Thursday, November 8, 2012

இது தான் சியோனிசம் ....


   
     கிழக்கு ஜெரூசலம் உள்ளிட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப்  பிரதேசங்களில் புதிதாக 1213 குடியிருப்புக்களை அமைக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் புதிதாக அமைக்கவுள்ள 1213 குடியிருப்புக்களில்  609 குடியிருப்புக்கள் கிழக்கு ஜெரூசலம் அருகிலுள்ள எரக்ட்  பகுதியிலும் 606 குடியிருப்புக்கள் பிஸ்கட் சீ பகுதியிலும் 
நிர்மாணிக்கப்படவுள்ளதோடு மேலதிகமான 72 குடியிருப்புக்களும் மேற்குக் கரையில் 
நிர்மாணிக்கப்படவுள்ளன.


ஜெரூசலம் பகுதியில் ஏற்கனவே நிர்மாண வேலைகள் சில ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இஸ்ரேலின் குறித்த சட்டவிரோத குடியிருப்புத் திட்டமானது மத்திய கிழக்கு அமைதி பேச்சுவார்த்தைகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என அவதானிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.


இதனிடையே இஸ்ரேலின் குறித்த குடியிருப்புத்திட்டத்தை  பலஸ்தீன்  ஒரு போதும் 
அங்கீகரிக்காது என பலஸ்தீன நிர்வாகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.1967 ஆம் ஆண்டு இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப் பட்ட பகுதிகளில் இதுவரை சுமார் 500000 க்கும் 
அதிகமான சட்டவிரோத குடியேற்றங்கள் நிறுவப்பட்டுள்ளதாக சர்வதேசமும் ஐ.நா.வும் 
தெரிவிக்கின்றன.



 ஓ  முஸ்லீம் உம்மாவே !! இன்னும் யூ .என்  இடம் சொல்யூசன் கேட்கும் உன் தலைவர்களை யார் ? என புரிந்து கொள்ள முடியவில்லையா ?

 விற்கப்பட்ட இந்த உம்மத்தின் உணர்வுகள் மீது 
சாத்தானிய சாகவாசத்தில் கூத்தாடும் இஸ்லாமிய பெயர் தாங்கி கூலிப்படைகள் தான் இவர்கள் என்பதை புரிந்து கொள் . 








 


 




No comments:

Post a Comment