Saturday, November 17, 2012

போர் இன்னும் ஓயவில்லை ...


  
   காஸா மீது இஸ்ரேல் ஆரம்பித்துள்ள தாக்குதல்களுக்கும் தமது இராணுவப் பிரிவின் தலைவர் அஹ்மத் ஜபாரியின் படுகொலைக்கும் தகுந்த பதிலடி வழங்கப்படும் என ஹமாஸ் அறிவித்துள்ளது. ஹமாஸ் இயக்கத்தின் பேச்சாளர் ஒஸாமா ஹம்தான் அல்ஜெஸீரா தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
"இஸ்ரேல் காஸாவின் உள்ளுர் மற்றும் அரசியல் தலைவர்களை இலக்கு வைத்துள்ளது. இது ஒரு நீண்ட தாக்குதல் திட்டத்துக்கான ஆரம்பம் என்றே நாம் கருதுகிறோம்.
 
2008-2009 காஸா போரில் அஹ்மத் ஜபாரி முக்கிய பங்கு வகித்தார் என்பதையும் 2006 இல் இஸ்ரேலிய சிப்பாய் கிலாட் ஷாலித்தின் கடத்தலின் பின்னணியில் இவரே இருந்தார் என்பதையும் அனைவரும் அறிவர். அதனால்தான் இஸ்ரேல் தனது தாக்குதலை ஜபாரியிலிருந்து தொடங்கியிருக்கிறது.
 
இதற்கு நாம் தக்க பதிலடி கொடுப்போம். இந்தப் போராட்டம் மிக நீண்டது என்பதையும் அதில் பாரிய தியாகங்களைச் செய்ய வேண்டி வரும் என்பதையும் நாம் நன்கு விளங்கியிருக்கிறோம்" எனவும் ஒஸாமா ஹம்தான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

                                                                                   இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் இன்று புதன்கிழமை ஷஹீதாக்கப்பட்ட அஹ்மத் ஜபாரி ஹமாஸ் இயக்கத்தின் இராணுவப் பிரிவான இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையணியின் கட்டளைத் தளபதியும் ஹமாஸ் இயக்கத்தின் உயர் நிலைத் தலைவர்களுள் ஒருவருமாவார்.
பதாஹ் இயக்கத்தில் இணைந்ததன் மூலம் தனது போராட்ட வாழ்க்கையை ஆரம்பித்த இவர் 13 வருடங்கள் இஸ்ரேலில் சிறைவாசம் அனுபவித்தார். தான் சிறையிலிருந்த காலப்பகுதியில் ஹமாஸ் இயக்க முக்கியஸ்தர்களுடன் ஏற்பட்ட நட்பினால் பதாஹிலிருந்து விலகி ஹமாஸில் இணைந்து கொண்டார்.
 
இஸ்ரேல் இதற்கு முன்னர் நான்கு தடவைகள் ஜபாரியை கொலை செய்ய முயற்சி செய்துள்ளது. 2004 ஆம் ஆண்ட மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில் ஜபாரியின் மூத்த மகன், சகோதரர் மற்றும் மூன்று உறவினர்கள் ஷஹீதாக்கப்பட்டனர். இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையணியை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய பல்வேறு தாக்குதல்களிலிருந்தும் இவர் உயிர் தப்பியுள்ளார்.
 
அபூ முஹம்மத் என்று அழைக்கப்படும் இவர் காஸாவின் கிழக்கு நகரமான ஷெஜையாவில் 1960 ஆம் ஆண்டு பிறந்தார்.
 
2006 ஆம் ஆண்டு ஹமாஸ் இராணுவப் பிரிவின் பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்ட இவர், 2007 ஆம் ஆண்டு பதாஹ் அமைப்பிடமிருந்து காஸாவை மீட்பதற்கான போராட்டத்தை தலைமையேற்று வழிநடத்தியவராவார். மட்டுமன்றி ஹமாஸின் இராணுவ வலையமைப்பை ஈரான், சூடான், லெபனான் போன்ற நாடுகளுக்கு விஸ்தரிப்பதிலும் முக்கிய பங்காற்றியவராவார்.
 
இஸ்ரேலிய படைச் சிப்பாய் கிலாத் ஷாலித்தைக் கைது செய்து ஐந்து வருடங்கள் தடுத்துவைத்த பிற்பாடு 2011 இல் அவரை விடுத்து 1027 பலஸ்தீன கைதிகளை விடுவித்த பெருமையும் அஹ்மத் ஜபாரியையே சாரும்.
 
நன்றி: அல்ஜெஸீரா


2வது தடவையாக அல்பஜ்ர் டெல்அவிவை தாக்கியது


இங்கு நீங்கள் காண்பது இஸ்ரேலிய உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்டர் ஹமாஸின் ஏவுகணைக்குப் பயந்து தனது அலுவலகத்திலிருந்து விரண்டு ஓடும் காட்சி

காஸாவிலுள்ள ஹமாஸின் அமைச்சரவைக் கட்டிடம் தாக்கப்பட்டதையடுத்து, ஹமாஸ் இயக்கம் இரண்டாவது தடவையாக இஸ்ரேலிய தலைநகர் டெல்அவிவை நோக்கி அல் பஜ்ர் ஏவுகணையை அனுப்பியிருக்கிறது.

அல் பஜ்ர் 5 ஏவுகணை டெல்அவிவிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அண்மையில் விழுந்து வெடித்துள்ளதாக ஊர்ஜிதமான செய்திகள் வெளியாகி யுள்ளன.

ஆகாயத்தில் சிதறிய இஸ்ரேலிய F16 விமானம் - கஸ்ஸாம் படையணி சாதனை!


பலஸ்தீன் போராளிகளின் இராணுவ அமைப்பான் அல் கஸ்ஸாம் படையணி இஸ்ரேலிய போர் விமானமான  F16 ஐ  வீழ்த்தியிருக்கிறது.
                                                                  F16 ரக விமானம்

காஸாவின் வட பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றதாக Middle East Monitor இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஹமாஸ் இயக்கத்தால் ஊர்ஜிதமாகியிருக்கும் இந்தச் செய்தி, முதல் தடவையாக இஸ்ரேலிய விமானத்தை தாக்கும் வல்லமை பலஸ்தீன  போராளிகளிடம் இருப்பது ஊர்ஜிதமாகியிருக்கிறது.

போராளிகள் மீது தாக்குதல் நடாத்துவதாகக் கூறிக்கொண்டு பலஸ்தீன் சிவிலியன் நிலைகள் மீது தாக்குதல் தொடுத்து சிறுவர்களையும், பெண்களையும் கொடுரமாக கொலை செய்து விட்டு ஓடிமறையும் இஸ்ரேலிய விமானங்கள் இனி தப்பிப் போக முடியாது.

பொறுத்திருந்து பார்ப்போம்.

தொட்டு விடும் தூரத்தில் டெல்அவிவ்


தொட்டு விடும் தூரத்தில்
டெல்அவிவ்
ஆவலாய் பறக்கிறது “ அல் பஜ்ர் 5 ”

இஸ்ரேலின் ஆளில்லா விமானத்தை ஹமாஸ் தரையிறக்கியது.


பலஸ்தீன போராட்ட இயக்கமான ஹமாஸின்  இராணுவ பிரிவு இஸ்ஸத்தீன்  கஸ்ஸாம் படையணி காசா மீது ஏவப்பட்ட இஸ்ரேலின் ஆளில்லா உளவு விமானத்தை வெற்றிகரமாக தரை இறக்கியிருக்கிறது.

ஹமாஸ் இயக்கம் இது தொடர்பான வீடியோ ஒன்றை ஊடகங்களுக்கு வழங்கியிருப்பதாகவும் , அந்த இஸ்ரேலிய உளவு விமானம்  "ஸ்கைலைட் பி" (“Skylight B”) என்ற பெயரிடப்பட்ட ஒன்று எனவும் அறிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலின் உளவு விமானத்தை தம் கைவசம் சிக்க வைப்பதற்கு ஹமாஸ் இயக்கம் பெற்றிருக்கின்ற தொழில் நுட்ப வளர்ச்சி இஸ்ரேலுக்கு பெரும் சவாலாக அமைந்திருக்கிறது.

பலஸ்தீன் போராட்ட இயக்கங்கள் கடந்த வியாழக்கிழமை இஸ்ரேலின் தலை நகர் டெல்அவிவை நோக்கி அனுப்பிய ஈரானிய தயாரிப்பான அல் பஜ்ர் 5 என்ற ஏவுகணை,  இஸ்ரேலின் தலைநகரம் பலஸ்தீன் போராளிகளால் தொட்டு விடும் தூரத்தில் தான் இருக்கிறது என்ற அபாய சமிக்கையை  இஸ்ரேலுக்கு உணர்த்தியிருக்கிறது.

1991ம் ஆண்டுக்குப்பிறகு முதல் தடவையாக இஸ்ரேலின் தலைநகரம் இப்போது  தாக்குதலுக்கு உட்பட்டிருக்கிறது. 1991ம் ஆண்டு வளைகுடா போரின் போது அன்றைய  ஈராக்கிய அதிபர் சதாம் ஹுஸைன் டெல் அவிவ் மீது ஏவுகணை தாக்குதல் ஒன்றைத் தொடுத்து இஸ்ரேலை அதிர வைத்திருந்தார் என்பது  இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஹமாஸின் இராணுவப் பிரிவு தளபதி அஹமத் அல் ஜஃபரி அவர்களின் படுகொலைக்கு பழிவாங்கும் படலத்தை போராளிகள் ஆரம்பித்து இருக்கினறனர்.

இஸ்ரேல் தனது  நரகத்தின் வாயிலை தானே திறந்துக்கொண்டிருப்பதாக போராளிக் குழுக்கள் இஸ்ரேலை எச்சரித்திருக்கின்றன.

No comments:

Post a Comment