Friday, May 24, 2013

நேட்டோவின் பெயரில் 'யகூதி நசாரா' கூட்டு ...



(Saturday, December 29, 2012 இல் வெளியிட்ட பதிவு கீழ் குறிப்பிடும் அனுமானங்களில் பலது நடந்துள்ள இன்றைய சூழ்நிலையில் காலத்தின் தேவையாக மறு பதிப்பு செய்கிறேன். )

இந்த முஸ்லீம் உம்மத் மிக நீண்ட காலம் தனக்கு முன் எதிர்ப்படும் தடைகளை முற்றுப்புள்ளியாக்கி எஞ்சிய மார்க்கத்தோடு (தனது அடயாளப் படுத்தலோடு )திருப்தி காணுவது; எனும் முடிவுரையிலேயே தனது போராட்ட சிந்தனைகளை மழுங்கடித்து வாழ்ந்து வந்தது . ஆனால் தடைகளை தாண்டுவது என்பது தான் இலட்சிய வாத போராட்டத்தின் உண்மையான வடிவம் ஆகும் . இங்கு இழப்புகள் இறப்புகள் , ஒரு விடயமே அல்ல . கொள்கை கொச்சைப் படுத்தப்படக் கூடாது . இலட்சியம் கோமா நிலைக்கு கொண்டு செல்லப் பட்டு தகுதியற்றதாக மாற்றப்படக் கூடாது . ஆனால் இதுவரை நடந்தது இந்த நாசகாரம் தான் . 

இந்த உம்மத்தின் சிந்தனை தெளிவின்மையும் , தலைமைகளின் தவறான வழி நடாத்தலும் இஸ்லாத்தின் நடைமுறை சாத்தியம் பற்றி' குப்பார்களின் ' தடைகளுக்கு முன் ,' குப்பார்களின் ' சதிகளுக்கு முன் அதில் ஒரு அங்கமாக நின்று பிரதிபளிப்பது தான் இஸ்லாத்தின் போராட்டம் என தவறான சாயம் பூசப்பட்டது . விளைவு முஸ்லிமிற்கே 'வஹி' வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியது .

வாழ்க்கையே' வஹியாக்க ' வேண்டிய சமூகம் காலத்தையும் ,சூழ்நிலையையும் கூட்டுச் சேர்த்து ஒரு இணைவைப்பை இபாதத் ஆக்கியது . அதாவது வஹி மாற்ற வேண்டிய காலமும் சூழ்நிலையும் வஹியையே காலாவதி ஆக்கியது. இந்த தவறை சுட்டிக் காட்டுபவர்களிடம் " நீங்கள் சித்தாந்த வாதிகள் உங்களது போதனைகள் சாத்தியமற்றது " என கூறவும் பட்டது . (ஆகக் கொடுமையானது 'வஹியின்' முன்னுரிமை தொடர்பில் முஸ்லீம்களின் வாக்குப் பலத்தை கேட்கத் தொடங்கியதே . )

ஆனால் 'அல்ஹம்துலில்லாஹ் ' இந்த கசப்பான நிலை மாறிக்கொண்டே வருகின்றது .இஸ்லாத்தின் முன்னுரிமை தொடர்பில் முஸ்லீம்கள் தெளிவோடு இருக்கிறார்கள் என்பதை நடப்பு நிலவரங்கள் தெளிவு படுத்துகின்றன . எதிரி ஜனநாயக மாயையில் வாக்குப் பலம் மூலம் கேள்விகேட்டாலும் " குப்ரே" வெளியேறு என தெளிவாகவே பதில் அளிக்கப் பட்டு விட்டது ! கொடுமையான கொலைக்கருவி அச்சுறுத்தல் மூலம் முஸ்லீம்களை வாய்ப்பூட்டு போட்டு அடக்கி ஆளலாம் என்ற வழமையான பாணியும் மக்கள் போராட்டத்தின் முன் மண்டியிடத் தொடங்கி விட்டது ! 

உலகின் ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாம் தன்னை ஆளவேண்டும் எனும் இயல்பான மனோபாவத்தை நோக்கி திரும்பத் தொடங்கி விட்டார்கள் . ' மத்திய கிழக்கின் நஜீசான யூத ஆக்கிரமிப்புப் பகுதிகள் அதிகமாக அஞ்சத் தொடங்கி விட்டன . அதன் பிரதி விளைவாக 'சிரிய' எல்லைகளை நோக்கி யூதப் படை மற்றும் ஏராளமான ஆயுதங்கள் குவிக்கப் படுகின்றன .

மேலும் NATO அங்கத்துவ நாடு என்ற அந்தஸ்தில் இருந்து மிக அவசரமாக 'இஸ்ரேல்' (எனும் கள்ளப் பிறப்பு ) தாக்குதல்களில் பங்கு கொள்ளும் அந்தஸ்திற்கு உயர்த்தும் தரத்தை வழங்குதல் எனும் உத்தியோக பூர்வ அறிவிப்பை வெளியிடவும் அமேரிக்கா தயாராகி வருகின்றது . இதுவரை கொடுக்கப்படாது இருந்த இந்த தரம் இன்று ஏன் அவசியப் பட்டுள்ளது ? காரணம் இதுதான் அமெரிக்க மதச் சார்பின்மையோடு கூடிய ஜனநாயக சதிவலை எனும் சர்வதேச பாதுகாப்பு வேலி மத்திய கிழக்கில் பலமிழந்து வருகின்றது .

இஸ்லாத்தின் எழுச்சியின் அடுத்த கட்டம் இஸ்ரேலின் மரணம் தான் என்பது தெளிவான செய்தி .எனவே ஒரு மிகப் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை 'யூதக் கூட்டோடு 'சிரியாவிட்குள்' உட் புகுத்த வேண்டிய அவசியம் NATO விற்கு இருக்கின்றது . அதாவது இது அவர்களின் 'கரணம் தப்பினால் மரணம் 'எனும் இறுதிக்கட்ட முஸ்தீபு . அதாவது பசர் அல் அசாத் (எனும் பிர் அவ்னின் வாரிசு ) வீழ்த்தப் படுதல் என்பது இஸ்ரேலின் அழிவிற்கான அத்திவாரமே . அதற்கு முன் நாம் முந்த வேண்டும் என்பதுதான் NATO வின் நகர்வு .

No comments:

Post a Comment