுவர 
ஸுன்னாவின் வழியில் பாதையை சகோதரனே  நீ தேடு!
அதில்  தான் உனது இம்மை வாழ்வில் இஸ்லாம் 
செழிக்கும் ஒரே வழியாகும் . இந்த உண்மைகளை உணராமல் 
குப்பாரின் செல்லரித்த கொள்கைகளில் புல்லரித்துப் போய் 
சாக்கடையில் மூழ்கி சந்தனம் தேடும் இன்னொரு 'வேர்சனுக்கு '
நாள் குறித்தால் மறுமையில் அல்லாஹ்வின் கேள்விக்கு 
பதில் கொடுக்கவும் காத்திரு ! அல்லாஹ் நம்மை இந்த 
இழிவில் இருந்து பாதுகாப்பானாக ...
                                                                               (முற்றும் )
     

No comments:

Post a Comment