Wednesday, July 10, 2013

முகமூடி யுத்தம் எனும் இராணுவ பாசை ..! குப்ரிய அரசியல் தம் அழிவை தடுக்க தேர்ந்துள்ள இறுதி மொழியா !?


      சந்தர்ப்பங்களை மிகச் சரியாக பயன்படுத்துவதில் இருந்து தான் குப்பார்களின் அரசியல் ஆதிக்க சதிகள் முஸ்லீம் உலகில் நிகழ்த்தப் படுகின்றன .ஆனால் இவர்களின் திட்டமிடல் என்பது ஒரு சவாலே தவிர விதியல்ல . முஸ்லீம் உலகில் இஸ்லாமிய அரசியல் வந்து விடக் கூடாது எனும் அச்சம் தவிர இதற்கான பலமான காரணம் வேறு இருக்க முடியாது .


       முஸ்லீம்களின் பலம் வாய்ந்த இராணுவங்களை பலமிழக்க வைப்பதே லிபிய ,எகிப்து ,சிரிய விவகாரங்கள் மூலம் குப்ரிய எதிர் சக்திகள் சாதிக்க நினைப்பவை என தவறாக சில ஊடகங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றன . ஒரு ஒப்புக்காக இந்த கருத்தை நாம் ஏற்றுக் கொண்டாலும் ,குப்ரிய மேலாதிக்கத்துக்கு எதிராக இந்த இராணுவ வலிமை எப்போது மிகச் சரியாக பயன்பட்டுள்ளது !? என்ற வினாவோடு நிலைமையை ஆராயும் போது அதன் விடை தேசிய விதிகளுக்குள் முடக்கப்பட்ட குப்ரிய மேலாதிக்க அரசியலின் 
துணை கருவியாக பயன் பட்டுள்ளதா !? என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தி நிற்கின்றது .



        முஸ்லீம் உலகின் இஸ்லாமிய அரசியலுக்கான சாதக சூழ்நிலைகளை ,அதற்கான அறிகுறிகளை காணும் பட்சத்தில் அவை தடுக்கப்பட ,திசை திருப்பப் பட சில நிர்ணயங்களை அவசரமாக செய்ய வேண்டிய கடப்பாடுகள் பற்றிய தடுமாற்றத்தை குப்ரிய சக்திகளுக்கு ஏற்படுத்தி விடும் .ஏறத்தாழ அவ்வாறான குழப்ப நிலைதான் இன்று மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ளது . 



                                                                         சுமூகமான குப்ரிய திட்டமிடல்கள் பலமிழந்து வரும் நிலையில் அது இஸ்லாத்தை மட்டுமே தீர்வாக வேண்டும் மக்களை நோக்கி இராணுவ அடக்கு முறையை அதற்கான சில நியாயங்களோடு பயன் படுத்தும் 'முகமூடி யுத்தத்தை 'தொடுக்க வேண்டும். அதாவது 'முஸ்லிமை முஸ்லிமால் முடக்கிப்போடும் ஜனநாயக அரசியல் கருவிகளின் செயல்திறன் பற்றி எழுந்துள்ள நம்பிக்கையீனமே இராணுவத்தை இறுதி வழிமுறையாக பயன்படுத்தி அதாவது 'முஸ்லிமை முஸ்லீம் இராணுவத்தால் அடக்கிப்போடும்  அரசியலை செய்யத் தூண்டியுள்ளது .





                              இப்போது முஸ்லீம் உலகில் நடப்பது சர்வ நிச்சயமாக இஸ்லாமிய கிலாபா அரசியலின் மீள்வருகைக்கான தெளிவான அறிகுறிகளே ஆகும் . இப்போது இஸ்லாத்தின் எதிரிகள் நேரடியாக களம் குதிப்பதற்கான ஆதாரங்களை உருவாக்க வேண்டும் அந்த முயற்சியிலேயே குப்பார்கள் காய் நகர்த்துகிறார்கள் .இஸ்லாமிய எழுச்சியை( 1970 களைப் போல்) வெறும் ஒரு இயக்கத்தின் வரையறைக்குள் வைத்து அடக்க முடியாது .காரணம் தனது உண்மையான அடிமைத்துவத்தை இறைவனுக்காக நிரூபிக்கும் தரத்தில் மக்கள் போராட்டத்தில் முஸ்லீம்கள் களமிறங்கி விட்டார்கள் . 



   
    இந்த குப்ரிய அநியாயக்காரர்கள் முஸ்லீம்களுக்கு  எதிராக இவர்கள் துரும்பாக பாவிக்கும் முஸ்லீம் இராணுவமே சில ,பல ஜெனரல்களோடு இஸ்லாமிய இராணுவமாய் தம்மை எதிர்க்கும் என்ற பாலர் பாடத்தை சிரியாவில் இருந்து இவர்கள் புரிந்து கொண்டாலும் . வேறு வழியற்ற நிலையில் தொடுக்கும் முகமூடி யுத்தமே இன்றைய இராணுவ பாசை .

 

No comments:

Post a Comment