Wednesday, November 27, 2013

அட இது தாண்டா 'இஸ்லாமிக் டிமோகிரசி ' !


மேட்டுக்குடி சுயநலத்தில் பொதுநல பிரசவமாக பிறப்பித்த அழகான பிணம்!கொள்கை என்ற பெயரில் குடிபுகுந்த கொள்ளை நோய் இந்த  'டிமோகிரசி' !செத்துப் பிறந்ததை 'ராஜாவாக்கி ' சீவிச் சிங்காரித்து அதிகார தேர் ஏற்றி 'செகியூலரிச ' பாகனோடு பார் முழுதும் பவனி விட்டார்கள் சுயநல நியாயத்தில் அந்த ஏகாதிபத்திய பகல் கொள்ளையர்கள் !


நேற்று ரோமில் என்றார்கள் கிரீசில் என்றார்கள் !
இன்று இங்கிலாந்தில் என்பார்கள் ஜெர்மனியில் என்பார்கள் !
அதோ பிரான்சில் என்பார்கள் ! இதோ இந்தியாவில் என்பார்கள் !
இருக்கும் ஆனால் இருக்கவே இருக்காது ! நடக்கும் ஆனால் நடக்கவே நடக்காது !அதுதான் மக்கள் நலன் பேசும்  டிமோகிரசி ' !



அநீதி ஆட்சி ஏற இந்த உயிர் அற்றது துணை போவதால் 
இதன் கல்லறையை சிம்மாசனம் ஆக்கி கட்டுவித்தார்கள் ஒரு மாளிகை !
அது அண்டப் புளுகனும் ,ஆகாசப் புளுகனும் 
பொறுக்கியும் புரம்போக்கும் , முடிச்சு மாறியும் 
பாராளும் பெயரில் கூடும்  அரட்டை அரங்கம் !

சாதி இன மத குல பேதம் காட்டி பெரும்பான்மை பலமேற்ற பலபேரை 
பரலோகம் அனுப்பவும் தயாரான 'லைப் டைம் மிசனுக்காய் '
பேய்களை பயிற்று விக்கும் கபாலக் கல்லூரி இந்தப்' பார்லிமென்ட் '!
நடிப்புக்கு செங்கோல் பிடிக்கும் கொடுங் கோளர்கள் இங்குதான் 
பிசாசுகளின் வாரிசுகளாக 'பிரமோசன் 'பெறுவார்கள் !

இப்படி அசுத்தங்களுக்கு கௌரவமாய் பொலிடிகல் சென்ட் 
அடித்துவிடும் கிரிமினல்களின் தாய் வீடு தான் இந்த 
'டிமோகிரசி' பிணம் சுமந்த'பார்லிமென்ட்' ! இந்தப் பிசாசுக் குகையில் 
நுழைந்து உயிரற்றதை இஸ்லாத்துக்கு எடுத்து சவப்பெட்டியில் 
இருந்ததை 'சந்தூக்குக்கு' மாற்றி நம்ம முஸ்லீம் மேதாவிகள் 
சுமந்து வருவதுதான் 'இஸ்லாமிக் டிமோகிரசி '!!! தீர்வு தருமா !?

இந்த செல்லரித்த சிந்தனையை வஹி சுமந்த உம்மத்தும் 
புல்லரித்து அரவணைப்பதா !? ஊர் ஓடின் ஒத்து ஓடுவதும் !
பாம்பு தின்னும் ஊரில் நடுத்துண்டு கேட்பதும் ! இஸ்லாம் கற்றுத் தராதது 
நம் தூதர் (ஸல் ) காட்டித் தராதது ! அப்படியானால் இது !!? 
யூத கிறித்தவர்களின் உடும்பின் பொந்து ! ஓ முஸ்லிமே !
இனியும் நீ சாணுக்கு சாண் சென்று அதில் நுழையவா பார்க்கிறாய் !!!




No comments:

Post a Comment