Friday, July 26, 2013

'தாகூத்தியத்' சொல்லும் அரசியலில் முஸ்லிமின் வாழ்வு !


   ஒரு சித்தாந்தம் இன்னொரு சித்தாந்த ஆதிக்க தயவில் வாழ்வது சாத்தியமற்றது அப்படி வாழ்வதாக இருந்தாலும் அது தனது இயல்பான உயிரோட்டத்தை இழந்தே இருக்கும் . இஸ்லாம் ஒரு தனித்துவமான சித்தாந்தம் என்றால் குப்ரிய மேலாதிக்கத்தின் கீழ் அதன் இயல்பான வடிவத்தில் நடைமுறை காண முடியாது . 


       ஆதிக்கத்தில் இருக்கும் குப்ரிய சித்தாந்தம் இஸ்லாம் தனது நடைமுறை ஆதிக்கத்தை இழக்கும் வகையில் கடுமையான விட்டுக் கொடுப்புகளையும் ,மாற்றங்களையும் ,சிதைவுகளையும் இஸ்லாத்தின் மீது எதிர்பார்க்கும் ,அத்தோடு நிர்ப்பந்திக்கும் அதனூடாக அதன் சித்தாந்த மற்றும் வாழ்வியலின் மேலாதிக்கத்தை ஒருபக்கம் பேணிக் கொள்வதோடு ஒரு தக்கன பிழைத்தல் தொடர்பான அச்சத்தையும் இஸ்லாத்தின் மீது ஏற்படுத்தி விடும் .

            இந்த ஆபத்தான கோணத்தின் முன் முஸ்லீம்கள் தரப்பு இஸ்லாத்திற்கு வேலி போட உருவாக்கிய நியாயங்களே .'இஸ்லாத்தின் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை' என்ற கருத்தியலாகும் .மேலும் திட்டவட்டமான விடயங்களிலும் 'இஜ்திஹாத்' செய்யும் மனோபாவமும் ஆகும் .உண்மையில் இது ஒரு தெளிவான சரணடைவு அரசியலாகும் .
சூழ்நிலையை புரிந்து கொள்ளாதவரை முஸ்லீம்களாகிய எமது போராட்டங்கள் எதிரியின் வெற்றியை நிச்சயப் படுத்தும் ஒரு தவறான நடவடிக்கையாகும் . இன்னும் சற்று தெளிவாக சொன்னால் அது பின்வருமாறு இருக்கும் .

               அதாவது கடுமையான வீட்டுக்காவல் போடப்பட்ட ஒரு மனிதனை ஒத்த சமூக வாழ்வே 'செக்கியூலரிச அரசியல் ' முஸ்லீம் உம்மாவின் மீது சுமத்தியுள்ளது . இங்கு முஸ்லீம் பெயரளவில் முஸ்லிமாக வாழ்வதில் தடை இருக்காது ,மேலும் இறைவனை வழிபாடும் நியாயத்தில் கூட சிலபோது நிர்ப்பந்தங்களை அவன் சகித்தே ஆகவேண்டும் .

        அதாவது 'கடவளுக்கு உரியதை கடவுளுக்கும் அரசனுக்குரியதை அரசனுக்கும் கொடு ' எனும் அதிகார எல்லை கூட இஸ்லாம்  விடயத்தில் சிம்பிளாக மீறப்பட 'தாகூத்திய 'சர்வதிகாரம் தனது பூட்சுகளால் முஸ்லிமின்கழுத்தை மிதிப்பதும் தவிர்க்க முடியாதது . எனவே முஸ்லீம்களாகிய நாம்  இன்றைய மக்கா  தொடங்கி இலங்கையின்  மஹியங்கனை வரை ஒரே வாழ்வை சில பெயரளவு மாற்றங்களோடு சந்திப்பதும் தவிர்க்க முடியாதது .
 
               இப்போது முஸ்லீம்களாகிய எமது தேவை பலமான ஒரு அரசியல் இராஜ தந்திர இஸ்லாமிய பின் புலம் அது ஒரே 'கலீபாவை ' கொண்ட 'கிலாபா' அரசு தவிர்ந்த வேறு ஒன்றாக நிச்சயமாக இருக்க முடியாது .  
                


                             


       
  
                     

No comments:

Post a Comment