Sunday, July 7, 2013

கற்ற பாடங்கள் போதும் சகோதரா.!


          நீயும் இந்த முஸ்லீம் உம்மத்தின் ஓர் அங்கம் 
உனது காயங்களுக்காக எனது கண்களும் என்னை 
அறியாமலே கண்ணீர் சிந்துகின்றன !உனது ஏமாற்றத்தில் 
நானும் அதிர்ந்து போகிறேன் .இருந்தும் இன்று நடந்தது 
கொடிய எதிரியோடு யுத்தத்தில் கண்ட விழுப்புண் அல்ல !
அவன் பொறியில் தேடிப்போய் மாட்டிய மகா தவறு !

         நீதியையும் சமத்துவத்தையும் வேறெங்கோ தேடிப்போய் 
உணர்ச்சிக் கொந்தளிப்பில் கொதித்த மக்களுக்காய் நீ 
அரியணை ஏறியபோது படிமுறை மாற்றம் வெற்றிப் 
படிக்கட்டாக உன்னால் படம் காட்டப் பட்டது ! மாற்றம் 
என்பது மாறாதது என்று கூறி 'வஹியின்' (கதயி )
திட்டவட்ட முடிவுகளிலும் உன் திருவிளையாடல் புகுந்து 
மக்கள் திருப்தியே மகேசன் திருப்தி என நீ சொன்னபோது 
'சியோனிசத்தின்' கரகோஷம் அதன் மீடியாக்களால் வானைப் பிளந்தது  !


காலத்தின் தேவை என்ற கண்கட்டு வித்தையில் இஸ்லாத்தை 
நீ குப்ரின் விருப்புக்குள் இழுத்த இழுப்புக்கு சபாஷ் போட்ட 
இந்த சாத்தானிய சக்திகள் பற்றி நீ அறியாமல் இல்லை !
இருந்தும் நீ கானல் நீர் பருக குடத்தோடு குதித்தது தான் 
எனக்கின்று புரியவில்லை ! அதிலும் அரசியல் சரணடைவை 
'ஹிக்மத்தாக ' மறுபெயர் கொடுத்தது எனக்கு கோபத்தை 
கிளப்பியது !அப்போதும் உனக்காக பிரார்த்தித்தேன் 
எதரியின் சதியை விதியாக்கிய சரித்திரம் உன்னை 
தொடராதிருக்க ஏனென்றால் நீ என் சகோதரன் .
 
                                                                  (தொடரும் ...)

No comments:

Post a Comment