Saturday, February 22, 2014

நிர்ப்பந்தத்துக்கும் சரணடைவு அழைப்புக்கும் மத்தியில் எனது போராட்டங்கள் !!

அவ நம்பிக்கை ஆக்கப்பட்டுள்ளது நம்பிக்கை !
சமத்துவம் சகவாழ்வு என்ற போர்வையில் நான் 
சடத்துவ வெப்பத்தில் குடித்தனம் நடத்த அழைக்கப் படுகிறேன் !
இஸ்லாத்தின் இலட்சியங்களை ஏட்டுச் சுரக்காய் ஆக்கிவிட்டு 
அலட்சிய அதிகாரத்துக்குள் அடிமைப்படுவதில் சத்தியம் உள்ளதாம் !
உளரும்' உலமாத்' தனங்களில் 'பிக்ஹுல் அகல்லியாத் ' எனும் 
தன்மான விற்பனை நிலையத்தின் இலவச விளம்பரங்கள் வெளியிடப் படுகின்றன !கோழையாக வாழ்வதில் கொள்கை சிறக்குமாம் !


காலங்கள் மாறிய  கேவலக் காட்சிகள் மாறுமுன்பே 
ஒரு பான்மை தந்த ஓயாத வஞ்சனைகள் ஆறும் முன்பே 
மகா பான்மை மறுபடியும் பெற்றோலை ஊற்றியது !
மாபாவிகள் மத வாத தீயை பற்ற வைத்தனர் ! அதற்காக 
மாநபி பாதையை ஒழித்து வைத்து இங்கு நாம் 
புத்தனுக்கு பிடித்ததாய் வஹியை 'ரீ வேர்சன் ' செய்வதா !?
புத்தி ஜீவிகள் அப்படித்தான் சொல்கிறார்கள் !!

என்னை எரித்து அந்த அழிவு வெப்பத்தில் 
எதிரிகள் அரசியல் குளிர் காய எத்தனிக்கிறார்கள் !
பற்றுவது நான் பற்று மிக்க இலட்சிய நெருப்பாய் சுடர்விட்டு 
சுட்டெரிப்பேன் அசத்திய அசுத்தங்களை என்ற வரலாற்று வரிகளை 
தெளிவோடு சொல்லி நிற்கிறேன் ! 
அசிங்கமான நிர்ப்பந்த நியாயங்களோடு நான் 
சிங்கத்திடம் சுஜூது செய்ய அழைக்கும் 
அபூர்வ தாயிகளிடம் சொல்ல விரும்புவது ஒன்றுதான் .
எந்நிலையிலும் நான் ஒரு முஸ்லிம் !!!

No comments:

Post a Comment