Thursday, May 16, 2013

தேசம் ,தேசியம் முஸ்லீம்களை எந்த நிலையில் வைத்துள்ளது !?


                                           பேரம் பேசுதலுக்கான சூழ்நிலை நியாயங்களை உருவாக்குவது , அந்த உருவாக்கத்தின் ஊடாக யதார்த்தம் மறந்த ஒரு வாழ்வியலில் எதிர் தரப்பை சிக்கவைப்பது என்பதுதான் முதலாளித்துவ சிந்தனா வாதத்தின் அடிப்படை அரசியல் சிந்தனை .

இன்னோர் வகையில் இதை தெளிவுபடுத்த ஒரு சிறந்த உதாரணம் 'இஸ்ரேல் ' ஆகும் . ஒரு அநியாயமான ஆக்கிரமிப்பாக 'முஸ்லீம் உம்மா' தேசியம் எனும் சூழ்நிலை நியாயங்களை சரிகான வைக்கப் பட்டதன் ஊடாக இந்த 'இஸ்ரேலையும்' ஒரு (விரும்பத் தகாத) தேசமாக தானும் அங்கீகரிக்க வைக்கப் பட்டது . அரசியல் நுணுக்கமான இந்த கருத்தியல் பேரம் பேசல்  முரண் பாடான ஒரு உணர்வலைகளை கொண்ட ஒரு  சமரசமாகும் .
                  இஸ்ரேல் ஒரு தேசமாகி அங்கும் 'மஸ்ஜித்கள் ' ! அந்த அரசியலை அங்கீகரித்த முஸ்லீம்கள் ! என ஒரு தேசிய சூழ்நிலை ஒரு புறம் , இன்னொரு புறம் தேசம் எனும் 'இறைமைக்குள் ' இஸ்ரேலை வைத்து கண்டிக்கவும் ,தண்டிக்கவும் துடிக்கும் இன்றைய முஸ்லீம் உலகு ! நகைப்புக்கு இடமான இந்த நாடக அரசியலில் ஏமாளி + கோமாளிப் பாத்திரத்தில் தன்னை அறியாமல் முஸ்லீம் நடிக்க வைக்கப் படுகிறான் . 
 
அரபி ,அஜமி காரணம் கூறி உதுமானிய கிலாபத்தில் இருந்து உடைத்தெடுத்து அரேபியம் மன்னரிசமாக மாறிய போது அவர்களுக்கு கூஜா தூக்கும் ' முல்லாக்கள் + சீடர்களுக்கு அரசியல் என்பது (அந்தப்புர சமாச்சாரங்களை  மட்டுமே கொண்ட) வெறும் பராக் ,பராக் என மாறித்தான் போனது ! கிலாபா பற்றி பேசுவோர் 'சைத்தான்களாக ' இவர்களால்  சித்தரிக்க வைக்கப் பட்டார்கள் . 'யகூதியோடு' நட்புறவாடி , நசாராவோடு கூட்டுக் குடும்பம் நடத்தும் 'கிங்குகள் ' நிணைக்கும் , விரும்பும் 'ரேஞ்சுக்குள்' வஹிக்கு விளக்கம் கொடுக்கும் புரோகிதக் கும்பலாக பலர் 'புறமோசன் ' பெற்றார்கள் .


                  
(இவர்களுக்கு இஸ்ரேலின் முஸ்லீம்கள் மீதான நரவேட்டையை விட , சவூதி மன்னன் அகற்றிய நான்கு முசல்லாக்கள் விடயம்' வெரி இம்போர்ட் ' மத்ஹபு வாதத்தை உடைத்தானாம் சவூதி மன்னன் !!) 'சாபிரா   , சாதிலா முதல் பாலஸ்தீனில் இன்று வரை  தினம்  தினம் கொல்லப்படும் , துன்புறுத்தப் படும் , அவமானப் படுத்தப் படும் முஸ்லீம்கள் விடயத்தில் நிவாரணப் பிச்சையை விட அதிகமாக என்ன கொடுத்தார்கள்  இந்த 'மல்டி மில்லியன் கிங்குகள் '!!


     முதல் கிப்லா எக்கேடு கெடட்டும் ! எமது சமஸ்தானம் ,தேசியம் டெவலப்' செய்யப்பட வேண்டும் என்ற சிந்தனையிலேயே 'கஆபாவை ' தினம் தினம் உடைக்கிறார்கள்  இந்த மன்னரிச சுயநலவாதிகள் ! எவ்வாறு என்றால் முஸ்லீம்களை அவமானப் படுத்துபவர்களோடு (யகூதி ,நசாராவோடு ) பகிரங்க  கூட்டாளிகளாக இவர்களே இருக்கிறார்கள் . தேசம் ,தேசியம் என்ற மனப்பாங்கு முஸ்லீம்களை எங்கே கொண்டு வைத்துள்ளது ! சிந்திக்க வேண்டிய விடயம்தான் . 







                                                   

No comments:

Post a Comment