Tuesday, November 20, 2012

'பற்றியேட்' எதிர்கொள்ளும் 'கயுப்சாக்கள் '



         

                                                                                                                                                                                                                       
   தலைப்பை பார்த்தவுடன் சற்று குழப்பமாக இருக்கும் .ஆனால் நான் இங்கு சொல்ல வருவது தற்போதைய பாலஸ்தீன் விவகாரத்தின்  இன்னொரு பார்வைக்குள் உங்களை இட்டுச்செல்லவே . மிக மோசமான  சேதங்களையும் அழிவுகளையும் இந்த உம்மா வரலாற்று தொடராக  உலகிலும்  பாலஸ்தீன் பூமியிலும்   பெற்று வந்துள்ளது .அதன் தொடராக இன்றைய யஹூதிய நாசகாரம் உலகின் அதி நவீன கொலை கருவிகளுடன் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது . ஆனால் யஹூதியின் இந்த செயற்பாடுகளுக்கு பின்னால்....................                              மிகத் தெளிவாக திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் ஓன்று இருக்கின்றது  என்பதை  மிகச் சாதாரண வரலாற்று அரசியல் ஓட்டம் உள்ள எவராலும்  புரிந்து கொள்ள முடியும் .அந்த திட்டமிடல் பற்றிய யூகங்கள் ஒருபக்கமிருக்க நடப்பு கள நிலவரத்தை சற்று புரிந்து கொள்வது முஸ்லீம் உம்மாவின் பலம்  பலவீனத்தை அளவிட்டு சிந்திக்க வேண்டிய சரியான பாதையை காட்டித்  தரலாம் .


                                                      'கயுப்சா'  என்பது பாலஸ்தீனப் போராளிகள் யஹூதிய  ஆக்கிரமிப்பாளர்களின்பகுதியை  நோக்கி ஏவும் சிறியரக ராக்கெட்டுகள் . சாதாரணமாக ஆர் .பீ .ஜி 7 ரகத்தில்  மூன்று அல்லது நான்கு ராக்கெட்டுகளை ஒன்றாக்கிய அளவு வெடி சக்தி மிக்கது . 'பற்றியத்' என்பது யஹூதி தனது பகுதிகளில் உள்வரக் கூடிய பெரிய  மற்றும் நடுத்தர ஏவுகணைகளை வானில் வைத்தே நிர்மூலமாக்க எந்நிலையிலும் தயார் நிலையில் வைத்திருக்கக் கூடிய ஏவுகணை  எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகும் .  
                                                                                                                                       
                  களத்தின் வடிவம்  உங்கள்  கண் முன் விரிகின்றதா . களத்தை திட்டமிட்டு திறந்தது யஹூதி ! எதிர்  தரப்பின் FIRE POWER பற்றி எந்த வித  கணிப்பீடுகளும் இல்லாமல் இந்த யூதன் போராட துணிந்திருக்க மாட்டன் !!  ஆகவே இராணுவ  ரீதியில் முஸ்லீம்களின்  எதிரி தற்காப்பு நிலை தாண்டிய தாக்குதல் நிலைக்குள்  இருக்க முஸ்லீம்கள்  தாக்குதல் நிலை  இழந்த தற்காப்பு  நிலைக்குள்ளும்  தான் இருக்கின்றனர் . அப்படியானால் திறக்கப்  பட்ட களம் ஒரு சியோனிச ஹோலிவூட்  படம் !  ஆனால் அதில் முஸ்லீம்களின் அழிவு மட்டும் நிஜம் ! 
              
        
         
          அப்படியானால் அணல் பறக்கும் இந்தக் களத்தின் பின்னால் மறைமுகமாக யூதனால்  சமாதி கட்டப் பட  தீர்மானித்திருக்கும்  இன்னொரு நிர்ணயம் எது !? எதோ ஒரு  விடயத்தை நாங்கள்  மறந்தே போய்விட்டோம்   ஆம் அது  எங்கள் சிரியா !!!??                                                                                
       
                           


 
                 

No comments:

Post a Comment