(முஸ்லீம் உம்மத்தே ! உனது பலத்தை புரிந்து கொள்ளாதவரை புழுக்கள் கூட உன்னை சிறைவைக்கும் ! புரிந்து கொண்டால் சிம்மாசனச் சிங்கங்களும் 'சல்யூட் அடிக்கும் ' ! இது ஸுன்னா காட்டித் தந்த சத்திய சுதந்திரத்தின் நிலையான செய்தி .கோழையான கோடி வருடங்கள் வீரமான ஒரு நொடிக்கு முன் அற்பமானவை ! அல்லாஹ்வின் மார்க்கம் போராட்டம் ,இரத்தம் ,சிதைவுகள் ,என்ற அம்சங்கள் இன்றி மேலோங்கும் என நினைப்பவர்கள் வெறும் கற்பனா வாதிகளே !தீமைக்கு முன் நீ மௌனமாக இருப்பதும் ஈமானின் இறுதி நிலைதான் ! அதிலும் நீ ஈமானை ஹிக்மத்தினுள் புதைத்து விட்டு குப்ரோடு குடும்பம் நடத்துவது அவமானமானது . நாளை எமக்கும் ஒரு வரலாற்றுப் பதிவு வரும் .அதில் நாம் எவ்வாறு சித்தரிக்கப் படவேண்டும் என்பதை தீர்மானிப்பது நாங்களே எனும் உண்மையை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் .)
வரலாற்றில் புதைந்து போன சில சதிகளின் இரகசியங்கள் எதேச்சையாக வெளிப்படும் போது இன்னொரு வரலாற்றுத் தவறை விடாமல் இருக்க அது ஆதாரமாக வேண்டும் . ஆனால் முஸ்லீம் உம்மத் ஏகாதிபத்திய குப்பார்களின் சதிகள் தொடர்பில் அது எதோ ஒரு வகையில் அம்பலப் படுத்தப் பட்டபோதும் தனது தவறை உணர்ந்து தன்னை திருத்திக் கொண்டதாகவோ ,சுதாரித்துக் கொண்டதாகவோ வரலாறு இல்லை ! உதுமானிய கிலாபா வீழ்த்தப்பட்டதும் முஸ்லீம் உம்மத் அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டதும் திட்டமிட்ட சதி என்பது எல்லோருக்கும் புரிந்த வரலாறு .
ஆனால் அந்த சதியின் சொந்தக்காரர்கள் உதுமானிய கிலாபத்தை தமக்குள் துண்டாடி முஸ்லீம் உம்மத்தின் உரிமைகளை இன்றுவரை ஏப்பம் விடும் வரலாற்றுக்கு ஒரு அடிப்படை ஒப்பந்தம் உண்டு. இரகசியமாக செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் எவ்வாறு கசிந்தது !? இங்கிலாந்தும் ,பிரான்சும் உதுமானிய பேரரசின் ஆதிக்கப் பகுதிகளை தமக்குள் துண்டாட கவனமாக திட்டமிட்டு காதோடு காதுவைத்து செய்த அந்த ஒப்பந்தம் என்ன ?
இன்றுவரை இங்கிலாந்தும் ,பிரான்சும் அப்படி ஒரு ஒப்பந்தம் நடைபெறவே இல்லை என அடித்துக் கூறினாலும் அந்த ஒப்பந்தப் பிரகாரமே முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் இஸ்லாமிய நிலங்கள் துண்டாடப் பட்டன . முதலாம் உலகப் போரில் உதுமானிய கிலாபாவின் முடிவை பயன்படுத்தி இந்த சதி ஒப்பந்தம் அரங்கேறியது .
SKYES AND PICOT AGREMENT எனும் பெயருடைய இந்த ஒப்பந்தம் பற்றிய தகவல் வெளிவந்ததே ஒரு சுவாரசியமான சம்பவமே . முதல் உலகப்போர் சமயத்தில் ரஷ்யாவில் ஜார் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் தமது உச்சக்கட்ட போராட்டத்தை முடுக்கி விட்டபோது ,கம்யூனிஸ்ட் வீரர்கள் அரச அமைச்சர்கள் ,அதிகாரிகளின் அலுவலகங்கள் வீடுகள் என்பவற்றை சூரையிட்டபோது எதேச்சையாக இந்த ஆவணம் கைப்பற்றப் பட்டது .
படித்துப் பார்த்தார்கள் விடயம் புரிந்தது , முஸ்லீம்களுக்கு தெரியப்படுத்த முடிவெடுத்து துருக்கிக்கு அனுப்பினார்கள் . விடயத்தை ஆராயப் புகுந்தவர் ஒரு பிரித்தானிய விசுவாசி அவர் மக்காவை சேர்ந்த செரீப் ஹுசைன் . இங்கிலாந்தை 100% நம்பிய அவர் ! அதன் நகல் ஒன்றை இங்கிலாந்து அரசுக்கு அனுப்பி விடயம் என்ன ? என்று பவ்வியமாக கேட்டார் . "Nonsense it is a figment of bolsvik's imagination " (இது ரஷ்யப் புரட்சியாளர்களின் கற்பனை ) என இங்கிலாந்து சொல்ல . "அல்ஹம்து லில்லாஹ் " என அமர்ந்து விட்டார்கள் துருக்கிய அதிகாரிகள் !
ஆனால் முதலாம் உலகப் போரின் துருக்கிய தோல்வியின் பின் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட பிரகாரமே துருக்கி கிலாபா பங்கு போடப்பட்டது என்பது மட்டும் உண்மை .பலஸ்தீனை இங்கிலாந்து எடுத்துக் கொண்டது . ALLENBY தலைமையில் 1917 டிசம்பரில் ஜெருசலம் நோக்கி ஒரு படையை இங்கிலாந்து அனுப்பியது . மறுபக்கம் பிரான்ஸ் கவ் ராட் என்ற தளபதியின் கீழ் சிரியாவை ஆக்கிரமிக்க படை அனுப்பியது . கண்மூடி திறப்பதற்குள் அதிகாரமும் மாறிப்போனது .
இப்போதுதான் சிலுவைப்போர் ஒரு முடிவுக்கு வந்துள்ளது என்ற ALLENY யின் வார்த்தைக்கு பின்னாலும் ! இங்கிலாந்தின் இன்னொரு பிரசித்தமான சதி அதே நேரத்தில் அம்பலமாகியது . பாலஸ்தீன் கிறிஸ்தவர்களுக்காக அல்ல யூதர்களுக்காக ஆக்கிரமித்து கொடுக்கப்படும் பூமி என்ற உண்மையை அது சொல்லிப்போனது . அதுதான் 'பால்பர்' பிரகடனம் . இன்று வரைக்கும் உள்ள இஸ்ரேல் ,பாலஸ்தீன் விவகாரத்தின் ஆதி மூலம் இந்த பிரகடனத்தில் இருந்தே தொடங்குகிறது . அது பற்றி இன்ஷா அல்லாஹ் இன்னொரு பதிவில் தருகிறேன் .
salam
ReplyDeletema'allah best
brother